About Me

2014/12/31

பேசும் வரிகள்



நல்ல விசயங்களைச் சொல்லும்போது காது கேட்காத பலர் அர்த்தமற்ற விடயங்களுக்கு ஆவலோடு வாய் பிளந்து நிற்பார்கள். இங்கு உண்மை என்பதை விட சுவாரஸியமான பேச்சாற்றலுக்குத்தான் மதிப்பதிகம்!
சுவாரஸியம் பிறர்
மனதைக் கவரும் ரசம்!
------------------------------------------------------------------------------------------

வேண்டாமென்றேன்
வேண்டுமென்றான்!
வேண்டுமென்றேன்
வேண்டாமென்றான்!!
முரண்பாடுகள் தலைகாட்டும்போதெல்லாம்
சலனப்படும் மனசு - மெல்லத்
தட்டுகின்றது அன்பை!
அன்பின் வீரியத்தில் காலாவதியான பிடிவாதங்கள்
உடன்பாடாகி....
உருகியோடுவது கூட
இயற்கையின் தழுவல்கள்தானே!
--------------------------------------------------------------------------------

நம்பிக்கை மனதில் இருக்கும்வரை
இருட்டுக்கு அஞ்சவில்லை.............
இன்று போனால் என்ன
நாளை விடியல் வருமென்ற நம்பிக்கையில்...
காலங்களைக் கடந்து செல்லத் தயார்!
2015..........
எனக்கு சவாலான ஆண்டு !
பிரார்த்தியுங்கள் என் தன்னம்பிக்கை அதிகரிக்கட்டும்!
போராட்டங்கள் முரசு கொட்டுமென் வாழ்வில்
இத்தரிப்பிடம் ................
ஓரளவாவது அமைதி தரட்டும்!



- Ms. Jancy Caffoor -
      31.12.2014

நிலாக்கள்




வீடு என்பது வெறும் சிமெந்தும் கற்களும் குவித்துக் கட்டப்பட்ட உயிரற்ற இடமல்ல..உயிர் ஜீவன்கள் நடமாடும் இல்லம். அதிலும் வீடுகளில் சின்னப்பிள்ளைகள் இருந்துவிட்டால் அமைதி, வெறுமையங்கு காணமல் போய்விடும். நாம் நம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கே அங்கு நேரமில்லை.. அவர்களின் செல்லக் குழப்படிகள் நம்மை சில நேரம் ஆத்திரமூட்டினாலும்கூட, நமது கோபத்தை மறந்தவர்களாக அப்பிஞ்சுகள் நம்மைத் தேடி வந்து கொஞ்சு மழலையில் தமது அன்பை வௌிப்படுத்தும்போது நாமும் எல்லாவற்றையும் மறந்துதான் போகின்றோம்.

சின்ன நிலாக்கள்
அழகான அன்பின் ஸ்பரிசம்....

அனுபவிக்கும்போது ஆயிரம் விண்மீன்கள்

சிறகடித்திறங்கும் நம் மில்லத்தில் ஔி கொடுக்க!

- Jancy Caffoor-
  30.12.2014

2015


2014 வருடத்தின் கடைசி நாட்களில் நாம்...

விடிந்தால் விடியலின் பசுமையில் புதிதாகப் பிறக்கும் 2015.....

நாட்கள் எவ்வளவு வேகமாகப் பறக்கின்றன. கண்மூடித் திறப்பதற்குள் 2014 நிறைவுறும் தருணம்....

2014 ன் காலடிச் சுவட்டினுள் எத்தனை நிகழ்வுகளை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கின்றோம்!

அவை இன்பமாக, துன்பமாக, ஏக்கமாக, எதிர்பார்ப்பாக. இலட்சியமாக. வெற்றியாக. தோல்வியாக. முரண்பாடாக நம்மைப் பின்தொடர்ந்திருக்கின்றன...

வாழ்க்கை என்பது அழகான கனவல்ல...முட்களும் மலர்களும் நிறைந்த பயணப்பாதை! அப்பாதைவழிப் பயணத்தில் நாம் கண்டெடுத்த அனுபவங்கள்தான் நம்மைப் பதப்படுத்தி வழிப்படுத்தி பயணத்தின் போக்கை சீர்படுத்துகின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இந்த வருடத்தின் கடைசிநாளில்.....

நானும் என்னை ஒருகணம் புரட்டிப் பார்க்கின்றேன். என் வாழ்வில் நடைபெற்ற அனைத்தையும் ஒரு கணம் ஞாபகச்சுழற்சியில் ஓடவிட்டு, நல்லவற்றை மட்டும் ஏந்திக் கொண்டு 2015ல் நடைபயில தயாராகிக் கொண்டு விட்டேன்....மனக் கஷ்டங்கள் தந்த தீயவை மறதிக்குள் கருகிப் போகட்டும்!

இன்ஷா அல்லாஹ்!

மாற்றங்கள்தான் வாழ்க்கை. மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளும்போதுதான் ஏமாற்றங்களைத் தவிர்க்கின்றோம்..

இந்த 2014ல் என் வெற்றிகளுக்காகப் பிரார்த்தித்தும் மனச் சங்கட காலங்களில் எனக்கு நம்பிக்கையூட்டி வழிப்படுத்திய  அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள்...

அஸ்கா....

2015ல் தனது கல்வி வாழ்வைத் தொடங்கவுள்ளாள்...அரும்பொன்று மெல்ல இதழ் விரிக்கும் அந்த அழகும் பசுமையும் நான் ரசிக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

மனநெருக்கடி நிலையில் என் ரணங்களுக்கு ஒத்தடமாகவிருந்த என் தாயையும் இந்த வருடத்தில் மட்டுமல்ல என்றும் மறக்க முடியாது. என் தாயின் ஆரோக்கியத்திற்கும் துஆ கேட்கின்றேன்..

நானும், என்னைச் சுற்றியுள்ள உறவுகள், என்னை நேசிக்கும் நட்புக்கள் யாவரும் இப்புத்தாண்டில் ஈமானிய எண்ணங்களுடன் மனநிம்மதியும், வெற்றிகளும் பெற்று வாழ வேண்டும் எனும் பிரார்த்தனைகளை அல்லாஹூ தஆலாவிடம் சமர்ப்பித்தவளாக...

என் மனசுக்குள் இன்னும் சிறுசிறு துளிகளாய் சிதறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் நிறைவேற்றப்படுகின்ற தளமாய்  2015 அமையட்டும் எனும் பிரார்த்தனை கலந்த எதிர்பார்ப்புடன் நாளைய விடியலுக்காக காத்துக்கிடக்கின்றேன்!

- Jancy Caffoor-
  30.12.2014

2014/12/29

வானவில்



அடர்ந்த கானகமாய்
படர்ந்திருந்த வானம்.....
இன்று மெலிதாக பனி தூவி ஔி சிந்திச் சிரிக்கின்றது
அழகாய்!
கார்மேகம் கண்ட விழிகள்
சூரிய இறகுகளால் இன்று ஸ்பரிசிக்கப்படும்போது
மெழுகாய் உருகிய மனம் கூட சற்றுத் தரித்து
களிப்போடு.........
சில நொடிகளாவது ஔி பரப்பிய அந்த வானுக்கு
சபாஷ்!
ரேகைகள் ...........
வர்ணமிழந்தாலும் அழகுதான் - அதன்
சுதந்திர பூமியில்!
-------------------------------------------------------------------
பிரிவுகள்..........
உறவுகளை அறுத்துவிடும் ஆயுதமல்ல
அந்த வெறுமையில்...
இதயவலியின் ஓசையுடன்
உண்மை அன்பை வௌிப்படுத்தும்
அளவுகோல்!
----------------------------------------------------------------------

போராட்ட வாழ்க்கை தினமும்
வேரற்ற மரமாய் நானும்.....
----------------------------------------------------------------------
உண்மைகள் என்றோ ஒரு நாள் வௌிச்சத்திற்கு வரும்போது
பொய் சொன்ன உதடுகள் மௌனித்து விடுகின்றன.....



- Ms. Jancy Caffoor -
          29.12.2014

2014/12/03

வசந்தத் திருவாழ்த்துக்கள்

வாழ்க்கையில் பலரைச் சந்திக்கின்றோம். ஆனால் சிலரே நம்மைச் சிந்திக்க வைக்கின்றார்கள். அதிலும் ஒருவரே நம் வாழ்க்கைப் பாதையின் தடத்தை திரும்பிப் பார்க்க வைக்கின்றார். அந்த ஒருவருக்கு நாம் வழங்கும் அன்பளிப்பு வெறும் அன்பே!


அந்த அன்பு ............

சமுத்திரங்களையும் சுருக்கலாம். வெயிலையும் குளிர்விக்கலாம். மனதின் ஸ்பரிசம் அன்பால் ஆக்கிரமிக்கப்படும்போது எல்லாமே நம் சிந்தனையின்றி இயல்பாய் மாறி விடுகின்றது.
              பாசமாய்....
                          நட்பாய்!..


                                                     இவன்........!

என்னை நானே திரும்பிப் பார்க்க வைத்தவன். நல்லவன் எனும் அடைமொழிக்கும் அப்பால் கோபக்காரன். ஆனாலும் இளகிய மனசு நேசக்காரன். அன்புக்குள் அடங்கிக் கிடக்கத் துடிக்கும் குழந்தை மனசுக்காரன்!

இருந்தும்...


எங்கள் கோபமும் திமிரும் அன்பின் முன் காணாமல் போய்விடும் அதிசயம்தான் எங்கள் அறிமுகத்தின் ஆயுளை இன்னும் நீடித்து வைத்திருக்கின்றது..சின்னச்சின்னக் காரணங்கள்தான் எங்கள் செல்லச் சண்டைகளின் மூச்சொலியாய் பல பொழுதுகளில் ஓலமிட்டாலும்கூட , எங்கள் மௌனம் சில நொடிகளில் காய்ந்து விடுகின்றது  அன்பின் ஈரலிப்பினால் ! அதுமாத்திரமல்ல எங்கள் முரண்பாடுகளும் அவிழ்ந்து இருவரும் ஒன்றுமறியாத அப்பாவிகளாய் மாறிவிடுகின்றோம்  மீண்டும் இயல்பாய் பேச!





இதுதான் அன்பின் பரிமாணம் என்றால்
எங்கள் அன்பும் தன் ஆயுளைக் கூட்டிக் கொள்ளட்டும்!





















மெளனத்தைத் திறக்கும் சாவி அன்பென்றால்................................
அந்த அன்பின் தித்திப்பில் உதடுகள் வார்த்தைகள் மறந்திருப்பதுகூட சுகமே!

அமீர் மொனா........
அந்த அன்பானவனுக்கு இன்று  (2014. 12. 12 ) பிறந்தநாள்!

அவன் வாலிபத் தெருக்களின் பசுமை என்றும் சந்தோச பனித்தூறல்களுடன் சங்கமிக்கட்டும்...
அவன் நேச நெஞ்சக்கூட்டில் என் ஞாபக அலைகள் என்றும் தஞ்சம் கொள்ளட்டும்....
அவன் வாழ்வில் சந்திக்கும் தடைகள் யாவும் தூசாகி பறந்து போகட்டும்..
அவன் எப்போதும் வெற்றியாளனாய்........வெற்றிக்கு மட்டுமே சொந்தக்காரனாய் இப்புவியில் முகம் காட்டட்டும்...

தேக ஆரோக்கியத்துடன்  நல்  வாழ்வும்  சீர் பெற்று விளங்க அல்லாஹ் அருள்புரிவானாக!

வாழ்த்துவோம் நாமும் அவரை.............!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!






You Know You're special
to me, 
but your Birthday is a good time to say, "Thanks for everything you do in your own special way" 
 - Jaanu-












May evertthing happy
and everything bright
be yours on your birthday
from morning till night.
And then through the year may the same thing hold
                 true
so that each day is filled with life's best things for you

- Jamee -



2014/12/02

Action Research


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கான ஆய்வு மாணியங்கள் (Research Grants) - 2013
-------------------------------------------------------------------------------------------
இசுருபாய, கல்வி அமைச்சின் கட்டிடத்தில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டம் தமிழ், சிங்கள , ஆங்கில மொழிகளில் 29 ஜூலை தொடக்கம் 24 திசெம்பர் வரை ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கிளை, கல்விப் பணிப்பாளர் Madam C.M.B.J. திலகரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

தமிழ்மொழியில்  தெரிவு செய்யப்பட்ட 20 பேர்களில் நானும் ஒருத்தி என்பது மகிழ்வுக்குரிய செய்தியே!  இக்காலப்பகுதியில் எமக்கான வழிகாட்டலும், ஆலோசனைகளும் -

பேராசிரியர்  எம். கருணாநிதி அவர்கள்
பேராசிரியர் T. தனராஜ் அவர்கள்
டாக்டர் எஸ் குகமூர்த்தி அவர்கள்
டாக்டர் ரீ கலாமணி அவர்கள் 

என்போரால் சிறப்பாகக் கிடைத்தன. இவற்றுடன் சிறப்பான போசன உபசரிப்பு, தங்குமிட வசதி என்பவற்றுடன் செயல்வழி ஆய்வுத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் ரூபா ஐயாயிரமும் வழங்கப்பட்டது.

எங்கள் கற்பித்தல் சேவையில் எழுகின்ற பிரச்சினைகளை நாமே திட்டமிட்டுத் தீர்த்து வைக்கின்ற உளப்பாங்கும், பிள்ளைகளின் தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்பட, பொருத்தமான கற்பித்தல் உபகரணங்கள், கற்பித்தல் முறைகளை நாமே தயாரித்து வழங்கக்கூடிய ஆற்றலும், மாணவர்களை உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கும் மாணவர் அபிவிருத்தி கல்விமுறையை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய ஆளுமையும் எமக்குக் கிடைத்தன என்றால் மிகையில்லை....

இச்செயல்வழி ஆய்வின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 28. 11.2014 ந்திகதி இசுருபாய, பத்தரமுல்ல கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள்....

தமிழ்மொழியிலான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் பேராசிரியர் T. தனராஜ் , ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கிளை, கல்விப் பணிப்பாளர் Madam C.M.B.J. திலகரத்ன அவர்களுடன்...........


  கல்வி அமைச்சின் கேட்போர் கூடம்




எனது தந்தை



இச்செயல்வழி ஆய்விற்காக என்னால் கண்டறியப்பட்ட கற்பித்தற் செயற்பாடுகளுக்கான சில புகைப்படங்கள்..

தலைப்பு - 
அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தின் தரம் 9 வகுப்பிலுள்ள மாணவர்களின் மூலகக்குறியீடுகளை எழுதும் திறனை மேம்படுத்தல்

பங்குபற்றிய மாணவிகள்


மூலகக்குறியீடுகள் - கிளே ஆக்கம் ( மாணவர்கள்)



அணுவெண்களை வழங்கி மூலகங்களைக் கண்டறியும்
 செயற்பாடு


மூலகங்களை வழங்கி அணுவெண்களைக்  கண்டறியும் 
 செயற்பாடு



மூலகங்களைக் கண்டறியும் லூடோ விளையாட்டு
(நான் கண்டறிந்த விளையாட்டு )



கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள்


எனது செயல்வழி ஆய்வு சிறப்பாக வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றிகள்...

- Ms. Jancy Caffoor -







Fatima Adam

Fatima Adam - திருநெல்வேலி
30.11.2014
-------------------------------------------

வாழ்க்கை எனும் சோலையில் இன்றைய தினம்  வசந்தப் பூக்கள் உங்களுக்காக கரகோஷிக்கின்றன. தென்றலும் இயற்கையும் புன்னகை சிந்தி உங்கள் வளமான வாழ்விற்கான மானசீக ஈர்ப்பை பரப்பிக் கொண்டிருக்கின்றன எம்முடன் இணைந்து!.

ஆம்.........

இன்று உங்கள் பிறந்த தினம்!

உங்கள் முகமின்னும் நான் காணவில்லை. ஆனால் ஓர் தினம் நம் குரல்கள் ஒலியலையில் கலந்து கசிந்திருக்கின்றன. நமக்குள் அதிகம் பரிச்சயமில்லை. ஆனாலும் மனதில் உங்கள் மீதான அன்பின் அதிர்விருக்கின்றது.........

காலங்கள் மாறலாம்......
காட்சிகளும் மாறலாம்.....
ஆனால் மனதில் பதிக்கப்படுகின்றன அன்பும், நட்பும் நிலையானது!

உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சவால்களையெல்லாம் அல்லாஹ்வின் அருளால் திறமையுடன் வெற்றி கொண்டு, மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன்....

                                           






2014/11/19

அன்புக்குமுண்டோ................





தேசங்களுக்கிடையில்....
எல்லை தொடா நெடுங்கடலும், 
தடுப்புச் சுவர் விரிக்கா நீல வானும் 
எம் நேசத்திற்கும் பால மாகட்டும்
இறையாசியுடன்......!


திருமண வாழ்த்து




உறவுகள்








         அஸ்கா











அஸ்கா


பூவொன்று மலர்ந்ததுவோ எம் அகம்தனில் அழகாக....
குறும்புகளை கரும்பாக்கு மிந்த அரும்பின் குதுகலத்தில் .........
நேரங்கள் நகர்வது தெரிவதில்லை கடிகாரத்திற்கே!..
பாசம் காட்டும் மழலை மலர்ந்த நாளை (12.11.2014)...
எம் வாழ்த்துக்களின் செறிவில் தித்திக்கட்டுமே!
அல்லாஹ்வின் கிருபையால் அஸ்கா எல்லாச் செல்வமும் பெற்று வாழ நாமும் வாழ்த்துவோம்!

பேசும் மனம்



முகில்த் துளிகளின் நீரோட்டம்
மழையாய் குவிந்ததில்.......
பனிச்சாரல்கள் மெல்ல
கசிந்தன போர்வையாய்!
----------------------------------------------------------

பணம் கையில் இல்லாத போதுதான் வாழ்க்கையின் அருமை புரியும்.....
எனவே சேமிப்பின் அளவுதான் நமது நிம்மதியான வாழ்வுக்கு வழி விடுகின்றது....
எனவே......
சேமிப்போம்......
பணத்துடன் நல்ல மளிதர்களையும்!

---------------------------------------------------------

குடும்பம் என்பது குழப்பம் , குதுகலத்தின் சேர்க்கை.......
அதனைத் தீர்மானிக்கும் கருவி
நம் மனதை இயக்கும் வார்த்தைகளில் உள்ளது
--------------------------------------------------------------------------------

கற்பகதருவின் காற்றின் வாசம்
மனசோரம் சுவாசமாய் வீழ.......
எப்போதோ வற்றிப்போன  - எம்
காலடித் தடங்களின் வரட்சி...
மெல்ல கரைந்து போக - நானும்
பயணிக்கின்றேன் நானும் யாழ் நோக்கி!


--------------------------------------------------------------------------------------------


நாம் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையில் மாற்றங்கள் நம்மைத் தேடி வருகின்றன. அவை பெரும்பாலும் சவால்களின் அறைகூவல்தான்! தைரியமாக அம்மாற்றங்களை நம் வசப்படுத்தும்போது தன்னம்பிக்கை மிக்க எதிர்காலம் நமக்குரியதாக மாறுகின்றது!

---------------------------------------------------------------------------------------------------
மனசோரம் வலி சுமக்கும்
ஒற்றைப் பறவை நான்.....
ஒளிந்து கொள்ள ஓரிடம்
அளிப்பாயோ 
உன் னிதயக் கூட்டில்
-------------------------------------------------------------------------------------------

நம் தகுதியை பிறருக் குணர்த்தும் உரைகல் .......
நாம் பேசும் உண்மை வார்த்தைகள்தான்!
-----------------------------------------------------------------------------------
என் குரல்நாண் அதிர்வில்
ரகஸியமாய் ஔிந்து கொள்ளும் உன்னை....
தினம் உச்சரிக்கின்றேன் என் பெயராய்!

வாழக் கற்றுக் கொடுத்த நீயே - என்
வாழ்க்கையாய்!
சிரம் தாழ்த்துகின்றேன் என் சிந்தை நெருடுமுன்
சுரமாம் அன்பிற்கே!

-----------------------------------------------------------------------

நாம் காணும் அடுத்தவர்களின் தவறுகள்கூட நமக்குப் பாடங்களே!
ஏனெனில்.........
நாம் நம் சுயத்தைத் திரும்பிப் பார்த்து ...
நம் தவறுகளை நாமே உணரும் சந்தர்ப்பம் அதன் மூலம் கிடைக்கின்றது!

-  Jancy Caffoor -

2014/11/03

நீயென்



தனிமை.........
இப்போதெல்லாம் நீயாய்!

வெறுமையின் விசாரிப்பில் விசனப்பட்ட
என் உயிர்க்கூட்டில்.....
உன் பாதச் சுவடுகள் ஆழமாய்!

உன் நச் சென்ற முத்தங்களின்
சொர்க்கத்தில்.....
இப்போதெல்லாம்...
உயிர் அலைமோதுகின்றது
சுகமாய்!

முதுகோரம் .....
வீழ்ந்துகிடக்கு மென் .....
கூநதலிழுத்து........
நீ
வம்பு பண்ணும்போதெல்லாம்....
கசியும் வலிகூட
ரகஸியமாய் நாண முதிர்த்து - உன்னுள்
புன்னகையை
விட்டுச் செல்லும்!

காதலும் மோதலுமாய்
நகரும் நம் அன்பின் தித்திப்பில்
ஊடல் மைல்கல்லா.....!
ரசிக்கின்றாய் தினமும்
என்னையும் வம்புக்கிழுத்து!

பனிமூட்டங்கள் பிழியும் கூதல்
நம் நாடியோரம் வீம்பு பண்ணுகையில்.....
எனை யுன் அருகிழுத்து
உருக்குகின்றாய் உணர்வுகளை!

நானோ...!
எனை மெய்மறந்து...
ஈரம் சொட்டும் காதலுடன்
காத்திருக்கின்றேன் விழியோர முனை
தரிசிக்க!

வா.....
வாழ்ந்துதான் பார்ப்போமே!
என்னுள் உன்னையும்
உன்னுள் என்னையும்
அன்பால் நிரப்பி!

2014/10/29

24 வருடங்கள்

எங்கள் அகதி வாழ்விற்கு வயது
24.......
.
இதய மின்னும் இற்றுப் போய்த்தான்
இருக்கின்றது....
இரண்டு மணி நேர இனச் சுத்திகரிப்பின்
வீரியத்தில்!
.
நவீனத்தின் பற்றுதலோடு
சுற்றிச் செல்லும் இப் பூமியின் எச்சமாய்
இன்னும்
இடிந்த கட்டிடங்களும்
உருக்குலைந்த மனிதங்களும்
அகதிச் சரிதத்தின்
முகப்புக்களாய் முகங்காட்டித்தான்
கிடக்கின்றன!
.
களமிறங்கும் அரசியல்கள்
கச்சிதமாய் வேட்டுக்களை ஏப்பமிட்டும்
இன்னும் திரும்பிப் பார்க்கவேயில்லை
இருண்ட எம் தாயத்தை!
.
யுத்தம் சப்பிய ஆன்மாக்கள்
நாமாய்...
விரட்டப்பட்டும் மிரட்டப்பட்டும்...
அவலத்தின் சந்ததியாய்- இவ்
அவனிக்கும் பாரமாய்
அந்ததரித்துக் கிடக்கின்றோம்!
.
நிவாரணங்கள் நிர்க்கதியானதில்...
தேய்ந்து போன தாயத் தெருக்கள்
எம் சுவடுகளின்றி
இன்னும்...
குற்றுயிராகத்தான் கிடக்கின்றன!
.
ஆகாயம் வெறித்துக் கிடக்க
அலை புரளும் கடலும்
வியர்த்துக் கிடக்க.........
பனையும் தென்னையும் உரசும்
யாழ்க் காற்றில்..............எம்
மூச்சும் கோர்த்துக் கிடக்கு
மந்தக் காலம் மட்டும்
ஏனோ.......
இன்னும் விடை தரா வினாவாக!
----------------------------------------------------------------------------------------

(30.10.2014 அன்று நாம் யாழ் மண்ணிலிருந்து விரட்டப்பட்டு 24 வருடங்கள் ..............
காலங்கள் ஓடலாம்- ஆனால் எம் ஞாபகச் சுவர்களின் அந்தக் கண்ணீர்த்துளிகள் நாம் மரணிக்கும் வரை ஈரம் உலர்த்தாது.........

உண்மையில்.............

வீடு தேடி அலையும்போதுதான் அகதி வாழ்வின் விரக்திச் சுமை மனதை வருத்தும் அரக்கனாக மாற்றுகின்றது.

முஹர்ரம்


ஒவ்வொரு மனிதரைச் சூழவும் அவர் அண்டி நிற்கும் சமூக, சமய, கலாசார உணர்வுகள் அவர்களது அடையாளங்களாக நிற்கின்றன. அந்த வகையில் முஸ்லிம் மக்கள் முஹர்ரம் எனும் தமது புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளனர்.

ஹிஜ்ரி வருடம் 1436 ன் புதுப் பிரவேசத்தில் பிரவேசிக்கப் போகும் நிலையில் நாம்!

நாட்கள் எவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. நாமோ ஆமை வேகத்தில் நமது செயல்களுடன் பயணிக்கின்றோம்.

இருந்தும் இதோ நமது புதுவருடத்தின் நிழலில் அண்மித்தவர்களாக நாமிப்போது!

அல்லாஹ் கூறுகிறான் :

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 9:36)

முஹர்ரம் மாதத்தின் முதலாம் நாள் முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை சீஆக்களால் நினைவுகூரப்படுகிறது.

10 வது தினத்தில் நோற்கப்படும் ஆசுரா நோன்பானது ,
தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக நோற்கப்படுவதாகும்.

வரலாற்றில் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். 
"இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். யூதர்கள் ”இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 2004.

ஆஷூரா நாள் நோன்பின் சிறப்பை நோக்கினால் -

”ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி 2006

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நாள் நோன்பு முந்தைய ஒரு வருட தவறுகளுக்கு பரிகாரமாகும் என்று நான் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கின்றேன்.
நூல் : முஸ்லிம் 1976

இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் முஹர்ரம் தொடர்பான கணக்கெடுப்பு பின்வருமாறு கணக்கெடுக்கப்படுகின்றது.
(இன்ஷா அல்லாஹ்)
முஹர்ரம் ஆரம்பம் 25 அக்டோபர் 2014 ----.........இறுதி 22 நவம்பர் 2014

எனவே முஹர்ரம் ..............!

எனும் போர் செய்யத் தடை செய்யப்பட்டுள்ள இப்புனித மாதத்தில் சகல முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் நேர்வழி ஏற்பட்டு அதனூடாக சாந்தி, சுபீட்சம், அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை புரிவானாக!

                                                                                                                               
- Jancy Caffoor-

ஆசிரியர் தினம்


கடந்த 6.10.2014 உலக ஆசிரியர் தினம் பாடசாலையில் நடைபெற்றபோது தரம் 8 பீ அயாஸ் இப்ராஹிம் எனும் மாணவன் எனக்களித்த அன்பளிப்பு கைக்கடிகாரம்....
.
பொதுவாகவே தமக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாத்திரமே மதிப்பும் கௌரவமுமளிக்கும் மாணவர்களின் நடைமுறையிலிருந்து விலகி, இம்மாணவன் எனக்களித்த இந்த அன்பளிப்பை உயர்ந்த கௌரவமாகவே கருதுகின்றேன்..

தீபாவளி


பட்டாசு வெடிக்கின்றது
இங்கும்.....
வீட்டுத் திக்கெங்கும் அக்னி பிரளயம்....!
வார்த்தை ஞாலங்களின் மோதல்கள்
எரிபொருளாகி...வெறுப்புத்
தீபங்கள் எரிகின்றன தினமும்
ஆனால்.....
அசுரன் அழிந்ததாகத் தெரியவில்லை!



ஆஹா


புகழை தனக்குள் அடிமைப்படுத்தாதவர்.........
ௐருபோதும்.........
 பிறரால் இகழப்படுவதில்லை

--------------------------------------------------------------------------------------------------
தோல்விகள்தான் நமக்குப் பாடங்களைப் புகட்டிக் கொண்டிருக்கின்றன.
ஏனெனில்   தோல்விகள் ஏற்படும்போதுதான் நாம் நமது குறைகளைத் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கின்றோம்!
--------------------------------------------------------------------------------------


புறம் நோக்கும் நம்  கண்கள் கொஞ்சம் 
அகமும் நோக்கட்டுமே
அப்பொழுதுதான்
அடுத்தவர் நம்மைக் கணிக்கும் எடையை 
நாமே பார்வையிட முடியும்!
--------------------------------------------------------------------------------------------


குளிரோடு சேரும்
உன் நெஞ்சின் பாசம்
பனித்துகள்களாய் உருகி - நம்
நினைவுகளை 
உலர விடாமல் காக்கும்!
ஆனால்
அழகான இந்த இரவில்
நம்மை ரசிக்க
பௌர்ணமியும் இருந்துவிட்டால்!
-------------------------------------------------------------------------------------------


அழகான பூக்களுக்கு
முட்கள்தான் பாதுகாப்பென்றால்
அருமையான வாழ்வுக்குள்ளும்
அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளும் அவசியம்!
-------------------------------------------------------------------------------------------

நேரம் என்பது!
வெறும் கடிகார முட்களலல்ல. நாம் பயணிக்கப் போகும் செயல்களின் வெற்றித் தன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டிய காட்டி!
---------------------------------------------------------------------------------------------------


யாரை அதிகமாகப் பிடிக்கின்றதோ
அவர்களிடம் தோற்றுத்தான் போகின்றோம்
 எமது எதிர்பார்ப்புக்கள்
அவர்களால் நிராகரிக்கப்படும்போது
தோற்றுத்தான் போகின்றோம்!

ஆனால்

தோற்றுப் போகும்போது கிடைக்கும் ஒவ்வொரு அடியும்
நம்மையும் செதுக்கின்றது - நம்
வாழ்வைப் புரிந்து
வாழப் பழகிக்கொள்வதற்கு!
-----------------------------------------------------------------------------

தாய்நாடு நமக்கொரு அடையாளம்.......
நம்மைப் பராமரித்து அடை காக்கும் குருவிக்கூடு!

----------------------------------------------------------------------------------------

ௐரூவரை விரும்ப ௐர் காரணம்
அன்பு.....
வெறுக்க பல காரணங்கள்

-  Jancy Caffoor -

2014/10/17

மகுடம்


காலையில் மலர்ந்து மாலையில் வாடி விழும் பூவல்ல வாழ்க்கை.
அதுவோர் நீண்ட தேடல்!
தேடும் மனமிருக்கும்போதுதான் தேவைகளுக்கான விடைகளும் கிடைக்க ஆரம்பிக்கின்றன. நம்மில் பலர் முடியாது என்ற எண்ணத்தில் 'பலத்தை' யெல்லாம் இயலாமையாக்கி விடுகின்றார்கள்!
-------------------------------------------------------------------------------------
காதலையும் கடந்த அன்பு.........
நமக்குள் இருப்பதனால்தான்...
இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றோம்
வலிகளையும் பகிர்ந்தபடியே!





வலி தீர்க்கும் மருந்து
அன்பான இதயங்களுடன் மனம் விட்டுப் பேசுவதில் இருக்கின்றது.
ஏனெனில் மனசுக்குள் மறைந்திருக்கும் ஆயிரம் பிரச்சினைகளை அறுத்தெறியும் வாள் இவ் அன்பானவர்களின் பேச்சிலிருக்கின்றது!


மொழியீர்ப்பு மையத்தில்
வீழ்ந்து கிடக்கும் நம்மை....
அண்டவௌிகளும்
அதிசயத்துப் பார்க்கின்றன
அன்பின் ரகஸியம் தேடி!


எடுத்ததற்கெல்லாம் அடுத்தவரைக் குற்றம் சொல்லுபவர் பிறர்விமர்சனத்தில் காணாமல் போகின்றார்கள் அல்லது கல்லெறி வாங்குகின்றார்கள். ஏனெனில் இவர்கள் பிறர் குறை பறைசாற்ற முன்னர் - தம் கறை அகற்றாதவர்கள்!


சுயநலம்!
.
நமக்குள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்  தடைகளையும் உடைத்தெறிந்து நம்மை அடுத்தவருக்கு அடையாளப்படுத்தும் உந்துசக்தி கிடைக்கும். ஆனால் அச்சுயநலத்தால் அடுத்தவர் நலம் அழியக்கூடாது!



-  Jancy Caffoor -