About Me

2013/04/10

தளிர்கள் - 5


பனித்துளியாய் படர்ந்திருக்கின்றாய்
என்னுள்........................
பரிசுத்தவுன் அன்பே - என்னை
உயிர்ப்பிக்கும் சுவாசமாய் கால முழுதும்!

-----------------------------------------------------------------------------------------

இணையத்தின் வாரிசுகளிவர்கள்.......!
சினக்காதீர்கள் ........
எதிர்காலமே 'சட்' தானென்று
சரித்திரமெழுதும் குடும்பமிதுவோ!
----------------------------------------------------------------------------------------


பூக்களாய் உதிரும் உன்
புன்னகையில்............
காணாமல் போனேனடி அடிக்கடி.......
மழலையின் சுகத்திலே - தினம்
குலைந்துதான் போனேனடி மலரே!

-----------------------------------------------------------------------------------


முத்தம்................!
நமது மொழி!
ஒவ்வொரு இரவும் மீட்டிச் செல்கின்றது
நம்மை!
----------------------------------------------------------------------------------------


என்னுள் விட்டுச் செல்லும்
உன்னை.................
கண்களுக்குள் மறைத்துக் கொள்கின்றேன்
என் பார்வையாய்!

---------------------------------------------------------------------------------------


கனவுகள் கற்றுக் கொடுத்தன காதலை
காதல் கற்றுக் கொடுத்தது வாழ்க்கையை
வாழ்க்கை கற்றுக் கொடுத்தது உன்னை!
நீ கற்றுக் கொடுத்தாய் அன்பை!

------------------------------------------------------------------------------------------


மழைத்தூறல்களாய் மேனி தொட்டாய்
மனசுக்குள் ஈரம் நனைத்தாய்...............
விழியோரம் உன்னை நிறைத்தாய்
பழி சொல்லுமோ ஊர் 
நாம் காதலரென்று!!
----------------------------------------------------------------------------------------


அப்பிள் சாப்பிட்டால்
இதயம் பலமாகும்!

இதயம் பலமானால் - அதனுள்
ஒளிந்திருக்கும் காதல் உணர்வுகளும்
அழகாகும்!!

மனம் அழகானால் - நாம்
காணும் புறமெல்லாம் நம் ரசனையில்
வீழும்!

ரசனைகள் நம் வசமானால்
இனிமையான கவிதைகள் - நம்
பேனா தொடும்!!!
----------------------------------------------------------------------------------------


வெட்கித்து நிற்கின்றேன்
பட்டாம் பூச்சியின் வருடலாய்
என் மீது விழும் ....
உன் நினைவுகளின் தழுவலில்!

--------------------------------------------------------------------------------------------


கனவுக்குள் முகங் கொடுத்தாய்
அடிக்கடி.............
நானோ
என் மன ஊஞ்சலிலல்லவா உன்னை
ஆட்டிக் கொண்டிருக்கின்றேன் 
எப்பொழுதும்!

-----------------------------------------------------------------------------------


உன் கன்னக் கல்வெட்டில்
என்னைப் பொறிக்கின்றேன்
இரகஸியமாய்!
உறவானதும் உரிமையுடன் தந்துவிடு
என்னை....
என் மொத்தப் பக்கங்களெல்லாம் - உன்
முத்தங்களை நிறைத்து!
-----------------------------------------------------------------------------------------


வாழ்க்கை..............!
நம்பிக்கையின் விளை நிலம்!!

எப்பொழுதும் 
தன்னம்பிக்கையில் தன்னைப் பிணைத்து
செயலாற்றுவோர்க்கு மட்டும்!!!!

-----------------------------------------------------------------------------------------


நான் நீயாகும் போது..........
நீ .......நானாகும் போது.......
நாமாய் கவிதைகள்
காதல் சொல்லும் பாருக்கு!

------------------------------------------------------------------------------------------


இனிய வார்த்தைகள் நம் வசமானால்........
உலகத்தின் நேச வாசத்தில் நாம்!



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!