About Me

2012/12/17

ஏனடா !


நாட்காட்டிக்  கிழிசல்களில்
எட்டிப் பார்க்குமென்  நினைவுகள்..........
சோரந்தான்  போயின
உன் வில்லத்தனத்தில்!

நினைக்கவேயில்லை............
அணைத்தவுன் கரங்களே
என்னுள்.........................
அக்கினி யாகம் நடத்துமென்று!

வெறுமை வெளியில்........
அந்தரிக்கின்றேன் -
என்னையே உன்னிடம்
இழந்தவளாய்...........

உன்னை உச்சரித்த என்னுதடுகள்
இப்போ................
உலர்ந்தே உயிரறுந்து போனது
உன் பொய்மையன்பில்!

நீ..............நல்லவனா கெட்டவனா!
காலத்தின் காலடியில்
வினா குவிந்து கதறுகின்றது
என்னைப் போல் அனாதையாய்!

வலிக்கிறதடா............
என் மார்பிலுன் தடம் பதித்து
இன்னொரு மதியுடன் இணையவே........
என் நெஞ்சில் குருதி பிடுங்கினாய்!

மலையேறி மாலை கொண்டவுன்
மனதில்..................ஏனடா
இல்லையென்றாய் எனக்குமொரு
மாலை தர!

என்னில் பற்றென்றே - லேசாய்
கற்புமுறிஞ்சி களி கொண்ட
கலியுக நாயகனே - ஏனடா
 கலி வார்த்து காணமற் போனாய்!

"போய்த் தொலைகிறேன்"
உன் வார்த்தைகளினி எனதாக.............
சமுத்திரம் வாய் பிளக்க
நடக்கின்றேன் மரணம் தேடி!

நாளையென் கல்லறையில்- உன்
நிழலைக் கூடத்தொடுக்காதே!
என் கண்ணீர் ஈரம் .........
உன் பாதம் பட்டு உலர்ந்து விடலாம்!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!