About Me

2013/03/08

ரணம்


என் விழி ஜன்னல் திறந்தே
கிடக்கின்றது
உன் வரவிற்காய்!
இருந்தும் - நீ
இன்னும் இருட்டில்!

இந்த பிரபஞ்சத்தில்- என்
ஜீவிதம்
வெறுப்பேறிக் கிடக்கின்றது
நீயின்றி!

உன்
குரல் தேடித் தேடியே - என்
குரல்வளை கூட
உடைந்து விட்டது!

உன்
சுயரூப ஜனனத்தில் - என்
ஆத்மா மரணித்து விட்டது!
இருந்தும் - என்
ஒவ்வொரு நிமிட நகர்வும்
உன் ஞாபகங்களில்தான்
மயங்கிக் கிடக்கின்றது!

என்னை - நீ
எரிக்கும் போதெல்லாம்
எட்டிப் பார்க்கும் சாம்பர் முகடு
என் தேசத்தின் சிகரமாய்
நெடுங்காலம் ஜீவிக்கும்!

அடுத்தவர்க்காய் - என்
சந்தோஷங்களில் நகம் பிடுங்கும்
உன் விசம்தான்
இப்பொழுதென் கவிக்கு கருவாகின்றது


 - Jancy Caffoor-
  

 












No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!