About Me

2013/04/10

ஊனம்



இருள் மெல்ல கவிழ ஆரம்பிக்கின்றது இந்நேரம்....

மாலை 5.20.......

காற்றில் சலங்கையை உதிர்த்துக் கொண்டிருந்தன பறவைகள். வீட்டு முன்றலில் அகலமாய் தன் தோள் பரப்பிக் கொண்டிருந்த வேப்ப மரக் கொப்பிலிருந்தவாறு குயிலொன்று இனிமையாய் கூவிக் கொண்டிருந்தது. முருங்கை மர சின்னஞ் சிறு இலை இடுக்கின் வழியாக அணில் இரண்டு ஓடிப் பிடித்துக் கொண்டிருந்தன. முந்தநாள் எட்டிப் பார்த்த ரோசாப் பூவொன்று காற்றின் மிரட்டலில் தன் இதழ்களை உதிர்த்துக் கொண்டிருந்தது.

இயற்கையின் அழகை தரிசித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைய எத்தனிக்கின்றேன். வீதியில் தென்பட்ட காட்சியொன்று மனதை சுண்டியிழுக்கின்றது.

"ஆரோக்கியமான அழகான கணவனொருவன், தன் கால் ஊனமான மனைவியை கையில் ஏந்தியாவாறு நடந்து கொண்டிருந்தான். என் கண்கள் பனித்தன. இவ்வுலகில் அன்பை மட்டும் யாசிக்கின்ற, ஆண்களும் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது மனசு அவர்களுக்காக பெருமிதப்படுகின்றது,

"மன ஊனத்தை விட கால் ஊனம் ஒன்றும் பெரிய விடயமில்லை" என்பதைப் போல் அந்த சகோதரியும் அவரிடமுள்ள தன்னம்பிக்கையின் சில துளிகளை என்னுள் விட்டுச் செல்கின்றார்................

"நான் இனி எதற்கும் அழப்போவதில்லை"

மனம் லேசாக , புதுப்பிறவி எடுத்தாற்போல வீட்டினுள் நுழைகின்றேன்.............

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!