About Me

2013/03/08

உன்னில் தொலைந்த நான்

பனிச் சலசலப்பில்
பாதையோரம் உதிர்கின்றன - உன்
நினைவுச் சருகுகள்!

என் அகவெளிப் பட்சிகள்
கொட்டிச் செல்கின்றன - உன்
இராச்சியத்தின் தூதோலைகளை!

நீ நடந்து வந்த திக்கெல்லாம்
நீவி நிற்கும் முட்களெல்லாம்
வாந்தியெடுக்கின்றன - உன்னுள்
குந்திக் கொண்டிருக்கும் கோபங்களை!

நினைக்கவேயில்லை - உன்
கனவு வேர்களை
வெட்டிச் சாய்க்கும் கோடாரி நானென!

உன் ரசிப்புக்களால் சிலிர்த்த கவிதைகள்
இன்று
எங்கோ வெறிக்கின்றன
மங்களத்தை தொலைத்தபடி!


   - Jancy Caffoor-
         08.03.2013

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!