About Me

2014/09/01

அனுபவங்கள்


மனசுக்குள் பொத்தி வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்களை
எல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றேன்
ஒவ்வொரு இரவு மென் கனவுகளில்!

கண்கள் சயனிக்கும் அந்நொடிகளின் உயிர்ப்புக்கள்
லேசாய் உயிரோடு உரசும்போது..
களைத்துப் போன உள்ளம்
கலி களைந்து களிப்போடு
மெல்லத் தடவுகின்றது என்னை!




குழந்தை
தான் பார்த்ததை செய்யத் துடிக்கின்றது
அங்கே
அனுபவங்கள் தொகுக்கப்படுகின்றன
அழகாய்!

நாமும்
செய்ததை திருப்பிப் பார்க்கின்றோம்
கடந்தகாலமாய்
அங்கும் தொகுக்கப்பட்ட அனுபவங்கள்
கரைகின்றன
ஏக்கமாய், வலியாய், மகிழ்வாய்!
----------------------------------------------------------------------

இரும்புக் கரங்கள் இருந்தால் போதும்...
உருகும் மெழுகுகள்கூட
இறுகிய பாறைகளாய்
உருமாறிக் கிடக்கும்!



- Jancy Caffoor -


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!