About Me

2012/09/07

திரும்பத் திரும்ப பார்த்து.............




விழியோரம் கசியும் அன்பே காதலாகி இதயத்தில் படரும் போது, மனசும் மகிழ்வுக்குள் நிரம்பிக் கொள்கின்றது.

காதல் அழகானது....அதன் அன்போ ரம்மியமானது! அதனால்தான் அது சலிப்பில்லாமல் தன்னுயிரைத் திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டுகின்றது. அவள் மூச்சுக்காற்றில் அவன் சுவாசமாய், அவனுயுரில் அவள் உணர்வாய் நினைவுகளைப் பரிமாறத் தூண்டுகின்றது காதல்!

அவனது விழி வருடலில், அவள் பெறும் சுகங்கள் கனவாகி அந்த இரவினில் முகிழ்க்கையில், காதல் கொண்ட  மனங்களோ இறக்கை கட்டி வானமதில் கூடு கட்டி நிலாவிலே உலாவத் துடிக்கின்றது............

காதல் ஓர் உணர்ச்சிப் பிழம்பு..அதனால்தான் இருதயத்துடிப்போட்டங்கள் கூட சடுதியாகி, மனங்களில் மண்றாடிக் கிடக்கின்றன.......

இவ் அவனி கூட அன்பின் பிணைப்பிலடங்கிக் கிடப்பதால்,இயற்கை கூட காதலை வளர்த்து விடுகின்றது.....அவள் சேலை  காற்றிலே பறந்து மேகத்தில் சென்று வானவில்லாகி அவனையே வளைத்துப் போடுகின்றது. இந்தப் பரவசமும் ரசிப்பும் காதலில் மட்டுமே சாத்தியம்.......

காதலுக்குள் இத்தனை இனிமையே, அவன் இமைகள் மூடும் போது , அவளுருவம் மறைந்து போக, அத்துக்கம் தாளாமல் மருத்துவம் தேடும் இந்த வேட்கையும், பிரிவை வெறுக்கும் மனமும் காதலில் மட்டுமே உள்ளது என்பது பொய்யில்லைதான்..........

இறப்பு, பிறப்பு போல வாழ்வில் ஒருமுறை மாத்திரம் தோன்றும் இந்தப் பிணைப்பின் இறுக்கமுணர்த்தும் இந்தப் பாடலின் வரிகளும், இசையும் என்னையும் வளைத்துப் போட்டதில் ஆச்சரியமில்லைதான்..........

என் ரசிப்பில் நிறைந்திருந்த குனால்- மொனல், தங்கள் சொந்த வாழ்வுப் போராட்டங்களால் தம்முயிரை நீத்து, இப்பொழுது ஓர் வருடம் ஓர்நொடியாய் பறந்தாலும் கூட, இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், அதன் காதல் சுவை குன்றாமல் எம் மனதையும் கட்டிப் போட்டிழுக்கின்றதே!

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்திடு பாடலை ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!