About Me

2013/01/17

நிராயுதபாணியாய்


சுருண்டு கிடந்தேன் - என்
கனவுலகில்!
சுள்ளென்று கிள்ளுகின்றாய் அடிக்கடி
உன் நினைவுகளால்!

பனி படரும் இருள் முகிலில்
கனிவாய் உலா வருமுன்
குரற் றொனியில்....................
அடங்கித்தான் கிடக்கின்றேன்
இனிய ஸ்வரமாய்!

இப்பொழுதெல்லாம்..................
என் தினக்குறிப்பின் ஆக்கிரமிப்பில்
அலைந்து கொண்டிருக்குமுன்னை.........
சேமித்துக் கொள்கின்றேன் கவிதைகளாய்!
பத்திரப்படுத்து என் உணர்வுகளை
உன் அன்பகத்துள்!

சிரிக்கின்றாய் எனைக் கடுப்பேற்ற.........
உன்
கருவிழிகளில் குறும்பையும் லேசாய்ப் பிசைந்து!

ஆயுதமேந்தவில்லை- உன்னை
ஆட்கடத்தல் செய்யவுமில்லை!
நிராயுதபாணியாய்
மருகிக் கிடக்கின்றாய் - என்
வாலிப எல்லைகளில் உன் விடுதலை மறுத்து!

நம் முதற் சந்திப்பின் மௌனம்
நிரம்பி வழிகின்றது ஞாபகக் குவளையில்
நாணத்தைச் சிதறியவாறு
நேசப் போதையில் கிறங்கி!

பரிவோடு காதல் குலைத்து
நிதமென்னை அரவணைக்குமுன்னை.........
அறிவிப்புச் செய்யட்டுமா - என்
தாயகமாக!




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!