About Me

2012/12/03

உலகம்தான் அழிந்திடுமோ!



விஞ்ஞானத்தின் எதிர்வு கூறல் கேட்டு - நம்
விலா என்புகள் சுளுக்கிட்டுக் கொள்கின்றன
சுவாசப்பையை லேசாய் நசுக்கி...............

நாடிகளில் பதியமிட்டு
ஓடிக் கொண்டிருக்கும் குருதித் துளிகள்.........
துடிப்பை மிகையாக்கி
ஒட்டுக் கேட்கின்றன விண்ணக அதிர்வை!

மாயன் கலண்டரில்................
மறக்கப்பட்ட டிசம்பர் 22
உலகின் மூச்சுக்காற்றை
மெல்ல நசுக்குகின்றன விமர்சனமாகி !

மதங்கள் மௌனிக்கின்றன
இறுதி நகர்வின் தடங்கள் இவையென.............!
விஞ்ஞானமோ விண்ணகம் தாவிக் குதிக்கின்றது
விழப் போகும் விண் கல்லையெண்ணி!

நெஞ்சக்குழிக்குள் இறக்கி வைக்கப்பட்ட
கனாக்கள்.......................
அஞ்சிக் கிடக்கின்றன
இருளப் போகும் அந்தப் பகல்களை எண்ணி!

ஆசியா.......................!
ஆச்சரியமாய் விழி பிதுக்க- நம்
பகிடிகளும் பதைபதைப்பும்
மையங் கொண்டலைகிறது அந் நாளை நோக்கி!

இயற்கைச் சீற்றங்கள் தரும்
மாற்றங்களுக்காய்................
ஏமாற்றம் தரப் போகும் விடியல்கள்
தடுமாற்றத்துடன் இருண்டிடுமோ.....
மனசும் லேசாய் பதைபதைக்கின்றது!!

அண்ட முடைந்து - புவிப்
பிணங்களை கணக்கிடுமா............
கண்டங்கள் தோறும் செந்நீர்க் குழம்புகள்
பாய்ந்திடுமோ!
காய்ந்த சருகுகளாய்
மனசும் அலைகிறது விடை தேடி!

ஆரூட வார்த்தைகள் செய்திகளாய்- காதை
வருடி உள்ளிறங்க...............
மருளும் மனம் ஆர்ப்பரிப்புடன்
காத்திருக்கின்றது
அந்த அவஸ்தை நொடிகளைச் சந்திக்க
தெம்பின்றி!

அசராதீர் என் கவி கண்டு பீதியில்
வரப் போகும்  டிசம்பர் 21 .!

அட...............உலகம்தான் அழிந்திடுமோ!

2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!