About Me

2012/10/11

இமைக்க மறுத்த விழிகள்


சூரிய தீப்பந்தமொன்று
மெதுவாய் அணைந்த பிரமை
எனக்குள்!

வெட்ட வெளிகளின் பசுமையில்......
ஒட்டிக்கொண்டது வெம்மையின்
பிசுபிசுப்பொன்று!

என் பேனாக்கள்
பயணித்த வரம்போரங்களெல்லாம்.........
முள்வேலியாய்
ஈரம்சொட்டுதுங்கள் மௌன யாகம் !                          

வண்ணச்சிட்டுக்களுக்காய்
பா விசைத்து ...........
களிப்பால் பறக்க வைத்த வுங்கள்
சிறகுகளில்  யாரிட்டது மரணச்சிலுவை !

எழுத்தணியில்
அழுத்தமாய் முற்போக்கு நுழைத்து.........
இலக்கிய வேள்விக்குள்
இரசனையோடு யதார்த்தம் நுழைத்த
நீங்களின்று..............
இரகஸியமாய் சுவாசமறுத்தே
மீளாத்துயிலுக்குள் நிரம்பிக் கொண்டீர்கள்!

வெள்ளிச்சிறகடித்த வுங்கள்
வெண்புறாவோ..............
இன்று
சுதந்திரமாய் தேசம் தொடுகையில்.........
தொலைதூரத்தி லும் வுரு துறந்து
ஏதுமறியாத குழந்தையாய் நீங்கள்!

தினகரன்
புதுப்புனலில் தடம் நெய்து - எனை
புதுவுலகில்   நிலைநாட்டிய
உங்கள் ........
பேனாக்களின் ஈரலிப்பினை
உலர்த்தியது யாரோ!

எனை வார்த்த வுங்கள்
இலக்கியச்சாளரம்
சாய்ந்துதான் போனாலும் - என்
விழிச்சாரளத்தின்
விம்ப வெளியெங்கும்..........
உலா வருகின்றதே - உங்கள்
ஆசிபெற்றவென்
இலக்கிய நீரோடையின்று !

உதிர்ந்து விட்ட பல வருடங்கள்
இன்னும் நேற்றுப் போல்...................
நெஞ்சிலாணி யறைந்தே செல்கின்றது
உங்கள் ஞாபகங்களை
இலக்கியங்களாய்ப் பரப்பி!

உங்கள்.........
மரணத் தூரிகையின் வடு
இன்னும் என்னுள்
உலராத மேடுகளாய் வலிப்புடன்
விட்டுச் செல்கின்றது வெடிப்புக்களை!

மீள வரமாட்டீர்கள்!
புரிகிறது - இருந்துமென்
பதிவுகளின் ஸ்பரிசிப்பெல்லாம்.........
குருதாட்சணையாய்
உங்கள் ஞாபகத்தில் தொக்கி நிற்கும்
நல்ல மாணவராய்!

- Ms.A.C.Jancy -


(காலம் சென்ற எழுத்தாளர்  ஸம்ஸ் சேர்..............அவர்கள்!

முன்னர் தினகரன் பத்திரிகையில் (சனிக்கிழமையில் )பிரசுரிக்கப்பட்ட  புதுப்புனல் இலக்கிய சோலையில் என்னையும் உட்பதித்தவர்....அன்று துணிச்சலாக அவர் ஏற்றுக்கொண்ட என் கதைகளும், கவிதைகளும் தான் இன்று எனக்குள் ஓர் அடையாளத்தைப்பதித்து சர்வதேசத்தில் என்னையும் உலாவ , எழுத வைக்கின்றது!)

5 comments:

  1. எழுத்தாளர் ஸம்ஸ் சேர் அவர்களின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு என்பதை உங்கள் பகிர்வுகள் சொல்கின்றன....

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக தனபாலன்...
      அன்று என் எழுத்துக்களை அடையாளங்கண்டு ஊக்குவித்தவர் அவர்.....பிரபல்யமான தினகரன் நாளிதழ் ஒன்றில் என் எழுத்துக்களாலான பதிவுகள் தொடர்ச்சியாக வெளிவந்ததில் ஏற்பட்ட மகிழ்வும், ஊக்கமுமே இன்று இந்த வலைப்பூவில் கூட உங்களுடன் பேச வைத்துள்ளது. என் எழுத்துக்களுக்குப் பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் உங்களுக்கும் என் நன்றி உரித்தாகட்டும்!

      Delete
  2. சம்ஸ் சேருடன் அவர் வீட்டில் - அவருடன் உலாவிய நேரங்களை நினைக்கையில் பசுமை நினைவு மலர்கின்றது இப்போதும் என்னில். சம்ஸ் சேர் பல்கலை வேந்தர். அவர் எழுதிய கவிதைகள் களம் காண முன் அதுபற்றி என்னிடம் பேசுவார். வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாப் பாடலை நிரோசா விராஞ்சினி பாடமுன் - அவருக்குத் தமிழ் உச்சரிப்பை சம்ஸ் சேர் சொல்லிக்கொடுத்த முறையை என்னிடம் பகிர்ந்தார் கோப்பி குடித்துக்கொண்டே. உண்மையில் அவர் பலரை வெளிக்கொணர்ந்தவர். அவர் என் எழுத்துக்களுக்கும் களம் தந்தார். என் எழுத்துக்களை ஏற்றிப் போற்றினார். அவரது மறைவு ஈடுசெய்யமுடியாதது என்பதே உண்மை! - கலைமகன்

    ReplyDelete
  3. சம்ஸ் சேருடன் அவர் வீட்டில் - அவருடன் உலாவிய நேரங்களை நினைக்கையில் பசுமை நினைவு மலர்கின்றது இப்போதும் என்னில். சம்ஸ் சேர் பல்கலை வேந்தர். அவர் எழுதிய கவிதைகள் களம் காண முன் அதுபற்றி என்னிடம் பேசுவார். வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாப் பாடலை நிரோசா விராஞ்சினி பாடமுன் - அவருக்குத் தமிழ் உச்சரிப்பை சம்ஸ் சேர் சொல்லிக்கொடுத்த முறையை என்னிடம் பகிர்ந்தார் கோப்பி குடித்துக்கொண்டே. உண்மையில் அவர் பலரை வெளிக்கொணர்ந்தவர். அவர் என் எழுத்துக்களுக்கும் களம் தந்தார். என் எழுத்துக்களை ஏற்றிப் போற்றினார். அவரது மறைவு ஈடுசெய்யமுடியாதது என்பதே உண்மை! - கலைமகன்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோதரர் கலைமகன்....அவரிழப்பு ஈடுசெய்யமுடியாதது

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!