About Me

2013/03/09

அவள்தான்


இருள் அஹிம்சையில்
இதமாய் மொழி பேசினாள்!

கண் சிமிட்டிச் சிமிட்டியே - நம்
நினைவுகளில் குறும்பைக் கலந்தாள்!

தன் புன்னகையால் - நம்
சோகங்களை ஒற்றினாள் ரம்மியமாய்!

வைரங்களை அள்ளித் தெறித்து - நம்
வறுமை நீக்க உறுதியும் கொண்டாள்!

மழலை முகமதில் மலர்ச்சி தூவி
அழைத்திட்டாள் தன் கரம் நீட்டி!

விடிந்ததும் மறைந்தே போனாள்
அவள்தான் நட்சத்திரம்!

- Jancy Caffoor-
     03.09.2013

2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!