About Me

2012/10/10

உன்னோடு ..........


சிறகு நெய்தேன் - உன்
உணர்வோடு பறந்து வர !

உன்......
காதல் விரல்களில்
ரேகையாகிப் படர்ந்தேன் - நீ
செல்லும் பாதைகளில்
விழி விரித்துக் கிடக்க!

உன்..........
பெயர் உச்சரித்தே
பழக்கப்பட்ட என்னுதடுகளின்று
உரிமையோடு நடைபயில்கின்றன - உன்
ஸ்நேக வெளிகளில் உல்லாசமாய்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!