About Me

2013/04/11

உளிகள்



மன எண்ணங்கள் வேறுபடும்போது முரண்பாடுகள் தோன்றி எதிரிகளாக உருவாக்கப்படுகின்றனர்.

எதிரிகளை நாம் சமாளிக்கும் போது, வாழ்வில் பல சவால்களை எதிர்கொள்ளும் அனுபவங்கள் கிட்டும்.
--------------------------------------------------------------------------------------------

பனை உரசும் காற்றின் சுகந்தத்தில் பால்யம் கரைத்த மங்கை நான்

--------------------------------------------------------------------------------------------



அன்புக்கு முன்னால் அறிவியல் கூட தோற்றுப் போய் விடுகின்றது.

காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளும் என்பது அறிவியல் உண்மை. இது நான் கற்றது. கற்றுக் கொடுப்பது!

ஆனால் ............!

ஒத்த மன எண்ணமுடையோர் ......................

( அவர்கள் காதலராக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி )

வாழ்வில் ஒருபோதும் வேறுபடாமல் பிரியால் இணைந்தே இருக்கின்றனர். இவர்களுக்கிடையிலான வலிமையான அன்புசார் கவர்ச்சி விசைகள் காலவெளியில் ஒருபோதும் விரயமாவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------


உன் அருகாமையில் உறைந்திருக்கும் ஒவ்வொரு நொடிகளுமே, புதிதாய்ப் பிறப்பெடுக்கின்றேன். உன் பேரை மட்டும் உச்சரிக்கும் உன்னவளாய்!
-------------------------------------------------------------------------------------------------

நீ பூவையென்பதால்..........
தினமுன்னை பூக்களால் அர்ஜிக்கவா!

நீ பாவை என்பதால்.........
தினமுன்னை பாக்களால் பரவசமூட்டவா!
--------------------------------------------------------------------------------------------


காதல் செய்து ஊடல் தந்தே
காக்க வைத்தவர் காணாமல் போய்
தாமதித்து நம்முன் வருகையில்......!!

அடடா...........

ஆத்திரம் கூட அழகான அன்புதான்.........!!
----------------------------------------------------------------------------------------

மறதிதான் கவலைகளுக்கான மருந்து


- Ms. Jancy Caffoor -

1 comment:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!