About Me

2014/10/10

போராட்டம்




எல்லாமே முடிந்து விட்டதாகத்தான்
நினைக்கிறேன்.- இருந்தும்
விரல்கள் விடுவதாக இல்லை
பேனாவைப் பற்றிக் கொண்டு
பேரம் பேசுகின்றன வாழ்க்கைப் போராட்டங்களை!

ஒவ்வொரு போராட்டங்களும்
அடிமைத்தனத்திற்கான எழுச்சி!
ஆருடம் சொல்கின்றது
வருஷக் கணக்காக நடக்கும்
பெற்றோர் சண்டைகள்!

முரண்பாடுகளுள் உடன்படும்
வருங்காலம்
மருண்டு கிடக்கின்றது- மனிதராக
வாழ
அருகதையற்ற சிலரால்!

ஏதோ வாழ்க்கையோடிக் கொண்டுதானிருக்கின்றது
வாழத் தெரியாத சிலர்
வாழ்வோடிணைந்து
வாழ்வைப் பாழ்படுத்தினாலும்
ஏதோ வாழ்க்கையோடிக் கொண்டுதானிருக்கின்றது
இன்னும்!

- Jancy Caffoor-
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!