About Me

2013/04/10

உன்னுள் நானாய்


என் தேசம் தொலைத்து வந்தேன்
திசையெட்டும் மறந்து நின்றேன்

உணர்வறுந்தும் நின்றேன்
உடமையும் இழந்து நின்றேன்

அகதி நானென்றே
ஆர் ஆரோரா
இதிகாசம் தேடுகையில்

வந்தாய் - என்னைத்
தாலாட்டும் அன்னையாய்!

காமம் தேடும் காதலிலே
நீயோ என் பாசத் தாயாய்!

என் இழப்புக்களுக்கீடாய்
இறை பரிசு நீயென்றே அறிவிக்கின்றேன்
என் வாழ்வியல் பயணத்தில்!

- Jancy Caffoor-
    09.04.2013

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!