About Me

2014/10/06

மனமே மனமே




தியாகம், விட்டுக் கொடுப்பு , இறையன்பு போன்ற தத்துவங்களால் ஆளப்படுகின்ற இன்றைய ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது ஈதுல் அல்ஹா ஈத் முபாரக்!
----------------------------------------------------------------

இன்று (ஒக்டோபர் 06) இலங்கையில் சர்வதேச ஆசிரியர் தினம்    கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர்தின வாழ்த்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள். அத்துடன் எனக்கும் கல்வியூட்டிய என்னுடன் பணியாற்றும் சகல ஆசிரிய நட்புக்களுக்கும் இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்......! 


--------------------------------------------------------------------------

நீ மறந்து போன..
மறுத்துப் போன ஒவ்வொன்றும் - என்
ஞாபகங்களாய்!
தொலைத்தாய் என்னை - பல
எல்லைகளுக்கு அப்பால்!

-----------------------------------------------------------------


மழைத்துளிகள் மெல்ல கரம் தருகின்றன
கன்னம் கரைக்கும் கண்ணீரை
யாரு மறியாது துடைப்பதற்கு!
---------------------------------------------------------------------------


தேடல்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை! அதனால்தான் திருப்தியடையாத மனமும் தினமும் தேவைகளை விரித்துக் கொண்டே செல்கின்றது. ஒன்றின் நிறைவில்தான் புதிய தொன்றுக்கான ஆசைமனதில்  வித்திடப்படுவதனால் , கிடைத்த தொன்றினை ரசிக்க ஆரம்பிக்க முன்னர், கிடைக்காத ஒன்றுக்கான எதிர்பார்ப்பில் மனம் அலைந்து ஏக்கம் சுமந்து அந்த ரசனையையும் கவலைக்குள்ளாக்கி விடுகின்றது பலரிடம்...!
.
நிலையற்ற மனித மனமே... நீ
கவலைகளின் சொப்பனம் இதனாலோ!
----------------------------------------------------------------------------------------


உறவுகள், நட்புக்களின்
சுயநலங்கள்......
அன்பைப் பொசுக்கும்போது....
அனாதை விடுதிகளும், முதியோர் இல்லங்களும்
அடையாளங்களாகின்றன
புது உறவைக் கொடுத்து!
.
தொலை சென்ற உறவுகள் தேடா
முள்வேலிக்குள் முகவரி காட்டும்
கலைக்கூடத்திலும்
நல்ல உள்ளங்களின் அன்பும் கிடைப்பதுண்டு!

-----------------------------------------------------------------------------

வேடிக்கையான வாழ்க்கைக்குள்
விடியல் தேடும் மானுடர்கள்.....
நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருந்தோர் நாளை நம்கூட வரப் போவதில்லை.....
சுயநல ஆதிக்கமும்....
விதியின் கோரத்தனமும்....
மாற்றங்களோடு!

இதுதான் வாழ்வின்
யதார்த்தமா!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!