About Me

2012/12/17

கனவே கலையாதே!


இருள்ச் சலனத்தில்
விழிக்கின்றாய் கனவாய்....!
அல்லி மோகித்த நிலாவில்......
அலைகின்றாய் ஒளியாய் !

நாணத்தில் மூடிக் கிடந்தவுன்
பார்வைகள்....................
மெல்லத்  துடிக்கின்றன
எனுள் படரும் வரமாய்த் தாவ..........

வெண்முகில்களால்
துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விண்மீன்கள்........
அவசரமாய் விழுகின்றன - உன்
முத்தத்துக்குள் மின்னொளி பாய்ச்ச!

சேலையவிழ்த்த மரவிடுக்கில்- உன்
விரல் நுழைத்து நீ வரையும்
நம் பெயரோ................
தரை தொடும் காற்றில் தள்ளாடிக் கிடக்க!

விழி நிமிர்த்திப் பார்க்கின்றேன்- ஏக்க
மொழி சற்றுப் பிசைந்து..........
சிம்பொனியாய் நழுவுகின்றாய்
என் மூச்சுக்குள் உன்னை நிறைத்து!

இருள் இன்னும் கவிழ்ந்துதான்
கிடக்கின்றது- நீயோ
விடியலுக்கஞ்சி மெல்ல விழி நழுவுகின்றாய் - என்
கனவிலிருந்து விலகி!


ஜன்ஸி கபூர் 



1 comment:

  1. Ba Singaravelu Dft
    வெண்முகில்களால்
    துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விண்மீன்கள்........
    அவசரமாய் விழுகின்றன - உன்
    முத்தத்துக்குள் மின்னொளி பாய்ச்ச!.......nice


    Isac Jcp wow! very cute

    Sanjay Thamilnila
    விழி நிமிர்த்திப் பார்க்கின்றேன்- ஏக்க
    மொழி சற்றுப் பிசைந்து..........
    சிம்பொனியாய் நழுவுகின்றாய்
    என் மூச்சுக்குள் உன்னை நிறைத்து!
    nice acca

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!