About Me

2013/03/08

இவர்கள்



சோலைக்குள் தீச் சுவாலைகள்
வேலியாய் முளைத்திருக்க..............
வறுமையின் முகவரியாய் இவர்கள்
வாழ்க்கை அடிக்கடி

தோற்றுப் போன வசந்தங்கள்
இவர்களுக்கு....................
வேரறுந்து போனதில்
கண்ணீர்ச் சந்ததியினராய் - தம்மை
அறிவிப்புச் செய்கின்றனர்!

ஒட்டியுலர்ந்த மேனியில்
எட்டியுதைக்கும் என்புகளும்
ஏக்கம் நிறைந்த வாழ்வும்.......
இவர்களின்
உரிமைகளாய் பிசைந்து கிடக்க!

புறப்பட்டு விட்டனர்
பசியின் நிழல்களில் கோலம் போட்டே........
தம்முயிர் அணுக்களில் மரணம் தேக்கி!










No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!