About Me

2014/08/16

உணர்வுகள்



நம் உயிர் வாழும் கூடு மெய்
இருந்தும்....
மெய் யன்பில் நாட்டமில்லா வாழ்வோர்தான்
அதிகம்...
இந்த பொய் உலகில்!
-------------------------------------------------------------------------------------

நாம் பெறும் அனுபவங்களே உணர்வுகளில் பதிந்து நமது செயல்களாய் இயக்குகின்றன. எனவே நாம் எவ்வாறு நம்மை நினைக்கின்றோமோ, அவ்வாறேதான் பிறரையும் நினைப்போம்..

நமது எண்ணங்களுக்கும், யதார்த்த சூழலுக்கும் இடையில் ஏற்படும் இடைவௌிகளே மனக்குழப்பங்களையும், பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.....

எனவே................

நல்லதையே நினைப்போம்!
-----------------------------------------------------------------------------------

பல வருடங்களாக களிப்போடு
சிறகு விரித்த என் கல்விச்சாலை...இன்று
சிறைக்கூடமாய்!
யார் செய்த தவறிது!
----------------------------------------------------------------------------------
அன்று ன்னை
என் தனிமைக்குள் நிரப்பி வைத்தேன்

ஆனால்....

இன்று .....

தனிமையோ....
துணையின்றி!
---------------------------------------------------------------------------------

சில புதிர்களுக்கு இப்பொழுதுதான்
விடை கிடைத்திருக்கின்றது!

காத்திருந்து இற்றுப் போன இதயம்
காலனிடம் மண்டியிடாமல்...
காலம் காயம் ஆற்றட்டும்!
--------------------------------------------------------------------------------
எல்லாம் கடந்த பின்னர்தான்
வாழ்க்கை பற்றிய தேடல் ஆரம்பிக்கின்றது!
விளைவாய்..........
விரக்திக் கோடுகள்!
அவை...............
அழியா வரங்கள்!
-----------------------------------------------------------------------------
என் குடும்பம்
என் கணவன்
என் பிள்ளைகள்
எனும் "என்' பற்றிய சுயநலத்தினால் பொறாமையும், பாவங்களும், விரோதங்களும் உருவாகின்றன. இச்சுயநலம்தான் உறவுகளுக்கிடையிலும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.

- Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!