About Me

2013/05/22

மரணத்திலாவது


அன்பு தேடியலைந்தேன்
பாசம் தொலைத்த வெற்றுடல்களில்
சுயநலங்கள் சால்வை போர்த்திக்கிடந்தன!

நானும் விடுவதாயில்லை
என் யாக்கைக்குள் சிறு பருக்கையாவது
அன்பு கிடைக்காமலா  போகும்!

நடந்தேன் தொலைநோக்கி நடந்தேன்
தூரத்தே சிறு சமிக்ஞை
கரங்கள் அசைந்து அழைத்தன என்னை!

அன்பு கிடைத்ததென்ற போதையில்
கற்களும் முற்களும் கால்களைப் பதம் பார்க்க
புதுப் பிறவியெடுத்தோடுகின்றேன் அங்கே!

அங்கே..................

புகைந்து கொண்டிருக்கின்றன மனித உடல்கள்!
மயானத்தின் சமாதிகளுக்கிடையே ஆத்மாக்கள்
அழைத்துக் கொண்டிருந்தன என்னை!

மெல்ல புன்னகைத்தேன்
தேடியலைந்த அன்பு கிடைத்த மமதையில்!

மெல்ல மெல்ல கண்கள் சொருகுகின்றன
அட
நானும்  மரணிக்கின்றேனா!

என்னைச் சூழ்ந்திருப்போர் கதறும் ஓசை
காற்றினில் இழைந்து கரைய!
அட அன்பு கிடைத்துவிட்டது
மரணத்திலாவது!!


- Jancy Caffoor-
     22.05.2013




2 comments:

  1. அன்பைத் தேடி சாவதை விட, அன்பை கொடுத்தால்...?

    ReplyDelete
  2. அன்பிலாதாரின் வலியதும்
    அன்பு ஈயப்படும் போது
    அகத்தினில் வரும் மகிழ்வும்
    அன்பினைச் சுவாசித்ததும்
    நேத்திரங்களில் ஏற்படும் மயக்கும்
    சிறப்பாக - மிகச் சிறப்பாக
    தான் அன்பிலாதவள் போலும் நின்று
    எழுதியுள பாங்கு மெச்சத்தக்கது....!
    //அன்பு கிடைத்ததென்ற போதையில்
    கற்களும் முட்களும் கால்களைப் பதம் பார்க்க
    புதுப் பிறவியெடுத்தோடுகின்றேன் அங்கே!// அசத்தல் டீச்சர்! - வாழ்த்துக்கள்!

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!