About Me

2013/05/04

ஏன் தானோ


வேர் தந்த பெற்றோர் மறுத்து
நேற்று முளைத்த காதலோடு சரசமாடி
உற்றார் வெறுத்து நிற்போர் மனசு
பாழடைந்த கல்லறைச் சாலை!

தொப்புள் நாண் அறுத்தெறிந்து - தமக்கென
தொட்டில் குழந்தை தான் வார்ப்போர்
பாவத்தின் சிலுவைதனை போர்த்துகின்றனர்
தம் பரம்பரைக்கே!

மலர் வாசம் வீசும் பாசம் - என்றும்
நமக்குள் அழகான பசுமைக் கோலம்
வளமான வாழ்க்கை வாழ
பெரியோர் ஆசி வேண்டுமென்றும்!

- Jancy Caffoor-
      04.05.2013

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!