About Me

2013/04/10

ஆட்டோ கிராப்


அது.......பதினாறு வயசு நிரம்பிய பருவம்!

வெறும் கனவுக்குள்ளே மனதைக் கிறங்க வைத்து, அழகான உலகத்தில் அமிழ்ந்து வாழ்ந்த காலம். திரைப்படத்தில காணும் அழகான நடிகர்களுடன் ஜோடியாய் இரகஸியமாய் இணைந்து கற்பனை உலகில் சொர்க்கித்துக் கிடந்த காலம்...........................

பின்னால சைட் அடிச்சு திரிஞ்ச பசங்களயெல்லாம், திரும்பி பார்க்காம கொஞ்சம் திமிரோடு நடந்த பருவம்!

வந்த தூதுக்களையெல்லாம் சுக்கு நூறாக்கி துடிக்க வைத்த காலம்................

அந்நாட்களில்...........!

எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு ஜஸ்பழக் கடை இருந்தது...அங்கே ஒரு பையன் வேலைக்குச் சேர்ந்தான்..என்னை விட அவன் ஆறு வயது மூத்தவன். அவன் ரொம்ப அழகு,............நான் கற்பனையில் லயித்திருந்த அந்த கனவு நாயகனைப் போலவே,

ஆனால் அவன் கூட ஒரு நாளும் பேசியதில்ல......நான் அவனைக் கடந்து போகும் போதெல்லாம் என்னை பார்த்து ஒரு லுக் மட்டும் விடுவான்....
அவன் மீசையோரம் கொஞ்சம் புன்னகைகளையும் சேர்த்து!

அவனும் அவன் வேலை செய்யும் கடை முதலாளியின் பொண்ணும் லவ்வுன்னு செய்தி காதுக்கு எட்டின பிறகு (அந்த பொண்ணு என் நண்பி) அவன நான் கொஞ்சம் அதிகமாக வாச் பண்ணினேன்.....

அடப் பாவி.........

அவன் கொஞ்ச நாள்ல என்னையே அவுட் ஆக்கிட்டான்.

(அப்போ அந்த பொண்ணு லவ்..என்னாச்சுன்னு தெரியல)

கொஞ்சம் கொஞ்சமாக அவன்ர பார்வை, சிரிப்பு, அந்த அன்ப நானும் ரசிக்கத் தொடங்கினேன். அவன் யாரு, அவன்ர பின்னணி என்ன எதுவுமே அப்ப தெரியல......
அவனின் பார்வைக்குள் என்னை நாட்ட அடிக்கடி அவன் கடைப் பக்கமாக போவேன்.ஏதாவது பேசுவான்.......
பதில் சொல்ல மாட்டேன்...என் மௌனத்தை அவனும் ரசிப்பான்......இப்படியே ஆறு மாதம்..............!

யாருக்கும் எங்க உணர்வு தெரியாது!

இது லவ்வா......இல்லையா....தெரியல! நாங்க ஒரு வார்ததை கூட பேசினதில்லை...ஆனால் ஒருவர ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம்.அவனப் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல மனசுக்குள்ள பீலிங்ஸா இருக்கும். அவனும் வாசலுக்கு வந்தா எங்க வீட்டு வாசலையே நோட்டம் விட்டுக் கொண்டு நிற்பான்.

எங்க அப்பா ஒரு பொலிஸ்காரர். ஸோ...........ரொம்ப என்னைக் கட்டுப்படுத்தி இருந்தேன்......
ஒருநாள் எங்க வீட்டு கதவில இருக்கிற சிறு துவாரம் வழியாக அவன பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அப்பா வந்துட்டார். வசமாய் மாட்டினேன். நான் ஏறியிருந்த இடத்தில ஏறி அப்பாவும் றோட்ட பார்த்தார்.

அவன்......................

எங்க வீட்டு வாசலப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அப்பா என்கிட்ட ஒரு வார்ததை கூட பேசல....அந்த மௌனம் என்னை ரொம்ப கஷ்டப்படுத்திச்சு. அம்மா சாடைமாடையாய் அவனுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு புற கௌரவத்தை எடை போட்டாங்க..

யாரும் எங்க அன்ப புரிஞ்சு கொள்ளல.....அது காதலா இல்ல பருவக் கிளர்ச்சியா........எனக்கும் தெரியல!

மறுநாள் அவன் வேலைக்கு வரல...........

அந்த முதலாளிக்கு அப்பாதான் ஏதோ சொல்லியிருக்கணும். ...

அவன்ர பிரிவு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. சகிக்க முடியல. வெளிப்படையாக அழக் கூட முடியல. அழுதா அப்பா அடிப்பாருன்னு பயம். மௌனமா மனசுக்குள்ள போராடி காலத்தின் போக்குல அந்த துயரத்தில இருந்து மெல்ல மெல்ல விடுபட்டேன். அதுக்குப் பிறகு அவனச் சந்தித்த போது, ஏதோ என் கூட பேச பின்னால விரட்டிக் கொண்டு ஸ்கூல் கேட் வரை வருவான். பட்...நான் அப்பாக்கு பயந்து அவன நிமிர்ந்து கூட பார்க்கல. ஒருநாள் அவன நான் புறக்கணிச்சதால எங்க ஊர விட்டே பொயிட்டான். இந்த செய்தியை அவன் தன் தம்பி மூலமாக எனக்கு சொல்லியனுப்பினான். இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு என்ன நடந்துச்சு என்று எனக்குத் தெரியல..........பட் எப்போதாவது அவன் என் ஞாபகத்தில எட்டிப்பார்த்து விட்டுப் போவான்................

(சேரனுக்கு மட்டுமல்ல, நமக்குள்ளும் எத்தனையோ ஆட்டோ கிராப்கள்)

இது சத்தியமா கற்பனைதான்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!