About Me

2013/03/08

நேசத்தீ



என்.......
மனசின் வியர்வைத் துளிகளாய்
வருடும் உன்
நினைவுகளின் ஈரலிப்பு!

ஒவ்வொரு நொடியும்
உன் ஆத்மாவின் வரிகளுக்குள்
கரைந்துருக
பேனாக்கள்
யாகம் புரிகின்றன!

உன்...........
சிறகடிக்கும் வெள்ளைச் சிரிப்பும்
உறவு பற்றும் நெருடலும் - என்
மனசின் மானசீகப் படிவுகளாய்
சிதறிக் கிடக்கின்றன
மனவெளிகளில் !

நம்மைப் பிரிப்பதற்காய்
ஓநாய்கள்
ஒப்பாரி வைக்கையில்.......
நெருங்குகின்றேன்
இன்னும்......இன்னும்!

உன் பிரிவெனக்கு
முள்வேலிதான்!
இருந்தும்.............
உனக்கான சிறையிருப்புக்களால்.....
சுக கீறலில் விழுந்து கிடக்கின்றது
ஆத்மா!

ஸ்நேகிதா!
உனக்குப் புரியுமா!
என் மூச்சுக்குழலுக்குள் முத்தமிடும்
உன் சாரீரத்தில் - என்
சரீரம் பதியமிட்டு
விழுந்துகிடக்கின்றேன்
மானசீகமாய் உன் மனசோரம்!

Jancy Caffoor


 





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!