About Me

2014/09/20

தூறல்

கலைஞனுக்கு....
நம்பிக்கை இன்னும் இருக்கின்றது
நடைபாதையோரம் வீழ்ந்து கிடக்கும் கற்களைச் செதுக்க
உளிகள் கிடைக்குமென்று!

தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்போது
கற்கள்கூட
சிலைகளாய் நிமிர்ந்து நிற்கும்!



-------------------------------------------------------------------------------------

உருச் சிறிதுதான் சிலந்திக்கு...
இருந்தும்......
விடா முயற்சியின் விழுதுகளாய்
அதன் கரங்கள்!

நானும் சிலந்திதான்...

தோற்றுப்போகும் வலைகளுக்குள்ளும்
தொட்டுக் கொள்ளத் துடிக்கின்றேன்
வெற்றிச் சாயல்களை!

------------------------------------------------------------------------------------

உருவம் தேடா உணர்வின் தொகுப்பாய் - மனதுள்
உருண்டோடும் சந்தோஷ சிலிர்ப்புக்கள்தான்
பெயர் கொண்டதோ

 "அன்பென்று"!
-------------------------------------------------------------------------------------

வலி...........

பலருக்கு
கண்ணீர் தெறிக்கும் வழி!
சிலருக்கோ
தன்னம்பிக்கை செதுக்கும் உளி!
--------------------------------------------------------------------------------------

மனம் வெறும் இரும்பல்ல இறுகிக் கிடக்க..
உணர்ச்சிகளின் கலவை!

அதனாற்றான்

அறியாமை, அவசரம் தரும் பல முடிவுகளை நமது சிந்தனை மாற்றி விடுகின்றது!


- Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!