About Me

2013/03/08

நீ காதல் சொன்ன போது



காற்றுக்குள்ளும் உருவம் முளைத்தது
நீ காதல் தந்தபோது!

முகிற் கூட்டங்கள் மெல்லவுடைந்து
கற்கண்டாய் தரை தொட்டன!

வேருக்குள்ளும் வியர்வை வடிந்தது
உன் பார்வையென்னுள் வீழ்ந்த போது!

என் தாய்மொழி விழி பிதுங்கின
உன் மௌன மொழியிறக்கம் கண்டு!

உன் சிற்ப மேனி வர்ணமாய் வடிந்தென்
கற்பனைக் கொடிகளின் அசைவுகளாய் ஆனது!

ஆசை ஜூவாலைகள் உனை வளைத்தே
களவாய் காவு கொண்டன என்னருகில்!

வாலிப வீரியத்தில் உன்னிளமை
வலிந்தே போதையை நிரப்பிச் செல்கின்றது மெல்ல!

மூங்கில் துளையேந்தி நெஞ்சை வருடுமுன்
விரல்களில் பிணைந்தே கிடக்கின்றேன் ரேகையாய்!

உன் புன்னகை  என்னைக் கடக்கையில்............
பொறிக்கின்றே னுன்னை என் இதழோரம்!

Jancy Caffoor

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!