About Me

2013/03/08

எங்கிருக்கின்றாய்........



எங்கிருக்கின்றாய்

எகிறிக் குதிக்கும் காற்றிடம்
செல்லமாய் முணங்கினேன்!
பதுங்கிக் கொள்கின்றது - என்
மூச்சோரம்!

எங்கிருக்கின்றாய்

வெட்கமின்றி சொற்களிடம்
கேட்கின்றேன்
சுட்டிக் காட்டுகின்றன - என்
வார்த்தைகளை உடைத்துப் பாரென்று!

எங்கிருக்கின்றாய்

மனசிடம் மன்றாடிக் கேட்கின்றேன்
மெல்ல வருடுகின்றதென்னை
உன்னுள் திறந்து பாரென்று!

எங்கிருக்கின்றாய்

என்னுள்தானா
நான் நீயாகும் போது
நமக்குளேது பிரிவு!


   - Jancy Caffoor-
         08.03.2013











No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!