About Me

2013/03/11

தளிர் 2

சுதந்திரம்..............
அடக்குமுறையின் மொழி!

Photo: சுதந்திரம்..............
அடக்குமுறையின் மொழி!

ஒவ்வொரு வீழ்ச்சியிலும்
எழுதத் துடிக்கின்ற முகவரியது!
----------------------------------------------------------
ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும்
வெற்றியாளனாக அறிவிக்கப்படுகின்றான்

Photo: ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும் வெற்றியாளனாக பிரகடனப்படுத்தப்படுகின்றான்............
-----------------------------------------------------

பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட
மௌனத்தின் வலிமை அதிகம்!

Photo: அதிகமாகப் பேசி ஒருவரை எரிச்சலூட்டுவதை விட, மௌனத்திருப்பது மேல்!

ஏனெனில் ஆயிரம் பேசும் வார்த்தைகளை விட மௌனத்தின் பெறுமதி அதிகமானது
------------------------------------------------------------------
சுதந்திரம் மறுக்கப்படுகையில்
பேனா முனைகள் கூட சிந்தும் துளிகள்
கண்ணீரல்ல செந்நீர்!
செந்நீர் ஈரங் கண்டு
வேரறுக்கப்படும் விழுதுகள் கூட.......
உரமாகும் எழுச்சிகளை வாசித்தபடி!
















------------------------------------------------------
கொன்றலின் வெற்றி யறிவிப்பாய்
முன்றலில் எட்டிப் பார்க்கின்றது கருமை!
விண்ணைப் பிளந்து
மண்'ணில் முளைக்கும் வேர்
மின்னலோ................






தளிர்கள் - 3

தவறுகள் அறியாமையின் வரவுகள்!

நம்மை சிலர் தவறான எண்ணத்தில் விமர்சிக்கும் போது, நம்முள்ளம் எரிமலையாகி சுட்டெரிக்கின்றது. அவ்வாறான தருணங்களில் அமைதி காக்கும் பண்பு நம்மிடம் இருக்குமானால், காலம் மிக விரைவில் தவறிழைத்தவர்களுக்கு நம்மைப் பற்றிய உண்மையை உணர்த்தி நிற்கும்!


அன்றும் இன்றும்
-------------------------------------------------------------
தோற்ற காதலெல்லாம்
கல்லறை தேடியது அக்காலம்!
புது உறவுக்காய் மீண்டும் விண்ணப்பிப்பது
இக்காலம்

--------------------------------------------------------------
ஒவ்வொரு பூட்டும் செவி சாய்க்கும் தனக்குரிய திறப்புக்கு மாத்திரமே!

நம் மனம் அப்படித்தான்...........

நம் குணத்தை ஒத்தவர்களின் நட்புடன் மட்டுமே ஒத்துப் போகின்றது!

------------------------------------------------------
மெல்லன மூடின விழிகள்..........
மெல்லிசையாய் மொழிந்தன கனவுகள்
வள்ளியே.........உன்னன்பை
அள்ளித் தரும் வள்ளலே நீயெனக்கு!

-----------------------------------------------------

உனக்கான காத்திருப்புக்களால்
தினமும்
சிலையாகின என் விழிகள்!

பழி சொல்லுமோ காலமும் - உன்
அன்பில் மெய்யில்லையென்று!
அஞ்சுகின்றேன் அணுதினமும்!

--------------------------------------------------
எழுதப்படும் தீர்ப்புக்களையே மாற்றக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் தன்னம்பிக்கையே!

உள்ளம் தன்னம்பிக்கையில் நிறைந்திருக்கும் போது எத் தீமையும் அண்டுவதில்லை.

நல்லதையே நினைப்போம்!
நலமுடன் வாழ்வோம்!!



நீ

கிறீஸ் பிசாசே!
உன் தசை கிழிக்கும் புத்தியில்
இனவாதம் எட்டிப் பார்க்கின்றது!

தரித்திரத்தின் சரித்திரம் நீ
அரியாசனம் மிதிக்கின்றாய்
குருதியை உறிஞ்சியபடி!

நீ கருவறைக் கூடுகளைச் சிதைத்து
உயிரறுக்கும் காட்டேறி!

நீ முகமூடிச் சல்லாபத்தில்
முணங்கிக் கிடக்கும் சாத்தான்!

நீ
நகங்களில் ஆணி பூட்டி
நடுசாமங்களில் ஊர்ந்து செல்லும்
நாகம்!

நீ
துப்பாக்கி ரவைகளில்
அப்பாவிகளை நிரப்பும்
ஆட்கொல்லி!

நீ கற்றாளைப் பாலில் உணவூட்டி
கல்பை விஷமூட்டும்
பாதகன்!

நீ ஆறடிக்குள் ஆன்மா அடக்க
வருந்தாத பூதம்!

உன் மயான கிடங்குகளைத் தீ மூட்ட
வாய் பிளக்கின்றன
அக்கினி நட்சத்திரங்கள்!

உன் அதர்ம மூச்சடக்க
இதோ நாம்!
ஈமானிய உச்சரிப்புக்களுடன்!



- Jancy Caffoor-

     31.11.2013

2013/03/10

இனவெறி


இடம் : food city (Anuradhapura)

காலம் : 05.03.2013

சம்பவம்:

ஒரு கிப்பி வந்தான். அவன் தோற்றம் ரௌடி என்பதைப் பறைசாட்டிக் கொண்டிருக்க, பார் கவுண்டருக்குள் கை நீட்டி உயர்தரமான மதுபான வகைகளை வாங்கியவன், தின்பதற்கு சில நொறுக்குத் தீனிப் பக்கெற்றுக்களையும் வாங்கினான். திடீரென பக்கெற்றுக்களை உற்றுப் பார்த்தவன்........


"இதுல ஹலால் போடப்பட்டிருந்தா எனக்கு வேணாம்" 

 என சிங்களத்தில் கத்தினான்"

"நாங்க சிங்களவர்" என்று புன்னகைத்தான் அவன். அவன் கெட்ட கேட்டுக்கு இந்த பெருமிதம் வேறு...........

இப்படி இனவாதம் பேசுறவங்களுக்கு செருப்படி போதாது. துப்பாக்கிச் சூடுதான் போடனும்..........

இலங்கையை சிங்களவர் தங்களுக்கு சொந்தம் கொண்டாடினால், அப்ப நாங்க எங்க போறதாம்........

ஹலால்.....பேசுற இவன மாதிரி ஆட்களுக்கு ஹராமான வழியிலதான் மரணம் கிடைக்கனும்.

ஆனால் அதே பூட் சிட்டி வாசலில் நின்ற சிங்கள வாயிற் பாதுகாவலன், அந்த இனவாதியைப் பார்த்து என்னிடம் கூறினான் "அவன் பைத்தியக்காரன் "

ஒரே இனத்துக்குள் வித்தியாசமான எண்ணவோட்டங்கள்....

துளிகள் - 1

 

மகளிர் தினம்

பெண்.................!

சுற்றிச் சுழலும் பூகோளத்தின்
அச்சாணி!

உயிரணுவுக்குள் உரு கொடுத்து
காத்திடும் தாய்மை!

அத்தகைய பெண்மைக்காக உலக நாட்காட்டியில் ஒதுக்கப்பட்ட தினமே இந்நாள்!

அன்று............

பெண்ணடிமைத்தன வீச்சங்களால் கறைபட்ட காலங்கள் அடக்குமுறைகளும் அவஸ்தைகளும் பெண்ணவள் பிரதிபலிப்புக்களாக உருமாற்றப்பட்ட காலங்கள்!

அத்தகைய சூழ்நிலைகளின் போது.....

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்த பாரிஸ் பெண்கள் 
 
வேலைக்கேற்ற ஊதியம், 
எட்டு மணிநேர வேலை, 
பெண்களுக்கு வாக்குரிமை, 
பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும்

என்று பாரிஸ் தெருக்களில் கைகளில் கிடைத்த ஆயுதங்களுடன் பிரான்ஸ் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! 

இவர் போராட்டம் கண்டு அஞ்சாத அரசன், 'இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆனால் ஆத்திரமடைந்த பெண்கள் கூட்டத்தினர் தம் மீது அடக்குமுறை விதிக்கும் அரசனின் மெய்க் காப்பாளர்கள் இருவரை கொன்று விடவே, அரசன் சற்று அதிர்ந்து பணிந்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அரசன் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய முழுவதும் பரவ, போராட்டமானது இன்னும் பலமடைந்து, கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவியது.

இத்தாலியிலும் பெண்களும் தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு போராட்டக்களத்தில் இறங்கினர். 

இவ்வாறான முறுகல் நிலைகளின் போது,

பிரான்ஸ், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். 

அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. 

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இதுவென்றாலும் பெண்ணடிமைத்தனம் முற்றாக இன்னும் அறுத்தெறியப்படவில்லை.

2013/03/09

அவள்தான்


இருள் அஹிம்சையில்
இதமாய் மொழி பேசினாள்!

கண் சிமிட்டிச் சிமிட்டியே - நம்
நினைவுகளில் குறும்பைக் கலந்தாள்!

தன் புன்னகையால் - நம்
சோகங்களை ஒற்றினாள் ரம்மியமாய்!

வைரங்களை அள்ளித் தெறித்து - நம்
வறுமை நீக்க உறுதியும் கொண்டாள்!

மழலை முகமதில் மலர்ச்சி தூவி
அழைத்திட்டாள் தன் கரம் நீட்டி!

விடிந்ததும் மறைந்தே போனாள்
அவள்தான் நட்சத்திரம்!

- Jancy Caffoor-
     03.09.2013

அவலத்தில் உறையும் மலர்


விடியலை நிரப்பி
பொழுதொன்று கரைகின்றது மெல்ல
அவளின் கனவுகளை மறைத்தபடி!

கன்னக் கூட்டில்
சிரிப்பை சிறைப்படுத்தி
மெல்ல வருகின்ற அன்னமிவள்!

இருந்தும்
தெருவோர வேட்கைகளின் பீதியில்
மிரட்சியை விதைத்தபடி
விரைகின்றாள் - தன்
ஒட்டியுலர்ந்த மனைக்குள்!

வறுமை பட்டை தீட்டியதில்
சுருண்டு போன உதரக்குழி
வரண்டு அலறியது பசி மயக்கத்தில்!

மெல்லன காற்றில் விரியும்
இந்தப் பட்டாம் பூச்சி
எட்டாம் வகுப்பில் தொட்டு நிற்கும்
சிட்டுக்குருவி!

பிய்ந்து போன காலணியும்
தேய்ந்து போன சீருடையும்
அழுக்கை விதைத்தபடி
போராடிக் கொண்டிருந்தன வாழ்க்கையுடன்!

சோகம் வரலாறாகி
தொட்டுச் சென்றதில்
விட்டுப் போயின பள்ளிப் பாடங்கள்
திட்டுக்கள் நிறைந்தன ஞாபக மேட்டினில்!

அம்மா!

அவள் அம்மா!!

தினமும்
சின்ன விழிக்குள் குளித்தாள்
கண்ணீரை ஏலம் விட்டபடி!

பத்துப் பாத்திரம் தோய்த்து
தேய்ந்து போன அவள் விரல்கள்
பிஞ்சு மகளின் ஸ்பரிசத்தில் - பல
நாழிகள் சிலிர்த்தே கிடந்தன!

நெஞ்ச வரப்பில் ஏக்கம் விதைத்து
நெருஞ்சிக்குள் நிழல் தேடுமிந்தக்
குழவியவள்

தன் தாயவள் நினைவுகளால்
மெல்ல உதிர்கின்றாள்
கருஞ் சாலையோரம்
தன் மேனியுணர்ச்சி துறந்து!

வீதியின் பரபரப்பில்
தெருநாய்கள் கூட அவளை மறக்க
வறுமையின் கிழிசல்களாய்
நொருங்கிக் கிடக்கின்றாளிந்த  உயிர்ப்பூ
 தன் சுயம் மறந்தவளாய்!

- Jancy Caffoor-
    09.03.2013


தாயே


தாயே.........

அச்சேற்றிக் கொண்டிருக்கின்றேன்
புதுமைப் பெண்களை
உங்கள் கண்ணீரை மறைத்தபடி!

ரோசாவின் வாசத்தால்
சுவாசம் நிறைக்கின்றேன்
உங்கள் முட்களை மறந்தபடி!

பாசவேலியிடப்பட்டுள்ள உங்கள்
கருவறையை
கல்லறையாக்குவோரோடு
உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றேன்
உறவுகளைச் சிதைக்காமல்!

நீங்கள் சிரித்திருப்பீர்களா
ஒரு துளியேனும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
என் ஞாபகங்களைக் குலைத்தபடி!

தாயே
காலக் கலண்டரில் நாள் குறித்து
தரணியே புகழ் பாடுகின்றது
நீங்கள்
அறையப்பட்டிருக்கும் சிலுவைகளை
அகற்றாமலே!

- Jancy Caffoor-
    09.03.2013
















2013/03/08

ஞாபகம் வருதே

என் ஞாபகச் சிறையிலிருந்து
விடுதலை பெறாத தோழா
உன் சரிதத்தின் சில துளிகள்!

துள்ளி நனைந்த வுன் பள்ளிக் குறும்புகள்
இன்னும் இளமையாய்
கண்சிமிட்டுகின்றன அழகாய்!

கற்றல் காலமெல்லாம்
சொற் தேடி நீ அலையாமல்
வெட்டியாய் மதிலேறி - உன்
காலம் கழித்த வில்லத்தனம்
இன்னும் பசுமையாய்!

உன் குறும்பும்
அடுத்தாரைச் சீண்டும் புனைப் பெயரும்
ஆசானின் பிரம்படிச் சோகமும்
விடலைப் பருவ காதல் ஏக்கங்களும்

இன்னும்..இன்னும் நீளமாய்
ஞாபகப் பெட்டகத்தை நிரப்புகின்றன
ரசித்தபடி!

தோல்விக்குள் நீ வீழ்கையில்
கண்ணீர் தொட்ட சோகங்களும்
ஏழ்மையிலும் எழில் குன்றா புன்னகையும்
உன் சொத்தாகி
இன்னும் இன்னும் மனதை ஆள்கின்றது
அழகாய்!

பல பொழுதுகளில் தலைநீட்டும்
பனிப்போர்கள்
பாச நெகிழ்வில் முகம் கண்டு விலக

அடடா
ஒவ்வொரு பௌர்ணமியும்
எழுதிச் செல்கின்றது நம் நட்பை
ரம்மியத்துடன்!

பிரியா வரமென்றே
பெருமிதத்துடன் நானிருக்க
ப்ரியமே!
பிரிந்தே சென்றாய்
விதியின் கோட்டைக்குள்!


- Jancy Caffoor-
    08.03.2013



யாரோ எவரோ



ஓர் பொழுதின் முகநூலில்
ரோஜா வாசம்
நுகர்ந்தேன் சட்டென
புன்னகைகள் நகர்ந்தன!

முகமறியா நட்பென்றெ
பட்டியலிட நானும்
விட்டெறிந்தான் முகவரியை
அன்போடு இறுக்கிப் பிடித்து!

முறுக்கு மீசையும்
முறுவலிக்கும் கண்களும்
பாரதியின் உருக் கொண்டான்
சிகரந் தந்தான் கலையிலகில்!

இலக்கணங்களின் தலைக்கணங்கள்
இலக்காகி வீழ்ந்தன- அவன்
வாள் வீச்சு பேச்சினிலே

சொற்களில் இலக்கியம் நயந்து
கற்கண்டாய் ரசித்துக் கிடப்பான் காதலை!
தன் குண்டுக் கன்னத்தில் சிரிப்பை நனைத்து
சீண்டலில் வம்பெடுப்பான் வீம்பாய்!

விடியலில் வலை விரித்து
சூரியனை எட்டியும் பிடிப்பான்!
நிலவொளியில் களவாய் காதல் நெய்து
இலஞ்சமாய் தூதனுப்புவான் இயற்கையை!

அவன் திமிர் கண்டு - என்
உயிர் மிரண்டோடும் !
வாஞ்சையோடு கட்டியிழுத்து
கனவிலும் கவி கொட்டும் காரியக் காரனிவன்!

இவன் யாரோ..............எவரோ!

- Jancy Caffoor-
    08.03.2013



இயற்கை மகள்

உன் நட்சத்திர விழிகள்
மொழி பேசின காதலை!

நிலவுன் முகங் கண்டு
மெல்ல விழி திறந்தது!

வானவில் புருவங்கள்
என் சப்தமறிந்து சிலிர்த்தது!

கார்மேகக் கூந்தல்
காற்றில் கலைந்து வரவேற்றது ஆர்வமாய்!

உன் பிறையுதட்டில் - என்
பெயர்கள் ஒட்டிக் கொண்டன அழகாய்!

உன் மேக மேனி சிலிர்த்து
என் வெம்மை தேடி!

இருந்தும் 

அருகில் வந்ததும் சிலிர்க்கின்றாய்
வெட்கத்தை உறிஞ்சியபடி!

- Jancy Caffoor-
    08.03.2013



வாழ்க்கை வாழ்வதற்கே



ஒற்றைப் பயணத்தில்
சிறகடிக்கும் காற்றாய் நான்!

வெற்றிடத்தில் சுழன்றடிக்காத
காற்றாய் அவன்

பற்றைக்குள் வீழ்ந்து கிடக்கும்
முட்செடியாய் பிள்ளைகள்!

முரண்பாடுகளின் அரவணைப்பில்
எம் வாழ்க்கை!

இருந்தும்

வாழ்க்கை வாழ்வதற்கே!


      - Jancy Caffoor-

  08.03.2013

அழகான வாழ்க்கை



செவ்விதழ் அதரம் நுகர்ந்து
செம்பிறை நுதல் மத்தியில் - உன்
செந்நிற திருமாங்கல்யம் சூட்டி
திரையிட்டாய் என்னை உன்னுள்
இறைசாட்சியுடன்!

என்னிரவிலும் உலாவும்
பகலவன் நீயாயினன் - மன
அகிலத்தின் உயிருமாயினன்!

கணையாழி யிலுனைப் பூட்டி
இணையாகினாய் பல நாழி!
உன் துணை நானென இறைவன் படைக்கையில்
அனலிட்ட மெழுகாய் அவஸ்தையுமேனோ!

சகதியில் சயனிக்கும் ஆம்பலும்
மறக்குமோ ஆதவக் காதலை....
பாவை சிதைந்தேனுன் வார்த்தையில்
தகுமோ செந் தணல் நீ வார்ப்பது!

இடையுடைந்தது உயிரும் மெலிந்தது
உன் மௌனச் சமரில் ஆவியும் தொலைந்தது!
கருவளையும் எழிலுடைத்தது
பருவமும் குற்றுயிராய் வீழ்ந்து தவித்தது!

நம் பனிப்போரின் அறைகூவல்
ஓயவில்லையின்னும்
நானோ உன் சொப்பனத்தின் கதவருகே
காத்திருக்கின்றேன்-நீயோ
செவிடாக வேடம் தரிக்கின்றாய்
அற்புதமாய்!

காதல்
வார்த்தையல்ல வாழ்க்கை!
உணர்ந்து கொள்
அழகான வாழ்க்கை நம் கையில்!

Jancy Caffoor

 




உயிர்ப் பூ

இவள் ..............

மெல்லிய சிறகு சுமக்கும்
மலரிதழ்!

தன் குறும்புகளால்
காற்றையும் பூட்டி வைக்கும்
சாகஸக்காரி!

இவள் மொழி வார்ப்பில்
மழலை இலக்கியம்
அழகான சரிதமாகின்றது!

கடல் பூக்கள்
நுரையைச் சிந்தியே
சரந் தொடுக்கின்றன புன்னகைகளை!

மெல்ல விழி சுருக்கி
கண்சிமிட்டும் அவள் பார்வையில்
விண்மொட்டுக்கள்
கண்ணயர்கின்றன மெய் மறந்து!

சிற்பமொன்று வெப்பமுறிஞ்சி
சொற்களை அள்ளி வீசி
கவி புனைந்து பண் பாடும்
இவளருகினில் மெல்ல வந்தால்

இவள் சாலையில்
விட்டுச் செல்லும் நிழல்களெல்லாம்
குடையாய் முளைத்து நடை பயிலும்
நம் புவி காக்கும் படைகளாய்!

முப்பத்தாறு மாதங்கள் முகிழ்த்த
முழு நிலவுக்காரி யிவள்
முழு நிலவையும் தன்னுள் ஏந்தும்
மயில் கொண்டைக்காரி!

இத்தனைக்கு மிவள்
அற்புதக் குழந்தையல்ல
அன்பால்
இயற்கையை நேசிக்கும் அன்புக் குழந்தை!

   - Jancy Caffoor-
         08.03.2013



உன்னில் தொலைந்த நான்

பனிச் சலசலப்பில்
பாதையோரம் உதிர்கின்றன - உன்
நினைவுச் சருகுகள்!

என் அகவெளிப் பட்சிகள்
கொட்டிச் செல்கின்றன - உன்
இராச்சியத்தின் தூதோலைகளை!

நீ நடந்து வந்த திக்கெல்லாம்
நீவி நிற்கும் முட்களெல்லாம்
வாந்தியெடுக்கின்றன - உன்னுள்
குந்திக் கொண்டிருக்கும் கோபங்களை!

நினைக்கவேயில்லை - உன்
கனவு வேர்களை
வெட்டிச் சாய்க்கும் கோடாரி நானென!

உன் ரசிப்புக்களால் சிலிர்த்த கவிதைகள்
இன்று
எங்கோ வெறிக்கின்றன
மங்களத்தை தொலைத்தபடி!


   - Jancy Caffoor-
         08.03.2013

எங்கிருக்கின்றாய்........



எங்கிருக்கின்றாய்

எகிறிக் குதிக்கும் காற்றிடம்
செல்லமாய் முணங்கினேன்!
பதுங்கிக் கொள்கின்றது - என்
மூச்சோரம்!

எங்கிருக்கின்றாய்

வெட்கமின்றி சொற்களிடம்
கேட்கின்றேன்
சுட்டிக் காட்டுகின்றன - என்
வார்த்தைகளை உடைத்துப் பாரென்று!

எங்கிருக்கின்றாய்

மனசிடம் மன்றாடிக் கேட்கின்றேன்
மெல்ல வருடுகின்றதென்னை
உன்னுள் திறந்து பாரென்று!

எங்கிருக்கின்றாய்

என்னுள்தானா
நான் நீயாகும் போது
நமக்குளேது பிரிவு!


   - Jancy Caffoor-
         08.03.2013











நீதான்

கண்களால் எனைச்
சீண்டினாய்!

கண்மணியாய் விளித்தே
என் விழியுறக்கமும்
அறுத்தாய்!

கன்னம் வைத்து மனசுள் நுழைந்து
கன்னத்தை நொறுக்கினா யுன்
முத்தச் சத்தங்களால்!

கண் முன்னே யுன்னைப் பரப்பி
நிதமும் - என்
கல்பினுள் நிறைந்தாய்
தனிமை விரட்டி!

எனைக் கவியாக்கி
ரசித்தாய் என்னை
என்னுள் உனை வீழ்த்தி
சிரித்தாய் மெய் மறந்து!

கருத்தினுள் எனை நிறைத்து
கருவும் சுமந்தாய்
அருமையான வுன் சிசுவை!

கற்பனையைப் பிய்த்தெடுத் துன்
வாலிபங்களை ஜாலியாய் முலாமிட்டே
தாலியும் தந்தாய் மனையாளாய்

கனவுகள் மெய்ப்படும் வேளை
மற்றோர் நம்மில் கடுப்பாக
மறுப்பிலும் வெறுப்பிலும்
பெற்றோர் சம்மதம் காதல் பெற்றிட

அடடா

கனக்க கேட்கவில்லை
காரும் பங்களாவும் வேண்டுமென்றாய்
நம் பிள்ளைகள் சொகுசாய் வாழ்ந்திட!

சில பவுண்களும்
சில லட்சங்களும்
வரதட்சணை தந்துவிடு- இப்
பரந்த பூமியில் நம்மவர் பேர்
அடுத்தவர் சொல்லிட வென்றாய்

கோலமிட்டவுன் சீதன ஆசையால்
அலங்கோலமாகின
அழகான நம் காதல்
சில நொடிகள்!

நீயுரைக்க
நானும் முறைக்க
கனவுகள் எனை அறைந்தே சென்றது
"சீ" இவனெல்லாம் ஒரு..................


   - Jancy Caffoor-
         08.03.2013







வேண்டாமினி

சூரியனை இன்னும் கீழ்வான்
விரட்டவேயில்லை
இருந்தும்
விடியல் மறுக்கப்பட்ட- மரணக்
கைதிகள் இவர்கள்!

கனவுகள் தரிசிக்கும்
வாழ்க்கைக் கூடாரங்கள்
செல்கள் அரிக்கப்பட்டு
சொல்லாமலே காணாமற் போயின!

இவர்கள் பூமியில் விதைக்கப்படாத
மனிதாபிமானங்கள்
விட்டுச் செல்கின்றன
அரக்கர்கள் எழுதிச் செல்லும்
இறப்புக்களை!

உறக்கத்திற்காகத் தாழிடப்படும்
விழிகளினி
திறக்கவே போவதில்லை
கண்ணிமைகளை வருடியபடி!

ஆயுத விளைச்சல்களின் ஏறுமுகங்கள்
ஊற்றிச் செல்லும்
இரத்த ஊற்றுக்களில்
இரக்கங்கள் அழிக்கப்பட்டுச் செல்கின்றன
தாராளமாய்!

வேண்டாமினி
மூடிவிடுங்கள் யுத்தக் குழிகளை!
பிணங்களால்
ரணமாகாமலிருக்கட்டும் நம் பூமி!

   - Jancy Caffoor-
         08.03.2013

தீனின் ஒளியாய்



இப்ராஹீம் நபியவர்கள் இறைஞ்சுதல்கள்
இறை சந்நிதானத்தில் வலு சேர்க்கவே.........
ரபியுல் அவ்வல் பிறை பனிரெண்டில்
தரணிக்குள் தடம் பதித்தா ரெம் பெருமானார்!

பிரபஞ்ச இருள் வெளிக் கீற்றுக்களில்
பிரவேசித்த வைரமாய் எம் பெருமானார். ...........
நல்லறங்கள்  பல விட்டுச் சென்றார்- பல
உள்ளங்கள் இஸ்லாத்தைத் தொழவும் செய்தார்!

விண்ணகர் மலக்கொளிகள் வாழ்த்தி நிற்க
மண்ணக அறியாமை கறையகற்றி.........
தீன் வழிச் சுவட்டோரம் நடைபயின்றே
வாழ்ந்தும் காட்டினா ரெம் பெருமானார்!

அன்னை ஆமினா உதிரம் நனைந்தே
இன்முகம் காட்டும் நனி பூவானார் ............
தந்தை அப்துல் முத்தலிப் லயிப்பில் தான்
தரணிக்குள் தரித்தும் நின்றா ரெம் பெருமானார்!

அருந்தவப் புதல்வரா யன்னையவர்
கருவறை தங்கிய வெம் கோமகன்......
பெருந்தவப் பேறாய் பேருலகில் தீனைப் பரப்பி
பொக்கிஷமாய் திருமறையையும் தந்தே நின்றார் ........

அரபிச் சுவரோர அறியாமைப் படிவுகள்
குற்றங்களாய் மனித மனங்களில் நீட்சி பெற்றே...............
இன்னல்களாய்  தீப்பற்றி எரிகையில்..........
அன லுறிஞ்சும்  புனிதமுமானார்
அஹமதெனும் எம் பெருமானார்!

பாலையூற்றுக்களின் பாவக் கறைகள் நீங்கி
சோலைவெளிகளாய் இப்பிரபஞ்சம் நிரம்பிட...........
பிரவேசித்தா ரெம் பெருமானார்
பிரகாசித்தார் அரபுத் தேசம் சிறப்புப் பெற!

சமுதாயப் பேரேடுகளில் சாந்தி வரையும் 
சரித்திரமுமானார் பலர் தரித்திரங்களும் நீக்கி.......
சன்மார்க்க போதனைகளில் எம் சிந்தைகளை  நிறைத்திட
விட்டும் சென்றார் வழிமுறைகளாம் .....
அல்-ஹதீஸையும் ஸூன்னாவையும்!

விண்ணகம் இறக்கித் தந்த தீன்நெறியால்
இன்னல் களையும் வழியும் தந்தார்!
மண்ணக சேமிப்போரங்களெல்லாம்..........
எண்ணற்ற அருளையும் சேர்க்கச் செய்தார் -எம்
அண்ணல் நபியவர்கள்!

வானின் பௌர்ணமி எழிலொளியாய்
வையகத்தில் வந்திறங்கினார் எம் பெருமானார்!
நன்மையின் விளைவகம் நாமாக...........
தீனை உணர்விலும் தந்து நின்றார்!

கஷ்டங்கள் பல கண்டனுபவித்தும்
இஷ்டத்துடன் இறை தொழுதே நின்று........
இஸ்லாமெனும்  தூணில் உலகைப் பொருத்தி
பெருமையும் கண்டார் எம் பெருமானார்!

சாப வினைகள்  நீக்கத்தான்
சத்திய நெறிகள் போதிக்கத்தான்........
வந்துதித்தார் நித்திய வுலகின் அச்சாணியாய் - எம்
முகம்மது நபி (ஸல்) அவர்கள் !

வறுமை விரட்டும் மருந்துமானார்.........
சிறுமை களையும் அன்புமானார்..........
மறுமை வாழ்வுக்கும் வழியும் தந்தார்.........
இறுதித் தூதுவர் அவருமானார்!

மீலாத் தினமின்று பல மாண்புகளும்
மீட்சிகளும் இறையருளும் நாம் பெற்றிடவே .........
பெருமளவில் ஸலாம் சொல்வோம்- முகம்மத்
பெருமானார் திருமொழி நவின்றே












ஒற்றை மழைத்துளியாய்


உறைந்திருக்கும் கனவுகளுடன்
என் விழிகள்!
இருந்தும்
சமுக நகக் காயம்
இன்னும்
விழிகளில் சிவப்பாய்!

நெஞ்சமதில்
நேசம் நெய்யாமல்
விசமாகும் விட்டில்களால்- என்
ஆன்மா சிதறுகின்றது
அழுகுரலாய்!

கவலை நுரைக்குள்
வழுக்கி வழுக்கியே - என்
ஜீவன்
ஜீவிதம் காணாமலே
கரைந்து போகின்றது!

என்
கனாச் சிரிப்பின் படிமங்களில்
வெம்மைகளை துடைத்தெறிய
வலிதற்ற கரங்கள்
தொலைவாகிப் போகின்றன
வெறும் அத்தியாயமாய்!

என்
விரலிடுக்கில் பேனா சுமக்கின்றேன்
விடியலுக்காய்!
விரல் நகம் கழற்றும்
துரோக வீரியங்களாய்
என்னவர்கள்!

விரக்தி வலியால் - என்
வசந்தங்களில் ரணம்!
இருந்தும்
சிதைந்த நம்பிக்கைகளை
சிலுவையாச் சுமந்து
வேரூன்றுகின்றேன்
கால பூமியில்- வீழும்
ஒற்றை மழைத்துளியாய்

Jancy Caffoor






ரணம்


என் விழி ஜன்னல் திறந்தே
கிடக்கின்றது
உன் வரவிற்காய்!
இருந்தும் - நீ
இன்னும் இருட்டில்!

இந்த பிரபஞ்சத்தில்- என்
ஜீவிதம்
வெறுப்பேறிக் கிடக்கின்றது
நீயின்றி!

உன்
குரல் தேடித் தேடியே - என்
குரல்வளை கூட
உடைந்து விட்டது!

உன்
சுயரூப ஜனனத்தில் - என்
ஆத்மா மரணித்து விட்டது!
இருந்தும் - என்
ஒவ்வொரு நிமிட நகர்வும்
உன் ஞாபகங்களில்தான்
மயங்கிக் கிடக்கின்றது!

என்னை - நீ
எரிக்கும் போதெல்லாம்
எட்டிப் பார்க்கும் சாம்பர் முகடு
என் தேசத்தின் சிகரமாய்
நெடுங்காலம் ஜீவிக்கும்!

அடுத்தவர்க்காய் - என்
சந்தோஷங்களில் நகம் பிடுங்கும்
உன் விசம்தான்
இப்பொழுதென் கவிக்கு கருவாகின்றது


 - Jancy Caffoor-
  

 












நேசத்தீ



என்.......
மனசின் வியர்வைத் துளிகளாய்
வருடும் உன்
நினைவுகளின் ஈரலிப்பு!

ஒவ்வொரு நொடியும்
உன் ஆத்மாவின் வரிகளுக்குள்
கரைந்துருக
பேனாக்கள்
யாகம் புரிகின்றன!

உன்...........
சிறகடிக்கும் வெள்ளைச் சிரிப்பும்
உறவு பற்றும் நெருடலும் - என்
மனசின் மானசீகப் படிவுகளாய்
சிதறிக் கிடக்கின்றன
மனவெளிகளில் !

நம்மைப் பிரிப்பதற்காய்
ஓநாய்கள்
ஒப்பாரி வைக்கையில்.......
நெருங்குகின்றேன்
இன்னும்......இன்னும்!

உன் பிரிவெனக்கு
முள்வேலிதான்!
இருந்தும்.............
உனக்கான சிறையிருப்புக்களால்.....
சுக கீறலில் விழுந்து கிடக்கின்றது
ஆத்மா!

ஸ்நேகிதா!
உனக்குப் புரியுமா!
என் மூச்சுக்குழலுக்குள் முத்தமிடும்
உன் சாரீரத்தில் - என்
சரீரம் பதியமிட்டு
விழுந்துகிடக்கின்றேன்
மானசீகமாய் உன் மனசோரம்!

Jancy Caffoor


 





வெந்த இதயம் பிழிந்து

என்
மனப்பாறைக்குள்
நீயின்னும் உறைந்துதான்
கிடக்கின்றாய்!

சமுக யதார்த்தங்கள்
அக்கினிப்பிழம்பாய் - நம்முன்
பூத்ததில்
சாம்பர் முகட்டிலிருந்து- நம்
மூச்சுக்காற்றுக்கு
முகவரி தேடுகின்றோம்!

நம்
இரவுகளின் இதயம்
சோகத்தின் விசாரிப்புக்களால்...
மரண விளிம்பில் நின்று
இரகஸியம் பேசுகின்றோம்
இதயம் பிளந்து!

நம்
நேசத்தின் தேடலுக்கு
கல்லறை கட்டும் முட்களின்
குருதிச் சுவட்டிலிருந்து
பயணம் குறிக்கின்றோம்
குற்றுயிராகி!

என்
வெந்த இதயம் பிளந்து
உன்னிடமோர் வார்த்தை......
உன்
மௌனத்துடிப்புக்களால் - என்னைக்
கொல்லாதே!


  Jancy Caffoor
         08.03.2013


இனிய அவஸ்தை



ஒவ்வொரு விடிகாலையும்
எனக்குள் நிச்சயமற்றவை!
சங்கூதும் மரண ஓலத்தின்
புலம்பலோடு
விழிக்கும் என் மடல்கள்!

இரவு கண்டெடுத்த கனாக்கள்
உயிரறுந்து
அக்கினி வேரின் நீட்சியாய்
அலைந்து திரியும்!

என் மெலிதான சுவாசத்தில்
வருங்காலம் சுருங்கி
சிறகறுந்து - உன்
உறவின்றி கதறும்!

நாளை
உனக்கும் சேதி வரும்!
வா  என் கல்லறைக்கு!
உன்னால்
கருக்கலைப்பு செய்யப்பட்ட
என்
கனாக்களுக்காய்
ஒரு துளி கண்ணீர் தா!


 Jancy Caffoor
 08.03.2013











யதார்த்தம்

ஆரோரோ 
ஆரிவரோ 

தங்க பௌர்ணமியே 
தாய் மடியில் கண்ணுறங்கு!

தாலி தந்த பூவரசே 
செல்லச் சிணுங்கலடங்கி
சீக்கிரமாய் கண்ணுறங்கு!

அப்பன் இங்கிருந்தா
அஞ்சு காசு கொண்டு வரும்!
நெசமா நானுனக்கு
நெறைய சாமான் வாங்கிடலாம்!

ஆத்துல பசி தீர்க்க
அரிசிக் கஞ்சி ஏதுமில்லை!
நாக்கும் வறளுதப்பா
நல்ல தண்ணி தொலைவிலப்பா!

ஏழையாப் பொறந்தாலே
ஏழு ஜென்மமும் கண்ணீரல்லோ!
பாட்டால படிச்சாக்கா
பட்ட துன்பம் போயிடுமோ!

குடிசைல விளக்கில்லை
குஞ்சு மகன் கண்ணுதானே விடிவிளக்கு!
பகலெல்லாம் வெளிச்சம் தரும்
பகலவனும் நீதான்டா!

நேரங்கெட்ட நேரத்தில
நெடுநேரம் அழுதிட்டா 
சாதி சனம் வீடெல்லாம்
சாமத்திலும் விளக்கெரியும்!

சின்ன நிலவே 
நீயும் அழுதிட்டால்
பெத்த மனம் ரணமாகும்
உன் கண்ணு கூட ரணமாகும்!


Jancy Caffoor