About Me

2012/07/02

சிறகறுந்து !


நள்ளிரவின் நிசப்தத்தில்
ஊரே மௌனித்துக் கிடக்க 

என்னுள் மட்டும் ஏதோவொன்று
உயிர் பிசைகின்றது!

நெஞ்சுக்குள் அருட்டும் அருவமாய்
கண் வழியிறங்கியது பார்வை பிடுங்க..

ஐயகோ 

சிறகுடைந்து வீழ்கின்றேன் அனலில்
உனையிழந்த வெறுமையில்!

அன்றோர் நாள் 
எனக்காய் முகிழ்த்த - உன்

ரகஸியக் கவிதை மட்டும்
என்னுள் வீழ்ந்து கிடக்க 
நீயோ 
தொலைதூரம் போகின்றாய்
என்னுள் வலி தந்தபடி!


விழியிறுக்கின்றேன் உனை மறக்க
நீயோ
வீம்பாய் முறைக்கின்றாய் என்னுள்!

உன் மௌன யுத்த உரப்பில்
என் மனம் எரிந்து போக 

வெற்றிடபூமிக்குள் சுவாச மறுத்து
சிறகுடைந்து போகின்றேன்!

எங்கே சுற்றினாலும்
உள்ளம் பற்றும் காதலில்

ஊமைவலி கண்டு 
உயிரறுந்து போகின்றேன் !

உன் வேரறுப்பில் 
உலகம் வெறுத்தே நானும் 

பயணிக்கின்றேன் மயானம் தேடி
இனியுன் காலடிசேராமலே!

என் சமாதியில் வீழ்ந்து கிடக்கும் 
உனக்கான கவிதைகளை மட்டும்

நட்டிவிடுவுன் தேசத்தில் 
நாளை என் கவிதைகளாவது உயிர்க்கட்டும்!


ஜன்ஸி கபூர் 







2 comments:

  1. Uyir arukkum vali.... Aanaal itharkaana bathilai yaarum avalavu seekiram solli vida mudiyaathu... Iraivan padaippil nesithal oru puthirae

    ReplyDelete
    Replies
    1. பரிவான உறவுகள்
      புதிர் தரும் நறவுகள்......!

      நன்றி காயத்திரி

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!