About Me

2012/09/09

நீ



எங்கோ தொலைபுள்ளியில் நீ!

இருந்துமுன்.....................!!

நழுவுமுன் குறும்புகளும்
மானசீக நேசிப்புக்களும்
சமுத்திரம் கடந்து - என்
கன்னம் கிள்ளுகின்றன ஆர்வமாய்!

என்னை சேகரிப்பதற்காய்
உன் பார்வைகளை மட்டும் தூதனுப்பு!
காத்திருப்பேனுன்
சிந்துவெளியோரம்!

என்னைக் கடந்துசெல்லுமுன்
காற்றில் கூட - உன்
நலவிசாரிப்புக்களே
விசிறப்படுகின்றன இதமாய்!

இதயத்தின் ...........
ஸ்பரிசிப்புக்களிலெல்லாமுன்
விரல்ரேகைகள் கழன்று
முத்தமிடுகின்றன மெலிதாய்
என்னை!

விழுந்து கிடக்குமென்
நிழல்களில்- உனை
உருத்துலக்கிப் பதியமிடுகின்றேன்
இனிவரும் பொழுதுகளில் -
என்
பாதையோரங்களிலுன்னையே
வேலியாக்கிக் கொள்ள!

நம்மிலிருந்து
நழுவியோடும் நிமிடங்களில்
தழுவி நிற்கும் ஞாபகங்களாய்..........
உரசி நிற்கின்றாய்
பரிவை உயிரில் கோர்த்து!

நீயென்னருகில்
தரித்து நிற்கும் தருணங்களில்..........
அவிழ்த்து விடுகின்றாய் தவிப்புக்களை !
தலை கவிழ்த்து நானுமதை
யுறிஞ்சிக் கொள்வதற்கே!

இரவின் சந்தத்தில்...........
இம்சைப்படுமென் கனவுகளில்
வெட்கம் தொலைத்த வெருளியாய்
பக்கமணைக்கின்றாய் ரகஸியமாய்
சித்தமும் கலைக்கின்றாய்!

நீ...................! -  என் 
நீண்டகாலத் தேடல்!!
மிரண்டோடுமென் வாலிபத்தின்
சில்மிஷமாய்
சிணுங்குகின்றாய் காதலில்!

ஜன்ஸி கபூர் 




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!