About Me

2013/02/01

விஸ்வரூபம்


இனவாதக் களையொன்று கலையாகி
அலைகின்றது வரவேற்புக் கோஷங்களுடன்!

அரபெழுத்தணிச் சாயலுடன்
முகங் காட்டுதிந்த விஸ்வரூபம்!

தளிர்க்கரங்களின் சுமைகளாம்
அனல் பறக்கும் துப்பாக்கிகள்!

இறைகூடத் தளமிங்கே - பாவக்
கறை சுமக்கும் பள்ளிகளாம்!

சாந்தி மார்க்க போதனைகளிங்கே
உயிரறுக்கும் வேதனைகளாம்!

இறைவசன உயிர்ப்போடு  - உயிர்
பறிக்குமாம் சன்னங்கள் வீரியமாய்!

கொலைக்களமாம் எம் மறைவேதம்
கல கலக்கின்றது கலைக்கூடம் கைக்கூலியாய்!

திருமறையின் அருள் மொழிகள்
இறை நிராகரிப்போரால் அரிதாரம் பூசப்படுகின்றது
அழகாய்!

தீனுல் இஸ்லாம்.........
தீவிரவாதமெனும் பிரச்சாரமாய்
தீ கக்குகின்றதிந்த விஸ்வரூபம்!

விலைக்காய் கலை சேர்க்கும் கமல்.....
வீரியமாய் விட்டுச் செல்கின்றார் இனவாதத்தை!

ரவைகளின் ஏடென இஸ்லாம் பரப்பி
புரட்சி செய்கின்ற கமலின் சாகஸம்..........
சரிதமாகி விட்டுச் செல்கின்றது பாவக் கறையை!

விஸ்வரூபம் வில்லத்தனம்........நம்மை
வில்லங்கத்துடன் கடந்து செல்லும் மூர்க்கத்தனம்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!