About Me

2013/04/10

நீ மட்டும்


என் விரல்களில்
உணர்ச்சிகள் செருகி
எழுதக் கற்றுக் கொடுத்தவன் நீதான்!

விழிகளில் உனை நிரப்பி
எனக்குள் உன்னைக் கருவாக்கி
எழுதக் கற்றுக் கொடுத்தவனும் நீதான்!

இன்று

உனக்காக எழுதியதில்
உலகெங்கும் ரசிகர் கூட்டங்கள்
உன்னைத் தவிர!

- Jancy Caffoor-
    09.04.2013

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!