About Me

2014/09/20

சாரல்


எப்படியும் வாழலாம் என்பதை விட,
இப்படித்தான் வாழ வேண்டும் எனும் வாழ்வில்தான் நமக்கான
அழகான வாழ்க்கை காத்திருக்கின்றது!


---------------------------------------------------------------------------------------------

இரவின் புன்னகை
அழகாககத்தான் தெரிகின்றது நிலவினில்...
இருந்தும்....
உன் மௌனச் சாம்பலி லென்னைப் புதைத்து
நிசப்தத்தின் முணுமுணுப்பில் - மூச்சுக்
காற்றின் விசுவாசத்தை
மோசமாக்கத் துடிக்கின்றாய்.........
நானொரு
பீனிக்ஸ் பறவையென்பதை யறியாமல்!


----------------------------------------------------------------------------------

காலத்தின் மடியில் நமது கனவுகள், காயங்கள், சோகங்கள் ஏமாற்றங்களை பரப்பி விட்டு வலியில் துடித்து நிற்கின்றோம்.

ஆனால்

அதே காலம்தான் அவற்றை மறக்கச் செய்து நமக்குள் புது நினைவுகளை முகிழ்க்கச் செய்து நடைபயிலச் செய்கின்றது இயல்பாய் வாழ!
----------------------------------------------------------------------------------------------------

கீழ்திசை!

தொட்டுச் செல்லும் சூரிய விரல்களில் தோய்ந்த என் நிழலும், தூசு துடைத்து ஔிரத் தொடங்கியுள்ளது லேசாய்

இருள் நிரந்தரமல்ல

இயற்கை விட்டுச் செல்லும் நியதியினில்!
இறையருள் போதும்
உறைந்து கிடக்கும் சோகங்கள் உருக்க!

- Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!