About Me

2014/07/28

முதல் காதல்



ஒரு சிறுமி பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அழகான ஓவியமொன்றை கண்டெடுத்தாள். ரம்மியமான அந்த ஓவியம் அவள் மனதைக் கவர்ந்திழுக்கவே, அதனை பத்திரமாக தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரப்படுத்தினாள். தினமும் ஐந்து நிமிடமாவது அந்த ஓவியத்தை பார்ப்பாள்.. ரசிப்பாள்.  மனமகிழ்வாள்.

காலம் உருண்டோடியது. அவளுக்கும் திருமணம் நடக்கின்றது. ஆனால் அவளின் ஓவிய ரசிப்பும் ஓயவில்லை. கணவன் உறங்கிய பின்னர் அதனை ரசிப்பது வழமையான விடயமாகி விட்டது.

ஒருநாள்

அவள் திருட்டுத்தனமாக ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது கணவன் எதிரில் நின்றான்.

"கையில் என்ன வச்சிருக்கிறே" - இது அவன்

அவளோ பட்டென்று சொன்னாள்
 "இது என்னுடைய முதல் காதல்"

அவனும் அதனை வாங்கிப் பார்த்து விழிகளை விரித்தவாறே கூறினான்.

"இது நான் எனது ஒன்பதாவது வயதில் தொலைத்த சித்திரம்"

பார்த்தீர்களா......!

இந்த உலகம் சுற்றிக் கொண்டிருப்பது எங்கோ ஒரு மூலையில் நமக்காக அன்பு செலுத்தும் நெஞ்சமொன்றைத் தேடித்தர

அந்த உயிரை நாம் சந்தித்து விட்டால், அதன்பின்னர் நம் மனம் அந்த மனதின் நினைவுகளுடனேயே சுற்றுகின்றது.

- Jancy Caffoor-

2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!