About Me

2013/04/10

வலியின் வழியாய்




வலிக்கிறது ..........
உன் வார்த்தைகளல்ல ........செயல்கள்!

என்னை நீ கடந்து செல்லும் போதெல்லாம்
சாதாரணமானவனாய் போ!
எதற்காக வில்லனாய் முறைக்கின்றாய்!

நீ .............
என்னைத் தோற்கடிப்பதாய் நினைக்கும்
ஒவ்வொரு கணப்பொழுதும்..................
தோற்றுப் போவது நீதான்!

எதற்கு பகைமை வேஷம் உன்னுள்........
அது.......................
உன்னைக் கட்டுப்படுத்துவதற்கான முகமூடி!

காலம்......................!

அன்பைச் சாகடித்தாய் சரித்திரமில்லை.....
எழுதிக் கொள் உன்னில்!
நீ என்னுள் பதியமிட்டஒவ்வொரு நினைவுகளும்
விசாரணை செய்யும் உன்னிடம்!

புரிகிறது......
உன் ஒவ்வொரு சினத்தின் சிந்தலும்
ஏமாற்றத்தின் சுவடுகள்!
பார்க்கலாம்.....................
தோற்றுப் போவது நானல்ல
நீதான்!

இது அன்பின் வேள்வி.............
என்னை நானெரிக்கும் தீச் சுவாலையில்
நீ குளிர் காயும் போதெல்லாம்..............
கல்லறைக்குள் வீழ்வது என் காதலல்ல
உன் அறியாமை!

பார்க்கலாம்..............!
காலத்தின் தீர்ப்பில் நம் பரிமாற்றத்ததை
நீ சிதைக்கின்றாயாவென்று!

நீ சுயநலக்காரனாகவே இரு!
என்னுள் இருக்கும் உன்னை அழிக்கும்
கொலைகாரனாய் வேண்டாம்!

உன் பஞ்சனை வேண்டாம்
நீ நடை பயிலும் பாதையோரம் போதும்
எனக்கு!







No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!