About Me

2013/01/11

நீயறியாமலே


உன் நெருடலின் மயக்கத்தில்
மூச்சுத் திணறுது என் சுவாசம்!

உன் கடிதங்களின் கிசுகிசுப்பால்
புல்லரிக்கின்றது உதடுகள்!

வெற்றிடமாய் தேங்கிக் கிடக்கும் மனதில்
வேரூன்றிக் கிடக்கும் உயிரோ நீ!

உன் ரகஸிய ஒத்தடங்களால்
திமிறேறிக் கிடக்கின்றதே கன்னங்கள்!

உன் அருகாமை விட்டுச் சென்ற ஏக்கங்களில்
வலை பிரித்து முறுவலிக்கின்றது வெம்மை!

உன் காதலின் இம்சைகண்டு
கனவுகள் கூட கப்பம் கேட்கின்றனவே!

என் தனிமைப் பொழுதைக் கரைக்கையில்
வீழ்கின்றாய் நினைவுகளாய்!

ஏற்றி விட்டேன் என்னை யுன்னுள்
நீ யறியாமலே உன் பார்வையாய்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!