2013/06/19
எல்லாம் முடிந்து போனது
நேற்றிரவுக் காற்றில்
உதிர்ந்து பறந்தன சருகாய் கனவுகள்!
உறங்கமறுத்த விழிகளோ
இறந்து கிடந்தன விரக்தியில்!
சில காலம் சிறகடித்த ஆசைகள்
சின்னா பின்னாமாகியதில்
கண்ணீர்க் கசிவுகள் முட்கம்பிகளாய்
கன்னங்களைச் சிதைத்தன!
"நீயா பேசியது"
பாடலிப்போ
எனக்கும் பிடிக்கும்
உனக்குப் பிடித்த என் மௌனம்
இனியென் பாஷையாகிப் போனதில்
ஊமையாகி நிற்கின்றேன்
உன்னைத் தொலைத்தவளாய்!
உன் தேவதை நானென்றிருந்தேன்
நம் இடைவெளிகள் மறந்து
தவறுகள் உணர்த்தப்பட்டதில்
பறக்கின்றன துன்ப விட்டில்கள்
என்னைச் சுற்றி!
- Jancy Caffoor-
19.06.2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!