About Me

2014/10/17

மகுடம்


காலையில் மலர்ந்து மாலையில் வாடி விழும் பூவல்ல வாழ்க்கை.
அதுவோர் நீண்ட தேடல்!
தேடும் மனமிருக்கும்போதுதான் தேவைகளுக்கான விடைகளும் கிடைக்க ஆரம்பிக்கின்றன. நம்மில் பலர் முடியாது என்ற எண்ணத்தில் 'பலத்தை' யெல்லாம் இயலாமையாக்கி விடுகின்றார்கள்!
-------------------------------------------------------------------------------------
காதலையும் கடந்த அன்பு.........
நமக்குள் இருப்பதனால்தான்...
இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றோம்
வலிகளையும் பகிர்ந்தபடியே!





வலி தீர்க்கும் மருந்து
அன்பான இதயங்களுடன் மனம் விட்டுப் பேசுவதில் இருக்கின்றது.
ஏனெனில் மனசுக்குள் மறைந்திருக்கும் ஆயிரம் பிரச்சினைகளை அறுத்தெறியும் வாள் இவ் அன்பானவர்களின் பேச்சிலிருக்கின்றது!


மொழியீர்ப்பு மையத்தில்
வீழ்ந்து கிடக்கும் நம்மை....
அண்டவௌிகளும்
அதிசயத்துப் பார்க்கின்றன
அன்பின் ரகஸியம் தேடி!


எடுத்ததற்கெல்லாம் அடுத்தவரைக் குற்றம் சொல்லுபவர் பிறர்விமர்சனத்தில் காணாமல் போகின்றார்கள் அல்லது கல்லெறி வாங்குகின்றார்கள். ஏனெனில் இவர்கள் பிறர் குறை பறைசாற்ற முன்னர் - தம் கறை அகற்றாதவர்கள்!


சுயநலம்!
.
நமக்குள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்  தடைகளையும் உடைத்தெறிந்து நம்மை அடுத்தவருக்கு அடையாளப்படுத்தும் உந்துசக்தி கிடைக்கும். ஆனால் அச்சுயநலத்தால் அடுத்தவர் நலம் அழியக்கூடாது!



-  Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!