About Me

2013/04/15

அழகான அவஸ்தை


காதலித்துப்பார்.........

பட்டாம் பூச்சிகளின் தேசமாய்
நம் ஹிருதயம் பிரகடனமாகும்!

வாழ்க்கைக்குள் கனவு மாறி......
கனவுக்குள் வாழ்க்கை விழ்ந்து போகும்!

நிலவின் மடி மீதில் நினைவுகள் கவிழ்ந்து நிசர்சனமாய் உலா வரும்
காதல் வாசம்!

நம்மை ரசித்து ரசித்தே கண்ணாடி தேயும்
விம்பமாய் காதல் நெஞ்சம்
இரசத்தில் ஒட்டிக் கிடக்கும்!

வானவில் இறங்கி தலை வருடும்
தென்றல் சுவாசமாகி
உடலோரம் வேலி போடும்!

நினைவுகளில் ஒரு முகமே சுழன்றடிக்கும்
முத்தங்களின் தீப்பொறிகள்
குளிராய் உருகி உணர்ச்சி தொடும்!

காதலித்துப்பார்.....
கானல் நீரெல்லாம் பனித்துளியாய் உருகும்
கானகம் கூட பூங்காவனமாய் மாறும்!

மார்ப்புத் தசைக்குள் மயக்கங்கள் நிறையும்
வியர்வைத் துளிகளில் நாணம் கரைந்து
பக்கம் வர தேகம் துடிக்கும்!

ஈருயிர்கள் ஓருயிராகி  ....
விரல் தொடும் ஸ்பரிசித்து.....
ஆருயிர் குரல்த்தொனியில் ஆவி துடித்தெழும்!

காதலித்துப்பார்....
கவனம் எல்லாம் திசைமாறும்
பசி கூட மறந்து போதும்

காதலித்துப்பார்...
காதல் அவஸ்தையல்லா.....
அழகான அன்பு!
ஒத்துக் கொள்ளுவாய்
ஓரவிழி பார்த்துக் கொண்டே!

காதலித்துப்பார்..........
தனிமை பறக்கும் - இதயங்களோ
இரம்மியத்தில் துடித்தெழும்!

காதலித்துப் பார்..........

உனக்குள் நானாய்
எனக்குள் நீயாய்
புதுவுலகில் கிறங்கிக் கிடக்க
காதலித்துப்பார்!

2 comments:

  1. ரசிக்க வைக்கும் கவி வரிகளும் தானாக வரும்...
    காதலித்துப் பார்...!

    வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!