About Me

2013/06/19

அழகு



நேற்றைய அனுபவங்களை , நாளைய எதிர்பார்ப்புகளுக்காக உழைக்கும் உழைப்பே இன்றைய வாழ்க்கை          


------------------------------------------------------------------------------------------------


தம் மழலையுலகில் எனை வீழ்த்தி
புன்னகைச் சிதறல்களால் மனதையீர்த்து நிற்கும்
குட்டிச் செல்லங்கள்.........
அஸ்கா + சஹரிஸ் பாப்பாக்கள்!
---------------------------------------------------------------------------------------------



சின்னச் சின்ன சம்பவங்கள்தான் பெரிய சரித்திரங்களாக மாற்றப்படுகின்றன. நாளைய சரித்திரம் நம்மைத் தூற்றாதிருக்க, நமது சம்பவங்கள் நல்லவையாகவே இருக்கட்டும்

------------------------------------------------------------------------------------------------    

இன்று நாம் தவற விடும் சந்தர்ப்பங்களுக்காக, நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அன்பளிப்புத்தான் "நாளை" எனும் நாள்!
--------------------------------------------------------------------------------------------------

வாழ்க்கையை ஒருபோதும் மன அழுத்தங்களுக்கு இரையாக்காதீர்கள். ஏனெனில் அதிலிருந்து நம்மால் இலகுவில் வெளியேற முடியாது. இயல்பாய் இருப்போம். இதமாய் பழகுவோம்..
----------------------------------------------------------------------------------------------------

யாரோ நம் வாழ்வைப் பின்தொடர்பவர்களாக வரலாம். எனவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வும், எப்பொழுதும் அடுத்தவர் விரும்பக் கூடிய ஒன்றாகவே இருக்கட்டும்!
----------------------------------------------------------------------------------------------------

நாம் நாடிப் போகும் நட்புக்களை விட, நம்மைத் தேடி வரும் நட்புக்களில்தான் உண்மையான அன்பும், அக்கறையும் அதிகமாக இருக்கும். இந்நட்புக்களே நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரும்.

----------------------------------------------------------------------------------------------

என்னையும் உன்னையும்  சுற்றும் பூமியாய்!
கண்ணெதிரே இதழ் விரிக்கும் சின்னப் பூமகள் !
-----------------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------

பிரச்சினைகள்தான் வாழ்க்கை!
புரிந்து கொண்டோர் - தம் வாழ்வை
தாமே காத்துக் கொள்கின்றனர்!
----------------------------------------------------------------------------------------



- Ms. Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!