About Me

2014/08/08

பிரிதலும் கூடலும்




நீ வருவாயென..
இருளென்றும் பாராமல்
விடி விளக்காய் - என்
விழி யிரண்டும் ஏற்றி வைத்தே காத்திருந்தேன்...

வந்த நிலாவும் போனதுவே யுன்
சந்தடி யென் காற்றில் கலக்காமலே..
எந்தன் மனம் யுனக்காய் துடித்திருக்க - நீயோ
எனை மறந்துன் வழிப்பாதையில்!
------------------------------------------------------------------------------------

பிரியும்போதுதான்
புரிகின்றது - நம்
சண்டைகள்கூட .......
அன்பின் வருடலென்று!
-----------------------------------------------------------------------------------

நேற்றைய சரி
இன்றைய பிழை!
-----------------------------------------------------------------------------------

நம்
வாழ்வைத் தீர்மானிப்பது வயதல்ல
மனம்
ஏனெனில்
வயது எனபது வெறும் எண்கூட்டம்!
-----------------------------------------------------------------------------------

பிரிந்துதான் செல்கின்றாய்
இருந்தும்
என்னை நீ யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாய்
ஏனெனில்
முன்னைய நாட்களில்
உன் அன்பில் நான்!
----------------------------------------------------------------------------------

ஒவ்வொரு சிரமத்திலும் ஒரு வாய்ப்பு உள்ளது..
ஒவ்வொரு வாய்ப்பும் முயற்சியின் வழியாக நம்மை பலப்படுத்துகின்றது!
---------------------------------------------------------------------------------


மௌனம்..............
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம்!
ஏனெனில் மனவேதனைகளின் இறுக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கேடயம் இதுதான்!

- Jancy Caffoor -




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!