About Me

2013/01/13

அருணோதயம்


கிழக்கின் விடியலில்
விழுந்து கிடந்தாய் ஒளிச் சிறகினை
லேசாய் உதிர்த்து!

உன் குண்டுக் கன்னங்களும்
காந்தம் உமிழும் கண்களும்
சிரிப்பில் நசியும் உதடுகளும்
பாசமாய் என்னை மேவிச் செல்லும்
நிதம்!

உன் தனிமை அலைவரிசையில்
அலையுமெனக்கு
கடிவாளமிட்டாய் அடிக்கடி
ஆசையோடு!

உன் பிடிவாதங்களும் சீற்றங்களும்
ரசனையில் குழைந்தே கலப்பதால்
தொலைபுள்ளியில்
உன்னோடு கண்ணாமூச்சியாடுகின்றேன்
கண்ணா!

ஜன்ஸி கபூர் 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!