About Me

2013/04/15

பப்பி


இரவின் நொடிப் பொழுதுகள்
இவன் மேனியில் பனி தூவிக் கிடக்கும்!

விழி திறந்து செவி தொடுப்பான்
பிறர் பேச்சொலி தன்னுள் ஏந்த!

நன்றிக்கும் இலக்கணமாய்
அன்புக்கும் வரைவிலக்கணமாய்

வந்துதித்தான் - எம்
வாயிற் படலை காக்கும் சின்னப் பப்பி!

கூலியேதும் கேட்பதில்லை - வீட்டு
வேலியோரம் பிறர் நிழல் தீண்ட விடுவதில்லை!

கடமை காக்கும் நன் வீரன் - தன்
உடமையாய் நன்றியையும் பிணைந்தே வாழ்ந்தான்!

பஞ்சு மேனியில் பாசம் நனைத்து
கொஞ்சி தன் வாலால் கால் நனைக்கையில்

அஞ்சிடாத வீரன் தானென்றே
பறை சாட்டிக் கிடந்திடும் பப்பியிவன்!


- Jancy Caffoor-
     15.04.2013







1 comment:

  1. மறந்து விட்டு போனது யாரு ?

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!