About Me

2013/04/10

இழப்பு




வாழ்க்கை ஓர் ஜெயில் போல்தான். நாம் வரைந்திருக்கும் ஒருசில கட்டங்களை விட்டும் நகர முடியாது. ஆனாலும் நம்மையுமீறி ஒவ்வொரு நிமிடங்களிலும் ஏதோ ஒன்று நடந்து கொண்டுதானிருக்கின்றது. துன்பங்களும் இன்பங்களும் இழப்புக்களும்..........கோபங்களும்!

இந்த உணர்ச்சிகளை கொஞ்சம் ஆற விட்டு மறுநாள் யோசித்துப் பார்த்தோமானால், நேற்றிருந்த கொந்தளிப்பான மனநிலை இன்றைக்கு இருப்பதில்லை. இதுதான் நம் மனதின் போக்கு. அற்பமான இந்த வாழ்க்கையில யாரும் யாருக்கும் எதிரியில்லை. தவறுகளை மறந்து மன்னித்து வாழுவோம்.

ஒவ்வொரு இழப்பும் இன்னுமொரு வெகுமதிக்கான முன்னறிவிப்பு.......! நேற்றைய இழப்பு தந்த மன வைராக்கியத்தில், இன்று எதிர்பாராத வெகுமதி நிச்சயம் கிடைக்கும். ஆனால் நாம்தான் காத்திருப்பதில்லை.

அதனால நாம் வேதனைப்படுகின்றோம். யோசித்து பார்த்தால் இந்த வேதனை கூட முட்டாள்தனம்தான். நமக்கு சரியானது அடுத்தவருக்கு பிழையாக இருக்கலாம். நமக்கு பிடித்தது இன்னுமொருவருக்கு பிடிக்காமலும் போகலாம். வாழ்க்கை எனும் சநநிதியில் யார் யாருடனோ.............எல்லாம் இறை நாட்டமே!









No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!