About Me

2012/12/06

புரிந்து கொள் மனமே



இரச விம்பங்கள்
வாந்தி எடுக்கின்றன இப்பொழுதெல்லாம்
என்னைப் பார்த்து..................

முட்களுக்குள் நிழல் தேடிப் போனதில்
ஆணிகளின் கூடாரங்கள்
அடம்பிடித்தன என் இருப்புக்காய்!

நனைந்த காகிதத் துண்டுகள்
களவாய் என் பெருமூச்சுறுஞ்சி...................
உலர்ந்து கிடக்கின்றன மேசையின் மேல்!

பருத்த சூரியன் கூட
இளைத்துப் போனதோ......தன்
வெம்மையை என் தேகத்துள் திணித்தே!

கடிகாரங்களின் தவிப்பில்- என்
மௌனம் உரசிச் செல்கின்றது
தியானங்களை மறுத்து!

கண்ணா...............
தோற்றுத்தான் போனேன் ......
என் வலிக்குள்
உன் வழிப்பாதையை அமைத்த
உன்னிடம்!

அமிலங்களுக்குள் என்
விழிநீர் தேய்த்து விளையாடுமுன்னிடம்
யாசகம் கேட்கிறேன் என்னுயிரை
திருப்பித் தா!

என்றோ வரைந்த சிறுபுள்ளிக்குள்
உன்னுலகத்தைச் சுருக்கி...............என்
நெஞ்சுக்குள் முகடு வரைகின்றாய்
அடிக்கடி!

பரிவோடு சொல்கின்றேன்...........
புரிந்துகொள் மனமே!
கறைபடிவுகளின் சாம்பரில்
வரையப்பட வேண்டாம் நம்காதல்!



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!