About Me

2013/04/11

குறத்தி மகன்



சென்ற மாதம் ஒரு நாள் , காலை நேரம்...........

இடம் : வவுனியா பேரூந்து நிலையம், இலங்கை

பிச்சை எடுப்பதை தன் தொழிலாகக் கொண்ட குறவர்க் கூட்டமும் அந்த பகுதியிலுள்ள பிரபல்ய ஹோட்டலொன்றுக்கு அருகிலுள்ள தரையொன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக பதினைந்துக்கும் மேற்பட்ட தலைகள்..............!

பெண் குறத்திகள் , தமது முதுகில் தொங்க விடப்பட்டிருந்த சேலைத் துணியை நிலத்தில் பரப்பி, தாம் பிச்சையெடுத்த சில்லறைக் காசுகளை அதில் கொட்டி விட்டு மீண்டும் தமது சிறு குழந்தைகளை இடுப்பில் செருகியவாறு பிச்சைத் தொழிலுக்குத் திரும்ப, கணவன்மார்கள் அந்தச் சில்லறைகளை எண்ணி எண்ணி தமது பைகளுக்குள் நிறைத்தார்கள்.

நானோ, அவர்கள் அறியாமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். எனது கல்லூரிக்குப் போக வேண்டிய முச்சக்கர வண்டியின் தாமதம் எனக்கு வசதியானது.

எல்லாப் பணமும் எண்ணி முடிந்ததும், அவ் ஐந்து ஆண்களும் தமது மனைவிமார் கொடுத்த பொற்காசுகளுடன், அப் பஸ் நிலையத்திற்கு எதிராகவுள்ள கடையொன்றை நோக்கி வேகமாகச் சென்றார்கள்....


அந்தக் கடை "சாராயக் கடை"

இவனுகளுக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி, குட்டி குடும்பம்....................நானாக இருந்தால் காசு கொடுத்திருக்க மாட்டேன். தலையைச் சீவி காக்காக்கு போட்டிருப்பன்..

உழைப்பறியாத மாக்கள் இப்படித்தான் பணத்தைச் சீரழித்து நாசமாகிப் போவார்கள் போல!





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!