
Tnxs - Anbu Javaharsha sir
ஞாபகத்துளி
--------------------
பாடசாலையில் குறைந்த லீவு பெற்றமைக்கான விருது எனக்கும் கிடைத்தது. அதனை ஞாபகப்படுத்தும் புகைப்படமிது!
இதில் நானும் உள்ளேன்....கண்டு பிடித்து விட்டீர்களா!
----------------------------------------------------------------------------------------

உறவுகளுக்கிடையே நம்பிக்கை எப்பொழுது அறுந்து போகின்றதோ
அப்பொழுதே அவ் உள்ளங்களுக்கிடையிலும் ஊன் வடிந்து போகின்றது. அதன் தொடர்ச்சியாய் பிரிதலும் அவநம்பிக்கைகளும்தான்...
கண்ணாடி மனம் உடைந்தால்...
மீள பழைய உணர்வுகள் திரும்புதல் சாத்தியமோ!
அதனால்....
உரிமையோடு பழகியவர்களை
ஒட்ட வைப்பதா...
ஒட்ட நறுக்குவதா...
வார்த்தைகளின் தீர்மானமது!
-----------------------------------------------------------------------------------------
மழை நீரின் வாசம்
மண்ணோடு நேசம் - அவ்
அழகின் சாரல் பிழிதலில்- இன்றைய
இருளின் மயக்கம் கழிந்ததோ!
நீண்ட நாட்களின் பின்னர் இன்று அநுராதபுரத்தில் மழை!
பனித் தூறல்கள் வீழும் இன்றைய இரவில் நரம்புகளைத் துளைத்திடும் இதமான தூக்கம் குளிரின் கொடையால்!
---------------------------------------------------------------------------------------
உறவுகளுக்கிடையே நம்பிக்கை எப்பொழுது அறுந்து போகின்றதோ
அப்பொழுதே அவ் உள்ளங்களுக்கிடையிலும் ஊன் வடிந்து போகின்றது. அதன் தொடர்ச்சியாய் பிரிதலும் அவநம்பிக்கைகளும்தான்...
கண்ணாடி மனம் உடைந்தால்...
மீள பழைய உணர்வுகள் திரும்புதல் சாத்தியமோ!
அதனால்....
உரிமையோடு பழகியவர்களை
ஒட்ட வைப்பதா...
ஒட்ட நறுக்குவதா...
வாரத்தைகளின் தீர்மானமது!
----------------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்புக்கள்தான் தேவைகளைத் தீர்மானிக்கின்றன. தேவைகள்தான் நமது தேடலைத் தீர்மானிக்கின்றன. அதிக தேடல்கள் சில நேரங்களில் ஆசைகள் வளரவும் காரணமாக இருக்கலாம். அதிக ஆசைகள் நிம்மதியற்ற மனதின் ஆணை எப்பொழுதும்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!