About Me

2012/10/10

விரல் தொடும் தூறல்


கோடை விரண்டோட
கொடை வள்ளலாய் - சிறு தூறல்
நடைபயில்கின்றது
என் மண்வெளியில்!

படையாய் இறங்கு மின்னலும்
குடைந்தெடுக்கும் இடியும்..........
தடையின்றி யெமக்குச் சொந்தமாக
விடை தர மனமின்றியே

கரைந்து வழிகின்றது மண்வாசம் - சுவாசம்
நிறைத்தே சுகமாய்!


-Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!