About Me

2015/09/13

புதிய மோட்டார் வாகனச் சட்டம்




நவீனத்துக்குள் நாடும் மக்களும் உள்வாங்கப்படும் போது அவர்களின் வாழ்க்கையும் வசதியும் அதிகரிக்கின்றது. இத்தாக்கத்தின் பிரதிபலிப்பிலொன்றுதான் வாகனங்கள் அதிகரிப்புக்கள். முறையற்ற வாகன நகர்வின் மூலம் ஏற்படுகின்ற வாகன விபத்துக்கள் மூலம் அதிகரிக்கின்ற விபத்துக்கள் இதற்கு சான்று பகிர்கின்றது.

13.09.2015 முதல் அமுலுக்கு வரும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் இந்நிலையை மாற்றுமா

 வாகனம் வைத்திருப்பவர்கள் இதனைக் கட்டாயம் படியுங்கள் !

சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் , அத்துடன் முறையற்ற வகையில் செல்லும் வாகனங்களை தடுத்து  நிறுத்தும் அதிகாரமும் சாரதியின் உறுதிப்பத்திரம், வாகனத்தின் சகல ஆவணங்களையும் பரிசோதனை செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.  இது தவிர வாகனத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் தொடர்பாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அதிகாரம் உள்ளது. அதேவேளை, சாரதியின் அனுமதி பத்திரத்தை காவல்துறை அதிகாரி மூலம் கைப்பற்றப்படுமாயின்  14 நாட்களுக்கு அமுலில் உள்ள வகையில் தற்காலிக அனுமதி பத்திரமும் வழங்கப்பட வேண்டுமெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது..
-------------------------------------------
-------  தண்டப்பண விபரம்-   ----
-------------------------------------------
*****சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
*****புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
*****இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
*****வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 +
****** ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000
********அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
********3 முறைக்குமேல் அபராதம் விதித்தால்  2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும்.
********இதற்கு மேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமாக  ரத்துசெய்யபடும்.
******* வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)

- Jancy Caffoor -

   09.12.2015

மோனா மோனா

என்னைக் கிள்ளிக் கொள்கிறேன்
மென் மேனி நரம்புகள்
உன் பெயர்த் துலங்களில்
பாசம்  கொண்டதுவோ
.
அதனாற்றான்
நீ அழைக்கும் போதெல்லாம்
களைக்காத என் வார்த்தைகள்
கலையாகிப் போகின்றதுவோ என்
கைபேசியில்
.
உருண்டு திரளும்- இந்துக்
கரையோர அலைகளினி - தினமும்
இரையாமல் ரசிக்கு மெம்மை
நரையாகாத நம் அன்பை ருசித்தபடி
.
திசை விரிந்தாலும்
உள்ளத்தோசையில்
இசைந்து போன நம் மன்பை
கரமசைத்து வாழ்த்தட்டும்
காலமும் நிறைவாய்
.
உன் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்

- Jancy Caffoor -
    

2015/09/06

02.09.2015

அளிக்கப்பட்ட பிறந்த தின உபசரிப்பில்
-----------------------------------------------------------
ஜாதி,மத பேதமின்றி பயணிக்கும் நட்புச் சுவட்டில் நான் தரிசித்த அழகான  அன்பளிப்பிது  நன்றி சுபத்திரா
---------------------------------------------------------------------------------
யாரோ எவரோ எனும் நிலை அறிமுகத்தில் இல்லாமற் போகின்றது
அறிமுகம் அன்பெனும் ஈர்ப்புக்குள் தள்ளி விட காலமும் சந்தர்ப்பங்களும் நம்மீது உண்மையான நட்பு, பாசம், அன்பை உணர்த்தி விடுகின்றது
இன்று என் பிறந்தநாளை இன்முகத்துடன் வரவேற்ற என் பாடசாலை மாணவிகளினதும் ஆசிரியர்களினதும் வாழ்த்துக்கள் அன்பு கலந்த அன்பளிப்புக்களில் நனைந்து உவகையுடன் நிற்கின்றேன் நேசித்தவர்கள் தொலைந்து போவதும் தொலைவில் நிற்போர் அருகில் வருவதும்
மாற்றமான வாழ்வில் ஒர் துளியே கண்டு கொண்டேன்!

இன்று!
----------------------------------------
முகநூலில் வாழ்த்தியோர்

Mullai Amuthan ---------------
                          Happy Birthday


Nisad Kuvais    ---------------
                         Happy Birthday

Mohamed Fazaal -----------
                        Happy Birthday Jan

Vathiri C Raveendran-------
                        Happy Birthday to u Madam

Kailaiyar Sellanainar Sivakumaran ---- 
                          Please accept my blessings on your birthday Enjoy with your family and friends


- Jancy Caffoor -
   06.09.2015



தேர்தல்

 தேர்தல்
தோற்றுப் போகுமிடம்
,
தோற்றவரின்
வெற்றி முழக்க மொலிக்கும்
மேடை

பதவிச் சண்டைகளுக்கான
ஒரு
ஒப்பந்தம்

தேசத்தின் ஓட்டை யடைக்கும்
வரப்பிரசாதம்

சிலர் விதி மாற்றும்
மதி

தீர்ப்புக்களின்றி
கோர்க்கப்பட்ட சட்டம்

வாழ்த்தும்
வீழ்த்தும்
ஆசன வரிகள்


- Jancy Caffoor -
 

முகநூல்



ஈரப் பூக்களை உதறியவாறு
பேரிரைச்சலுடன் மழை
உருகியது உஷ்ணம் மட்டுமல்ல
என்னுள் உறைந்திருந்த
சிறு சோம்பலும் தான்!

சிறையறுக்க நீ வருவாயென்ற உணர்வு
இறுதியி லுரைத்தது
அருமையான கனவென்று

ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகங்கள் அதிகமாகப் பகிரப்படும் நாள்
அவர் மரண நாளாகும்
ஏனெனில்
இழப்புக்கள் வரும்போதுதான்
கடந்து போன தடயங்கள் கண்ணீர் சிந்துகின்றன

சூழ்நிலைகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன
நம்முடிவுகள்
ஆரோக்கியமானதாக இருந்தால்
நிம்மதியும் மகிழ்வும் நம் வசமாகும்

                                                                                                                         நம் வார்த்தைகள்
பிறரைக் காயப்படுத்துமானால்
மெளனம் சிறந்தது
ஏனெனில்
அம்மெளனம் அவர்களின் உணர்வுகளை
நாம் மதிப்பதை உணர்த்தும்!


- Jancy Caffoor -
   09.06.2015

இதயம் கிழிந்து.........

இறந்த பின்னர்தான் பல
இதயங்கள் தட்டப்படுகின்றன
கடலலைகளில்
கிழிந்த மூச்சுச் சத்தத்தில்
பல அழுகை
நிசப்தமாய் போனதுவோ
உயிரோடு கண்டு கொள்ளப்படாத உண்மைகளை
பலருக்கு பாடமாக்கியவனாய்
இவனும் பயணிக்கின்றான்
கண்ணீரில்


- Jancy Caffoor -
 

2015/08/30

முகநூல்


ஒருவர் புகழடையும் போதுதான்
அவர்மீதான அடுத்தவர் பார்வையும்
தீவிரமடைகின்றது
ஆக்கினையும்
ஆதரவும்
அவருக்கான கொடுப்பனவாகின்றன!
-------------------------------------------------------------
தன் தவறுகளை உணராதவர்கள்
அடுத்தவர் தவறுகளை விமர்சிப்பதற்கு தகுதியானவர் அல்லர்
--------------------------------------------------------------

கடலோரம்
வெண் மணல் துளைத்து
சங்கெழுதும் இரகஸியமதை
துள்ளி வரும் அலைகள்
மெல்லதை அள்ளி
கால்களைக் கிள்ளி
என்னுள் சொல்கின்றதே!

-----------------------------------------
அமைதியான தேர்தல்
சாமர்த்திய தீர்ப்பு
ஆனால்
அட்டகாசமான மந்திரி பதவி
ஆர்ப்பாட்டங்கள்
அட!
நாடு எங்கேயோ போகுது !
-------------------------------------------
ஆயிரம் நிமிட வேலைப் பழுவின் மத்தியில்
அறுநூறு நிமிடம் நினைப்பது காதல்
அறுபது நிமிடம் நினைப்பது பாசம்
ஆறு நிமிடயாவது நினைப்பது நட்பு
ஆரோ எவரோ
நினைப்பதே யில்லை!


- Jancy Caffoor -
   30.08.2015

2015/08/25

azka



-Jancy Caffoor-
25.08.2015

உன்னன்பு



உன் அன்பு அழகிய பூ
நெருங்கி வந்தேன் புரிந்தது - அது
தொட்டாற்சுருங்கிப் பூவென்று!

இந்தக் கவிதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? நீங்கள் கேட்கலாம். ஆனால் நான் ரசித்த என் கவிதை வரிகள் இவை....எனக்கு மிகவும் பிடித்த அன்புக்காக எழுதிய உயிர்ப்பான வரிகள்!

மலர்கள் மனங்களின் ஈர்ப்பில் உள்வாங்கப்பட்டவை. அதன் நிறமும் அழகும் நறுமணமும் நம் உணர்வின் வருடல்களில் கலந்து நம்மை அடிக்கடி வாசித்துச் செல்பவை. அந்தவகையில்

இந்தப்பூ

தொட்டாற்சுருங்கிப் பூ

இந்தப்பூவை பார்க்கும்போதெல்லாம் எனக்கு நான் எழுதிய கவிதையும், அதற்கான சந்தர்ப்பமும் ஞாபகத்தில் நிரம்புகின்றது.

தொட்டாற்சுருங்கிப் பூவை யாரும்  கண்டு கொள்வதில்லை. ஆனால் வீதியோரங்கள், கவனிப்பாரற்ற இடங்களில் இப்பூக்கள் நிறைந்து காணப்படும். அவ்வாறுதான் எனக்குள்ளும் அந்த அன்பு அடுத்தவர் பார்வைக்கு பெறுமதியற்றுப் போனாலும், விழிகள் வாசிக்கும் உன்னுருவுடன் கசியும் என்னன்பு ரொம்ப உயர்வானது.

இப்பூ ஊதா நிறம். அழகானது. ரசிக்கத்தக்கது. அவ்வாறுதான் உன்னுடனான என்னன்பும் உணர்வுபூர்வமாக அழகானது.

இப்பூவைச் சூழ மரத்தின் முட்கள் தலைநிமிர்ந்திருக்கும். அப்படித்தான் உன்னன்பும் சினத்தின் தொடுகையுடன் இன்னுமின்னும் அன்பை கூட்டிச் செல்கின்றது.

- Jancy Caffoor-

 



இதுவும்..............


இடம் - யாழ்ப்பாணம்
பஸ் பயணிக்கின்றது கொழும்பை நோக்கி தமிழ் மக்களுடன் இனிமையான இடைக்கால தமிழ்ப் பாடல்கள்.  ஆனால் வவுனியா வந்ததும் சிங்களப் பாடல்கள் ஒலிக்கின்றன.
.
இடம் - அநுராதபுரம்
பஸ் பயணிக்கின்றது கொழும்பை நோக்கி சிங்கள மக்களுடன். சிங்கம் 1 தமிழ்ப்படம்
.
இதுவும் இன ஒற்றுமைதான்.....
--------------------------------------------------------------------------------

நாம் சந்திக்கும் ஏமாற்றுக்காரர்கள்தான் நமக்குள் எச்சரிக்கை உணர்வுகளை விதைக்கின்றார்கள்.
இடம் - கொழும்பு காலிமுகத்திடல்
வீடு திரும்பும் நேரம். அருகில் ஓர் ஆட்டோ நிறுத்தப்படுகின்றது. போக வேண்டிய இடம் சொன்னோம். ஏறுங்களென தமிழில் சொன்னான்.

ஓ முஸ்லிமா!

பயமின்றி ஏறினோம். ஆட்டோ புறப்பட்டது. இலகு பாதை இருக்க வேறு திசைகளில் ஆட்டோ ஓடியது. காரணம் கேட்ட போது  தனக்கு வீதி தெரியாது என போடு போட்டான். கடைசியில் எப்படியோ வீடு சேர்த்தான். ஆட்டோ வாடகை 700 என்றான்.

நான் கொடுக்க வில்லை. உன் தவறுக்கு நாம்.பணம்.தர முடியாதென்றேன். சரி 500 ரூபா தாருங்களென்றான். 1000 ரூபா கொடுத்தேன் மிகுதியை தரும்படி மிகுதி பணத்தை கையிலெடுத்தான்.

ஆனால்....

கண்ணிமைக்கும் நேரத்தில் மிகுதிப் பணத்தை தராமல் ஆட்டோ பறந்தது. சீ    இதெல்லாம் ஒரு பொழைப்பு. அந்த ஆட்டோக் கள்ளனை சபிக்கத்தான்முடிந்தது. அவனது நம்பிக்கைத் துரோகம் சிறந்ததோர் படிப்பினை எனக்கு!

- Jancy Caffoor-
      25.08.2015


ஈத் முபாரக்.

அல்ஹம்துலில்லாஹ்
பல வருடங்களின் பின்னர் யாழ் மண்ணில் நோன்புப் பெருநாள்
மண் வாசனை கமழ
மனதிலோ சந்தோசக் கீற்றுக்களி்ன் வருடல்
ஈத் முபாரக்  July 18, 2015


- Jancy Caffoor-

      25.08.2015


முகநூல்



உணர்வு தொட்டு
உளம் வருடும் நட்புக்கு ஆயுள் அதிகம்....
------------------------------------------------------------------------------------

வானம் மஞ்சளை அப்பிக் கொண்டிருக்கும் மாலை நேரம்...
சற்று சூடான ஈரக் காற்றில்
ஷாம்பூ தேய்த்து குளித்த கூந்தலை...
சற்று காய வைத்து
தன் மடியில் கிடத்தி உலர்த்தும் அன்னையின் அன்பு...
சின்ன வயதின் பூரிப்பான ஞாபகங்கள்....

------------------------------------------------------------------------------------

எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க தெரிந்தவர்கள்.
.வாழ்க்கையின் தடைகளை வெற்றி கொள்கின்றார்கள்.........

------------------------------------------------------------------------------------

அடுத்த நிமிடத்தை பற்றி நினைக்கும்போது....
இந்த நிமிடத்தின் சந்தோஷம் தொலைந்து விடுகின்றது....
------------------------------------------------------------------------------------

பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிப் போதல்
தோல்விகளுக்கான வரவேற்புரை....
----------------------------------------------------------------------------------
ஒரு ரூபாவாக இருந்தாலும் கூட, அது தவறிப் போகும் போதுதான் அதன் மதிப்பை நாம் உணர்கின்றோம்.....வலி கொள்கின்றோம்....
------------------------------------------------------------------------------------

வியர்வைக் குளியலோடு..
கொஞ்சம் வயிற்றை நிரப்பும் சில்லறைகளுக்காய்..
போராடி உழைப்போரைப் பார்க்கும்போதுதான்..
வீணாகச் செலவழியும் பணத்தின் அருமை புரிகின்றது.....
----------------------------------------------------------------------------------------------------------------


வானத்தில்.....
ஆங்காங்கு கருந் திட்டுக்களாய் மேகங்கள்..
யன்னலோரம்
உரசி வரும் காற்றில்
லேசா ஈரம்....
ஓஓ...
அதனால்தான்
உடம்பும் மனசும் இதமாக இருக்கின்றதோ...
பயணம் தொடர்கின்றது....


முகநூல்




வேண்டாம் என்றேன்
வேண்டும் என்றாய்
நெஞ்சில் திமிரு
கொஞ்சம் இருக்கு உனக்கு
-------------------------------------------------------------

புரிதல் கூட அன்பின் ஈர்ப்பே
புரிந்து கொள்ளாதவர்கள் பிரிவின் புதைகுழிக்குள் தம்மை புதைத்துக் கொள்கின்றார்கள்
பிரிவும் உறவும் காலத்தின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------

பல பொழுதுகளில்
திமிர் கரைத்து
தோற்றுப் போகின்றோம் சிலரிடம்
அவர்கள்தான்
நாம் மாற்றங்களை வெளிப்படுத்த
கற்றுத் தருபவர்கள்!

----------------------------------------------------------------
விழிகளால் பருகிய அழகுதனை
மொழி பெயர்க்கின்றேன்
அடடா
வீழ்கின்றனவே கவிதைகளாய்
----------------------------------------------------------------
பிரிவோம் பிரிவோம் எனச்
சொல்லியே
பிரியம் வளர்க்கின்றோம்.
இழப்புக்கள்
இதயத்திற்கா
இல்லை
அழகான அன்புக்கா
.
விதியா சதியா
காலங்கள்.காத்துக் கொண்டுதானிருக்கின்றன
நம்.சத்தியங்களையும் சுமந்தபடி
----------------------------------------------------------------------

இது தேர்தல் காலம்
வீதிகளில்
சுவரொட்டி முகங்கள்
எழுதப்படாத வார்த்தைகளை
அழுத்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன சத்தியங்களாய்

--------------------------------------------------------------------------
குட்டித் தூக்கம் போடுகின்றேன்!
எட்டிப் பார்க்கின்றாய்
கொட்டாவி விடும் போதோ
எட்டடி பாய்கின்றாய்
பட்டப் பகலில் பேய் கண்டது போல்
------------------------------------------------------------

தனிமை
நினைவுகளை மொழி பெயர்க்கும் திரை
-------------------------------------------------------------

சிலரை புரிந்து கொள்ள
நொடிக் கணங்கள் போதும்
--------------------------------------------------------------

சூரியன் கூட அழகுதான்
அதனைத் தொடாத வரை
சந்திரன் கூட குளிர்மைதான்
அது தொலைவிலிருக்கும் வரை
எதிர்பார்ப்புக்கள்தான்
நம்மை ஏமாளிகளாக்குகின்றன
புரிந்தும் புரியாமலும் நாமோ
அலைந்து கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கைச் சக்கரத்தில்
------------------------------------------------------------

காற்று இன்னும் மூச்சோடு
பேசிக் கொண்டுதானிருக்கிறது
ஞாபகங்களை
அதனால்தானோ
என்னவோ
துயில்
இருள் குகைக்குள் நுழைய
மருள்கின்றதோ
-----------------------------------------------------------

தேர்தல்
------------
பொய்களை
மலிவு  விலையில் விற்கும்
சந்தை
----------------------------------------------------------

வெற்றி கண நேர சந்தோஷம்
தோல்வி
யுகம் தொடரும்
அனுபவம்


- Jancy Caffoor-

      25.08.2015

மேகம் பிழிந்து

மழை விரல்கள் தீண்டுகின்றன
மேனியோ
செல்லமாய் முறைத்தபடி
சிலிர்க்கின்றதே
.
நீர்த்துளிகளின் ஊர்கோலம்
உடைகின்றதா - பூமிப்
படையில் உருண்டு
குடைத் திரைகளும்
மருள்கின்றதே
.
மேகம் பிழிந்து
சாளரம் வழியே வீசும்
தூவானம்
குளிர் மாலையாய் என்னுள்
அழகு சேர்க்கும்
அதிசயம் சொல்லவா
.
அடடா
இருண்ட திரைக்குள்ளும்
ஓரு கவிதை
உருவாகின்றதே
சிறிதாய்


- Jancy Caffoor-

 

தேர்தல் தீர்ப்பு

நேற்றைய
வெற்றிக் கோஷங்கள்
இன்றைய
நிசப்தத்தின் அழகுக்குள்
.
தேர்தல் தீர்ப்புக்களின்
எழுதுகோல்கள்
வரைந்த சரிதமின்று
.
காலத்தின் புது
சரித்திரம்
ஜனநாயகத்தின் மந்திரம்
அதுவோ
மதவாதிகளின் தரித்திரம்

இனவாதத்தில் தீக்குளித்த சில
மதவாதிகளின்
மயானத்தில்
இனி
சுவடுகளாய்
அஹிம்சை பயணிக்கட்டும்

பிரதமரே
உங்கள்
பொறுமைக்குக் கிடைத்த வெற்றியில்
சிறப்பான நல்லாட்சி
பெருமை கொள்ளட்டும் மன
நிறைவோடு வாழ்த்துகின்றேன்



- Jancy Caffoor-

 

முகநூல்



"அலை அடிச்சா கரைக்கு வரணும் - அது
தரைக்கு வந்தா
மீண்டும் மண்ணை அள்ளிக் கொண்டு கடலுக்குப் போகணும்"
.

இந்த சுழற்சி மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்..
தேவைகள் ஏற்பட்டால் அது நிறைவேற ரொம்ப முயற்சிக்கிறோம். ஏனோ அவை நிறைவேறினாலும் மனதில் திருப்தி வருவதில்லை மாறாக எமது எதிர்பார்ப்பு இன்னும் விரிந்து சென்று வேறொரு தேவையைத் தொட்டு நிம்மதியின்மைக்குள் சுருண்டு கொள்கின்றது.
------------------------------------------------------------------------------------------------------

உருகும் பனியும்
திரவமாகும் வெப்பங் கண்டால்
உதிரும் சருகும்
எருவாகும் மண் பற்றிக் கொண்டால்
முயற்சியும் பயிற்சியுமிருந்தால்
உயர்ச்சியும் வாழ்விலுண்டாகும்.


- Jancy Caffoor-
     25.08.2015

சிறகுகள் வேணாம்


நம்மைச் சுற்றி புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கும் வரை
நாம் தனிமையுலகில் வாழும் அனாதைகள்தான்
-------------------------------------------------------------------------------------------

சிறகுகள் வேணாம்
சிறு கூடே போதுமெனக்கு
-------------------------------------------------------------------------------------------

தினமும் ஒர் சொட்டுக் கண்ணீர் சேமிக்கிறேன்
என் விழிக்கோப்பையில்
ஓர் நாள்
நான் அடையாளமற்றுப் போகும்போது
உலர்ந்து போன
என் இருப்பினைக் காட்டும் சுவடுகளாக
அவை இருக்குமென்பதால்
-----------------------------------------------------------------------------------------

அரசியல் எனக்கு பிடிக்காது, ஆனால்,,,
இப்போதெல்லாமே முகநூல் அரசியல் மேடை ஆகிற்று
தவிர்க்க முடியவில்லை தரிசித்து போகிறேன் சில சுவாரஸ்யங்களை
-----------------------------------------------------------------------------------------

வாழ்க்கை ஒர் சுவாரஸ்யமான கலை, ஏனென்றால் பல உணர்ச்சிகளின் உள்ளடக்கமே நாம்
அதனால்தானோ என்னவோ
ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற ஆர்வம், ஆசை, பதற்றம், எதிர்பார்ப்பு அதனை முடிக்கும் தறுவாயில் வருவதில்லை காரணம்
அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கின்ற அனுபவங்கள் நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , நிதானப்படுத்தி நம்மை முழுமையடையச் செய்கின்றன.
-------------------------------------------------------------------------------------------

ஆயிரம் பேருக்கு கூஜா தூக்குவதை விட ஒரு சிலருக்கு ராஜாவாக இருக்கலாம். அப்போதுதான் நம் நல்ல சிந்தனைகளுக்கு அங்கீகாரமும்
செயல் வடிவமும் கிடைக்கும்
------------------------------------------------------------------------------------------

சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டை பிடிக்கும்போது வெறுக்கும் மனசு, அவங்க நம்மை விட்டு பிரிய போறாங்க என்று உள் மனசு சொல்லும்போது மறைஞ்சிருந்த அந்த பாசம் கண்ணீராய் கரைய ஆரம்பிக்கிறது, பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம்தான் இழப்பின் வலி.
-------------------------------------------------------------------------------------------

தேர்தல் பரீட்சை முடிஞ்சாச்சு பாஸ் ஆனவங்க பார்ளிமெண்ட் போவாங்க
பெயில் ஆனவங்க அடுத்தவங்க கேலிப் பேச்சுக்குள்ள கொஞ்சக் காலம்
விழுவாங்க ஆனா பள்ளிக்கூட புள்ளைங்கட பரீட்சை இன்னும் முடியலியே

ம்.ம்.....

லீவு முடிஞ்சு நாளைக்கு மீண்டும் ஸ்கூல் பயணம். ஆரம்பிக்குது


- Jancy Caffoor-

     25.08.2015


”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா..!


வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் (www.jaffnamuslim.com) யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 02-06-212 அன்று, காலை 10 மணிக்கு, முஸ்லிம் மாதர் நிலையம், இல 201 டீ.ஆர்.விஜயவர்த்தனா மாவத்த, கொழும்பு 10 (Muslim Ladies Study Circle, No. 201, D. R. Wijewardena Mawatha,Colombo 10) என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், முஸ்லிம் மீடியா போரம், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவருமான என்.எம்.அமீன் தலைமை தாங்கவுள்ளார்.

பிரதம அதீதிகளாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமும், வணிகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீனும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறப்பு அதீதிகளாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர், மாவை சேனாதிராஜா எம்.பி. – செயலாளர் – இலங்கை தமிழரசு கட்சி, கே.ஏ. பாயிஸ் புத்தளம் நகர சபைத் தலைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கௌரவ அதீதிகளாக மௌலவி எம். முபாரக் – அதிபர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி, , எம்.எஸ். ஜலீல் – பணிப்பாளர் – யாழ் கல்வி அலுவலகம், சட்டத்தரணி எம்.எம். ரமீஸ் – பிரதிமேயர் – யாழ் மநகர சபை, மௌலவி எம்.பீ.எம். சுபியான் – யாழ் மாநகர சபை உறுப்பினர், டாக்டர் ஹிஜாஸ் – மஹரகம தேசிய வைத்தியசாலை, டாக்டர் ஏ.சீ.ஜனொஸ் சதாத் – அநுராதபுரம் தேசிய வைத்தியசாலை, எம்.எம். இமாம் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

விருதுபெறும் மூத்த இலக்கிய படைப்பாளிகள்
1. கவிமணி மௌலவி புஹாரி – காத்தான்குடி,
2. கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி – மாபோல,
3. ஏ.எல்.எம். சத்தார் – பாணந்துறை,
4. ரீ.எல். ஜவ்பர்கான் – காத்தான்குடி,
5. கவிஞர் ஜன்ஸி கபூர் – அநுராதபுரம்,
6. ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் – மூதூர்,
7. கவிமணி நீலா பாலன் – வெலிமடை,
8. ஏ.எம்.எம். அலி – கிண்ணியா,
9. நவாலியூர்க் கவிராயர் – யாழ்ப்பாணம்,
10. கலாபூஷனம் அப்துல் லத்தீப் – புத்தளம்,
11. கலாபூஷனம் கே.எம்.ஏ. அஸீஸ் – சாய்ந்தமருது

சிறப்பு விருதுபெறும் மூத்த படைப்பாளிகள்
1. கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம்
2. கலைவாதி கலீல்
3. முல்லை முஸ்ரிபா

முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ள, சிறப்பு பிரதியை சமூக சேவையாளர் எச்.எச்.எம். நியாஸ் பெற்றுக்கொள்வார். கிண்ணியா அமீர் அலி நிகழ்வுகளை தொகுத்தளிப்பதுடன், கவிஞர் யாழ் அஸீம் கவி வாழ்த்துரைப்பார்.


- Jancy Caffoor-
      25.08.2015

2015/04/04

அழகுக் குறிப்புக்கள்


எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை,சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, அதில் உள்ள வைட்டமின் சி, பிம்பிள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை குணப்படுத்தும். எனவே எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்தோ, அல்லது எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்தோ கழுவ வேண்டும்


ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம்
வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்
சூரியகாந்தி விதை

இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள்
காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம்
வெள்ளையாவதைக் காணலாம்.
எலுமிச்சை சாறு 

தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15  நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு
நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம்
பொலிவோடு காணப்படும்.
வாழைப்பழம்

வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

குளிர்ந்த பால்
குளிர்ந்த பால் கொண்டு தினமும் முகத்தை துடைத்து எடுத்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் காட்டனை பாலில் நனைத்து, அதனை கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறையும்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

மாம்பழம்
மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.
                                                    தேங்காய் தண்ணீரைக் கொண்டு 



தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.

தண்ணீர்
முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.

தக்காளி
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், தக்காளியை அரைத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் மறைந்துவிடும்

உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இப்படி தினமும் தவறாமல் செய்து வர கருவளையம் காணாமல் போகும்

ஆரஞ்சு பழம் 
தற்போது ஆரஞ்சு பழம் அதிகம் கிடைப்பதால்,அதன் சாற்றினை கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவி வந்தால் கருவளையம் மறைந்து, கண்கள் அழகாக காட்சியளிக்கும்
                    தர்பூசணி
தர்பூசணி சருமத்தை புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும், வறட்சியுடனும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள
கரும்புள்ளிகளை நீக்கும். எனவே இதன் சாற்றினை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வருவது, கோடையில் சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.
கற்றாழை
கற்றாழையில் இருக்கும் திரவம் உங்கள் சருமத்தில் இருக்கும் நச்சு கிருமிகளை கொல்கிறது, முக சுருக்கங்கள் மறைய உதவுகிறது மற்றும் சருமத்தில் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்துகிறது.

வேப்பிலை
இயற்கை நிவாரணத்தில் மிகவும் நல்ல தீர்வு அளிப்பது வேப்பிலை ஆகும். இது முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளையும் சரி செய்ய வெகுவாக உதவுகிறது. சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது  வேப்பிலை.

மஞ்சள்
மற்றுமொரு சிறந்த இயற்கை நிவாரணி மஞ்சள் ஆகும். இது, மாசு மரு, கருவளையம், கரும்புள்ளிகள் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்கிறது.
ரோஜா


முகத்தின் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதில் ரோஜா பெரியளவில் பங்கு
வகிக்கிறது. யங்கள் சருமம் பொலிவடைய ரோஜா இதழ்கள் நல்ல பயன் தரும்

குங்குமப்பூ
முகப்பொலிவு பெற குங்குமப்பூ மிக சிறந்த பொருள் ஆகும். இவை முகப்பருக்களை போக்குவதிலும் நல்ல வல்லமை கொண்டது. இது
உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கும் மற்றும் வலிமைடைய செய்யும்.

சந்தனம்
சந்தனம் குளிர்ச்சி உடையது. இது சரும அலற்சிகளுக்கு தீர்வளிக்கும், சருமத்தை மென்மையடைய செய்யும் மற்றும் சருமத்தின் வலிமையை அதிகரிக்கும்.
தயிர் 
பிம்பிளை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? அப்படியெனில் தயிர் மிகவும் சிறப்பான பொருள். இதனைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு இதனை
அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதோடு, முகத்தில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும்.
பூண்டு
பூண்டு கூட பிம்பிளைப் போக்கும். மேலும் பூண்டு உடலினுள் மட்டுமின்றி சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கும். அதற்கு ஒரு பூண்டு பல்லை எடுத்து தட்டியோ அல்லது சாறு எடுத்தோ, பிம்பிள் மீது வைத்தால்
பிம்பிள் உடனே நீங்கும்.

பெரும்பாலானோர் வெந்தயத்தின் பயன்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இது முடி உதிர்வை குறைத்து கூந்தல் நன்கு வளர உதவுவது மட்டும் இல்லாமல் பொடுகு பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவுகிறது.

கருஞ்சீரக விதை
கருஞ்சீரக விதைகளை நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதோடு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து பஞ்சின் மூலம் உச்சந்தலையில் தேய்த்து உபயோகப்படுத்தினால், பொடுகு தொல்லை முழுவதுமாகத் தீரும் மற்றும் தலைமுடி நன்கு  வளர தொடங்கும்.

 க்ரீன் டீ
 க்ரீன் டீ பேக்கை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த டீ பேக்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கருவளையம் மறைவதோடு, கண்களும் புத்துணர்ச்சி பெறும்.
ஆலிவ் ஆயில்
      ஆலிவ் ஆயிலில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகளான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை இளமையுடனும், ஆரோக்கியமாகவும்  வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி, ஆலிவ் ஆயில் சருமத்துளைகளை சுத்தம் செய்து, பிம்பிள் வருவதைத் தடுக்கும். எனவே தினமும் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வருவது
நல்லது.

வால்நட்ஸ்
வால்நட்ஸ் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பசையுடனும், ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். எனவே
இதனை உணவில் சேர்த்துக் கொள்வதுடன், அதனை அரைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

தேவாதாரு மர இலை
தேவாதாரு மர இலை (Cedar Tree)
தலை முடி நன்கு ஆயுள் பெற்று வளர தேவாதாரு மர இலைகள் நல்ல பயன் தருகிறது. தலையில் நன்கு முடி வளர தேவாதாரு மர இலைகள் ஊட்டம் அளிக்கின்றது. தேவாதாரு மர இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உபயோகப்படுத்துவதன் மூலம் உங்களது தலைமுடி நல்ல வலுவடையும்.

தைம் - மூலிகைச் செடி
தைம் மூலிகை செடியில் உயர்ரக இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த
மூலிகையை நீங்கள் உச்சந்தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறையும் மற்றும் உங்களது முடி நன்கு அடர்த்தியாய் வளர
உதவும்.


கொத்தமல்லி
தலை முடி வளர்வதற்கு கொத்தமல்லி ஒரு சிறந்த மூலப்பொருள் ஆகும். மல்லியை அரைத்து நீங்கள் தலைக்கு உபயோகிக்கும் எண்ணெயில் கலந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு வளர்வது மட்டுமின்றி முடியின் வேர்களுக்கும் ஊட்டம் அளிக்கும்
சேஜ் - மூலிகை இலை
இந்த மூலிகையின் நற்பண்புகள் சொட்டை வராமல் இருக்க உதவுகிறது. இதை உபயோகிப்பதன் மூலம் கூந்தலின் மயிர்கால்கள் வலுவடைவதால்
முடி உதிரும் பிரச்சனை குறையும். இந்த மூலிகையை நீங்கள் தலைக்கு குளிக்கும் போது உபயோகிக்கும் ஷாம்புவோடும் கலந்தும்
பயன்படுத்தலாம்

 தூக்கம் மிகவும் இன்றியமையாதது. இரவில் தாமதமாக தூங்கினாலோ அல்லது மிகவும் குறைவான அளவு தூக்கத்தை மேற்கொண்டாலோ கருவளையம் வரும். ஆகவே தினமும் 7-8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொள்ளுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்.


யோகா
மன அழுத்தத்தின் காரணமாக கருவளையம் வர வாய்ப்புள்ளது. எனவே தினமும் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா அல்லது தியானம் செய்து வந்தால், மனம் அமைதியாகி மெதுவாக கருவளையங்களும் மறைய ஆரம்பிக்கும்.

- Jancy Caffoor-
 


keyboard

 ௌ  ை  ா  ீ   ூ  ப   ஹ  க  த  ஜ
     q       w       e    r     t      y     u     i    o   p
--------------------------------------------------------
 ோ  ே   ்   ி   ு  ப    ர   க   த  ச ட 
   a      s       d     f     g    h     j    k    l     ;   ' 
--------------------------------------------------------
ெ        ம    ந   வ    ல    ஸ    ய   ொ 
  z    x     c      v     b     n       m       /      `
-------------------------------------------------------
 ஔ  ஐ  ஆ  ஈ  ஊ  ப  ங   க   த  ச  ட 
   Q    W    E    R   T    Y   U     I    O   P  {     }
-------------------------------------------------------
A     S    D      F     G     H    J     K   L   :    " 
ஓ   ஏ   அ     இ   உ    ப   ற    க   த  ச  ட 
--------------------------------------------------------
எ     ண   ன   ழ    ள      ஷ    ஸ்ரீ  ய   ஒ
Z   X  C    V     B     N      M<       >    ?     ~ 
-------------------------------------------------------

- Jancy Caffoor-

      03.04.2015


2015/03/21

மூன்றாவது இதயம்


நான் இலக்கிய உலகில் காலடியெடுத்து வைத்தபோது அறிமுகமானவர்தான் சகோதரர்  நாச்சியாதீவு பர்வீன்....எங்களுக்குள்   பத்து வருடங்களுக்கு மேலான  இலக்கிய நட்பு! நான் எழுத்துலகில் இருந்து விலக நினைக்கும் போதெல்லாம் என்னை  எழுதத் தூண்டிய எழுதுகோல்களுள் பர்வீனும் ஒருவர்!

யதார்த்தமான விடயங்களை  அழகாக, உணர்ச்சிபூர்வமாக வரிகளாக்கி அவற்றை நம்மிடையே  நகர்த்தி விடுவார் ரசிக்கும் விதமாக. அவரின் இன்னொரு இலக்கிய பிரசவிப்பான "மூன்றாம் இதயம்"  - கவிதை நூல் நாளை வௌியிடப்படவுள்ள  நிலையில் இம்மூன்றாம் இதயத்தின் உணர்ச்சிப் பிழம்புகளை தரிசிக்க நானும் ஆவலாக உள்ளேன். இன்ஷா அல்லாஹ். நாளை பத்து மணிக்கு சீரீசி மண்டபத்தில் சந்திக்கலாம். வாழ்த்துக்கள் நாச்சியாதீவு பர்வீன்!

- Jancy Caffoor-

      20.03.2015

பெண் விடுதலை



உடலில் மட்டுமல்ல. உள்ளத்தில் வார்த்தைகளால் காயப்படுத்துவதும்கூட
வன்முறைதான். எப்பொழுது எல்லா ஆண்கள் தம்மைச் சார்ந்த பெண்களைப் புரிந்தவர்களாக அவர்களின் உணர்வுளை மதித்து வாழ ஆரம்பிக்கின்றார்களோ அப்பொழுதுதான் பெண் விடுதலை ஆரம்பிக்கின்றது!


- Jancy Caffoor-

      20.03.2015

மனவரிகள்


நம் வலிகளை உறிஞ்சி - அவற்றை
புன்னகையாக மாற்றித் தரும் இதயம்
"அம்மா"
--------------------------------------------------------------
கோழி யுரித்துச் சிவக்கும்
உன் கைகளின் தழும்பாய்
எப்பொழுது மிருக்கட்டு மென் உதட்டுன் ஈரம்!
---------------------------------------------------------------
பொய்யோடு மோதும்
மெய்கூட
நோய் வந்து சாய்கையில்
மெய்யன்பு ஆரத்தழுவும்
தன் சேயாய்
----------------------------------------------------------------

நீ நீயாகவும்
நான் நானாகவும் இருந்தால்
நாம்
யாரோவாகப் போகின்றோம்
----------------------------------------------------------------

முகில்கள் தரை இறங்குகின்றனவோ
முகம் மூடும் வயல்களில்
மெல்லக் குட்டுகின்றன பனித்துளிகள்!
---------------------------------------------------------------

கிழக்கின் மையலில்
ஒளிரும் ஒளிப்பொட்டின்
அழகை
அம்பலப்படுத்தும் இரகஸியங்களோ
ஐதரசனும் ஈலியமும்!
---------------------------------------------------------------

பொங்கி வரும் அலைகள்
தாங்கி வரும் சிற்பத்தில்
பொறிக்கின்றேன் என்
உதடு சுமக்கும் சினமதை!
---------------------------------------------------------------

சுயநலமான இவ்வுலகில்
எல்லோர்மீதும் வெறுப்பாய் உள்ளது!


- Jancy Caffoor-
      20.03.2015




பெருமூச்சு

தும்புத் தோரணங்கள் - எங்கள்
குறுவீட்டின் சாளரங்கள்!

மூச்சைக் கோர்த்து விடும் காற்றில்
ஊஞ்சலாடும் தொட்டில்கள் அவை!

அவஸ்தைகள் தரவு மில்லை
எவர் குடியும் கெடுக்கவுமில்லை

சின்ன அலகு தேய்க்க
உணவும் கேட்கவில்லை

விரட்டுகின்றீர்கள் எங்கள் இல்லங்களை
அறுக்கின்றீர்!

நிழல் தர எமக்கு மரங்களுமில்லை
நிம்மதியான மடமுமில்லை

சிறகறுக்கும் உங்கள் முன் - எம்
உறவு  தொலைத்தோ டுகினறோம்!

இருந்தும்

எம் குரல்ளை நெரிக்கு முங்கள்
கரங்களில்
குருவிச் சப்தங்கள் அழைப்பொலிகளாக!


- Jancy Caffoor-
 
.

2015/02/27

மனசு



முருங்கை  இலை மென்று
சுருங்கி உறங்கி வளரும் மயிர்க்கொட்டியின்
கருமேனி  கண்டு
அருவருப்போடு பீதிசேர்த்து ஒதுங்கும் மனசு...
பறந்தோடும் வண்ணாத்தியி னழகில்
இறுமாந்து கிடக்கின்றது!


- Jancy Caffoor-
  27.02.2015

தொல்லை

தவழும் குழந்தைக்கு
கட்டுக்காவல் தொல்லை...

பருவ வயதில்
பருக்கள் தொல்லை....

வாலிபம் வந்தால்
காதல் தொல்லை.......

குடும்பஸ்தனுக்கோ
எடுக்கும் சம்பளம் தொல்லை...

வயோதிப மானால்
தள்ளாடும் தேகம் தொல்லை....

எல்லையில்லா தொல்லைகள்
இல்லாதவருண்டோ வாழ்வில்!



- Jancy Caffoor-
 

2015/02/26

இவர்கள்



வறுமை .....
இவர்கள் முகவரியா - சதை
மறுக்கும் தேகம் அறிவிக்கின்றதே!

பசி ......
இவர்கள் ஓலமா - அன்றேல்
நாசியோர  வலியின் பரிதவிப்பா!

நெஞ்சுக்கூட்டுக்குள் அஞ்சாமல்
யார் செருகினார்
எக்ஸ்ரேயின் இலவச அழைப்பிதழை!

பாலைவன குடைக்குள்
அடைக்கலம் தேடும் நிழல்களா
இவர்கள்!

பண ஆசியில் குவிந்திருக்கும்
வீண் பருக்கைகள்......
இவர்கள் உதரத்துக்குள்ளாவது
இருக்கை யாகி யிருக்கலாம்!

ஐயகோ.....

உணவின்றி உணர்விழக்கும் இவ்வுயிர்களுக்கு
தினமு மினி
துன்பம் துடைக்கும் கரங்கள்  யாதோ!


- Jancy Caffoor-
 

நானுமோர்


பாரதி கண்ட புதுமைப் பெண்
 
சாத்தான்கள் வேத மோத
சாத்திரங்களும் கோத்திரங்களும் போர்வை விரிக்க
கொத்தடிமைகளாய் பெண்டுகளை
கொத்திச் செல்லும் வல்லுாறுக்களுக்கு
சத்தமிட்டு கற்றுக் கொடுக்கும் நானும்
நித்திலம் சுமக்கும் புதுமைப் பெண்தான்!
.
களவாய் மேகங்கள் மறைத்தும்
உலா வரும் நிலவாய்....
பாறை மோதியும் பக்குவமாய் நௌிந்தோடும்
சிற்றாற்று நீராய்....
சளைக்க மாட்டேன் அற்பர்களை வேரறுக்க - நானும்
களையறுக்கும் புதுமைப் பெண்தான்!
.
எப்படியும் வாழ்ந்திடலாம் மாக்கள் - ஆனால்
இப்படித்தான் வாழ்க்கையென கோடு கிழித்து
தப்பில்லா வழி காட்டும் பாதைகளில்
அப்பிக் கிடக்கின்ற  மங்கையாய்
எப்பவும் தன்னம்பிக்கை சுமந்து வாழும் நானும்
இப்புவியின் புதுமைப் பெண்தான்!
.
அடுப்பங்கரை புகைக் கரியை
தடுப்புச் சுவராக்கி
தடுத்து வைக்கும் மூடர்களின் வலையறுத்து
விடுதலை பருகும் வீரப் பட்சி நானும்
நடுநிலை தவறா புதுமைப் பெண்தான்!
.
ஆணாதிக்க அகந்தைக்குள்
வன்முறை கோர்க்கும் கயவர்களை
கொன்றொழிக்கும் ஆயுதமாகவும்
நின்றடக்கும் அஹிம்சையுமாகவும் - சமுக
மன்றில் குரல்கொடுக்கும் நானுமோர்
பாரதி கண்ட புதுமைப்பெண்தான்!


- Jancy Caffoor-
 

2015/02/24

வாழ்வே மாயம்


வாழ்க்கை !

கடந்துபோன வாழ்க்கைய கிளறிப் பார்ப்பது  தப்புத்தான். ஏன் என்றால்  அதில்  நம் நிம்மதி கரைந்து  போன வடுக்கள் இருக்கும். அவை வலிக்கும். ஆனாலும் சில விசயங்கள நினைத்துப்  பார்க்கும் போதுதான் அது நம் வலிகளை  காய வைத்து  பக்குவப்படுத்தி எதிர்காலத்திற்கு தயார்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில இன்னைக்கு நான் நெனைக்கப் போறது என்னோட வாப்பாவ . அவர நெனைச்சு அவர்ட தெறமைகளை கண்டு நான் மலைச்சுப் போயிருக்கிறேன். என்னதான் தெரியாது அவருக்கு. ஓவியம், இலக்கியம் உட்பட எல்லா உபகரணத் திருத்த வேலைகளும்  அவர் பேசுற ஆங்கிலத்திற்கு நிகரே இல்ல. படித்தவர். அரசாங்க ஊழியர். எங்கள எல்லாம் படிக்க வச்சார். தன்னோட சம்பளத்துக்குள்ள  வட்டம் வரைஞ்சி  அதுக்குள்ள எங்களையும் உள்ளீர்த்துக் கொண்டார். அந்த உள்ளீர்ப்பு எங்க அம்மாட தெறமை அவருக்கேத்த வாழ்க்கை. அதுக்கு எங்களயும் பழக்கப்படுத்தி.

என்னோட சின்னக் கால வாழ்க்கய நெனைச்சா அவர்கிட்ட நெறைய அடி வாங்கியிருக்கிறேன். றோட்டுல விரட்டி விரட்டி செம்பரத்தை தடி பிய்ச்சி விளாசியிருக்கிறார்.  அப்படி அடிச்சு வார காயத்தில இருந்து ரெத்தம் வந்தா க கோபம் போனதும் அந்த கல்லுக்குள்ள கொஞ்சம் ஈரம் கசியும். மருந்து கட்டுவார். ஏதாவது தின்ன வாங்கி தருவார் அடிச்சதுக்கு இலஞ்சமா.

அவர் சிங்கம். தனிக்காட்டு ராஜா. யாருக்கும் கட்டுப்படாத அஞ்சா நெஞ்சன். ஆனால் அவரச் சூழ யாருமற்ற ஒரு மயானம் உருவாகியிருப்பதைக்கூட புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- Ms. Jancy Caffoor -
   24.02.2015

எழுத்தணிக்கலை



இஸ்லாமிய எழுத்தணிக்கலை
-----------------------------------------
அரபிமொழியானது இஸ்லாம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மக்களால் பேசப்பட்டு வந்தது. புனித இஸ்லாம் மார்க்கம் நபி(ஸல்) அவர்களால் அரபி மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புனித அல்குர்ஆனும் அரபி மொழியில் இறக்கப்பட்டது. இதனால் அரபுமொழியானது இஸ்லாமிய கலாச்சாரத்தில் மிக முக்கிய செல்வாக்கைப் பெற்றிருந்தது.

உமையா கிலாபத்தின் ஆட்சியாளர்களில் ஒருவரான கலீபா அப்துல் மலிக்கின் காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசங்களில் உத்தியோகபூர்வ மொழியாக அரபிமொழி மாற்றப்பட்டது. அக்காலத்தில் அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் தாய்மொழியாக அரபுமொழி காணப்படவில்லை. அக்கால இஸ்லாமிய உலகில் அரபுமொழிக்கு அடுத்தபடியாக பெருன்பான்மை மக்களால் பாரசீக மொழி பேசப்பட்டு வந்தது. இஸ்லாமிய உலகில் ஆரம்ப காலப்பகுதியில் எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆட்டுத்தோல்களிலும், ஒரு வகையான மரஇலைகளிலும் எழுத்துக்கலைகள் வரையப்பட்டு வந்தன.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காகிதத் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காகிதத் தாள்களில் இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் வரையப்பட்டன. இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்தமுறையில் வரைவதற்கு காகித்தாள்கள் பெரிதும் உதவிசெய்தது. அக்கால இஸ்லாமிய எழுத்தணிகளை வரைவதற்கு ‘கலம்’எனும் சாதானம் பயன்படுத்தப்பட்டது. அது கோரைப்புல் தாவரத்தால் உருவாக்கப் பட்டிருந்தது. ஆரம்பகால குர்ஆன் பெரியவையாகக் காணப்பட்டதுடன், அவை இஸ்லாமியக் கலைத்திறன்மிக்கதாகக் காணப்பட்டது. அதிலிருந்து இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்த ஓவிய முறையாக வளர்ச்சியடைந்தது.

நன்றி - தமிழ் விக்கிப்பீடியா

- Jancy Caffoor-
  24.02.2015

சித்திரமும் கைப்பழக்கமும்


ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு சித்திரம் வரைதல் மிக விருப்பமானதொன்று.

சித்திரம் என்பது மனதில் எழுதும் கருத்துக்களை ரேகைகளாக்கி அவற்றுக்கு நிறங்களைப் பயன்படுத்தி வௌிப்படுத்தும் வௌிப்பாடாகும், ரேகைகளை வரைதல், வடிவங்களை ஆக்குதல், நிறப் பயன்பாடு என்பன சித்திரம் வரைதலின் முக்கிய நிலைகளாகும்.

ஒருவர் தனது உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளுக்கு கருத்து வடிவம் கொடுக்கும்போது அது அவரின் அனுபவம், கலையார்வம், ஆற்றலின் பிரதிபலிப்பாக வௌிவருகின்றது.

ஆரம்ப காலங்களில் எண்ணங்களை வௌிப்படுத்த மட்டுமன்றி, செய்திகள், கண்டுபிடிப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தவும் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

- Jancy Caffoor-
  24.02.2015

மறை வழியில் கல்வி



கல்வியின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் அறிவே மனித வாழ்வை வழி நடத்திச் செல்லும் காட்டியாகும். இவ்வறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களின் பொன் வரிகள் சில -

'ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)

''நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' (அபூ த h வு த்  அஹ்மத்)

--------------------------------------------------------
குர்ஆன் என்னும் பெயர்

வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

-------------------------------------------------------
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ


- Jancy Caffoor-
  24.02.2015

பரீட்சைச் சுமை



இயற்கையோடு இணைந்து ஆரம்பக்கல்வியை அனுபவங்களாகப் பெற வேண்டிய பிள்ளைகளுக்கு பரீட்சைச் சுமையொன்று முதன்முதலாக ஐந்தாம் தரத்தில் புகுத்தப்படுகின்றது. பரீட்சை நெருங்கும்வரை ஒரே படிப்பு படிப்பு.......படிப்பு! பிள்ளைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய எல்லா இயல்புகளும் விளையாட்டுக்கள் உட்பட மறுக்கப்படுகின்றது. பெற்றோர்களும் தம்பிள்ளைகளின் ஐந்தரத்திற்கு கொடுக்கும் "அதி முக்கியத்துவத்தையும் கவனிப்பையும் ஏனைய வகுப்புக்கள் கற்கும் போது குறைத்து விடுகின்றார்கள்.

இப்பரீட்சை நிதியுதவி வழங்குவதற்காகவோ அல்லது பிரபல்யமான பாடசாலைகளுக்குச் செல்லவோ நடத்தப்படுகின்றது. பெரும்பாலும் பரீட்சையில் அதிகளவான சித்தி பெறுவது அரச ஊழியர்களின் அல்லது வசதி படைத்த பெற்றோர்களின் பிள்ளைகளே இவர்களுக்கு பிரபல்ய பாடசாலைகள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் அரிதாக வறுமையோடு போராடிக் கொண்டு சித்தி பெற்ற மாணவர்கள் இந் நிதியால் பயனடைவதும் மறுப்பதிற்கில்லை. எப்படியோ இவ் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பாக அரச மட்டத்தில் அடிக்கடி வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் இப்பரீட்சை 2016ம் ஆண்டிலிருந்து நடாத்தப்படாதென இன்று (19.12.2013) அறிவித்துள்ளார்.

- Jancy Caffoor-
  24.02.2015

ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778)


கல்வியென்பது பல தத்துவங்களினடிப்படையில் முன்வைக்கப்படும் ஒரு ஒப்பந்தம். கல்வி பற்றிய சிந்தனைப்படுத்தலில் முக்கியமான ஒருவராக ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778) போற்றப்படுகின்றார். இவர் தலைசிறந்த இயற்கை வாதியாகவும் சிந்தனைப் புரட்சியாளராகவும் விளங்கியவர் என்றும் விளங்கிக் கொண்டிருப்பவர்.

பிள்ளைகளின் சூழலில் பாதிதான் பாடசாலையில் கழிகின்றது. மிகுதி வீட்டில்தான். பெற்றோர் பிள்ளை பற்றிய உளவியலை அறியாதவர்களாக இருக்கும்போது பிள்ளையின் இயல்பான கற்றலை விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள்.

இதோ ரூஸோவின் சில கருத்துக்கள்

பிள்ளைகள் இயற்கையின் போக்கில் வளர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் இயற்கையோடு இணைந்து இயற்கையின் நியதிகளின் படி வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை விட கல்வி பெறுவதற்கான நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்காக பிள்ளைகளிடம் பிரச்சினைகளைக் கூறுங்கள் அவர்களே அதற்கான தீர்வுகளைக் காணட்டும் என்றார்.

பிள்ளை வேறு, வளந்தோர் வேறு என்று விளக்கிய ரூஸோ இயற்கை சூழல், மனிதர்கள், பொருட்கள் போன்ற மூன்று ஊடகங்களினூடாகவும் பிள்ளைகள் கல்வியைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளை தானாகவே கற்றல் - கற்பித்தலின்போது கற்றல் சாதனங்களினைப் பயன்படுத்தி பெறும் அனுபவம்சார் கல்விக்கு வலியுறுத்தும் ரூஸோவின் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் பாடசாலைகளில் பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு மற்றும் திறமைக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது எனலாம்.

- Jancy Caffoor-
  24.02.2015

நிஜத்தின் நிழல்கள்


கல்வியைத் தேடுபவனாலேயே வாழ்க்கையையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. கற்ற கல்வியின் அளவீடுதான் பரீட்சை. பரீட்சை எனும் போது வயது பேதமின்றி எல்லோருக்கும் ஒரு பயம், முயற்சி, டென்ஷன் வருவது இயல்பு. அதிக சிரத்தையுடன்  கல்வியைக் கற்பவன் உயர்புள்ளிகளைப் பெறுவதில் தவறுவதில்லை.

ஆனால் 

பெரும்பாலான மாணவர்கள் எவ்விதமான முன்னாயத்தமுமின்றி திறமையான மாணவர்களிடம் காப்பியடிக்க தயாரானவர்களாகவும், வெற்றுப் பேப்பர்களை ஒப்படைக்கத் தயாரானவர்களாகவும் பரீட்சைக்கு செல்வதைப் பார்த்து வேதனை கலந்த வெட்கம்.

இவர்கள் கல்வியைப் பற்றி உணர ஆரம்பிக்கும்போது கல்வி  இவர்களை விட்டு விலகிப் போயிருக்கும் என்பது மட்டும் உண்மை!
-----------------------------------------

பாடசாலை வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அதன் இனிமையை உணர்வது பாடசாலையை விட்டு விலகிச் செல்லும்போதுதான்.
மீட்கப்படும் ஞாபகங்கள் சில நேரம் சந்தோசத்திலும், சில நேரம் ஏக்கத்திலும் சில நேரம் கண்ணீரும் கலைந்து நிற்கும். ஏனெனில் பள்ளி வரும் தொட்டு நிற்கும் நட்பு அப்படிப்பட்டது....
-------------------------------------------
பாடசாலை என்பது ஒழுக்கமுள்ள சமுதாயத்தின் தோற்றுவாய்க்கான தளம். சகல பாடசாலைகளும் இதனைத்தான் கல்வி இலக்காகக் கொண்டு தமது செயற்பாடுகளை வகுக்கின்றன. ஆனால் துரதிஷ்டமாக சில ஒட்டைகள் விழுந்து விழுமியம் தளர்ந்த முரண்பாட்டுக் கூட்டங்களும் வௌியேறி விடுகின்றன. பாடசாலை வௌி மதில்கள் அழகாக பெயின்ட் பூசப்பட்டிருக்கும்போது அவற்றில் தமது பெயர்களையோ ஏதாவது செய்திகளையோ கிறுக்கி விட்டுச் செல்வது இந்தக் கூட்டம்தான். விளம்பரம் ஒட்டாதீர்கள் எனும் அறிவித்தல்களைக் கூடப் புறக்கணிப்பவர்களாக இவர்கள்.
-------------------------------------------
பாடசாலை என்பது அங்கு கற்கும் அனைத்து மாணவர்களும் பாதுகாக்க வேண்டிய நிறுவனம். அதன் வளங்கள் அவர்களின் கற்றலுக்காக பயன்படுத்தப்படும் சொத்து. ஆனால் சில மாணவர்கள் வளர்ந்த மாணவர்கள் பாதுகாக்க வேண்டிய இச்சொத்துக்களை சேதப்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விளையாடும்போது யன்னல் கண்ணாடிகளை உடைப்பது, கதிரை, மேசைகளில் டிபெக்ஸால் கீறி நாசப்படுத்துவது, பெயின்ட் அடித்த சுவரில் தமது கால்களை உதைத்து அசுத்தப்படுத்துவது, கதிரை, மேசைகளை உடைப்பது இவையெல்லாம் ஆண் மாணவர்களிற் சிலர் செய்யும் சாதனைகள்.
-------------------------------------------

ஒரு பாடசாலையின் வளர்ச்சியின் தூண்கள் அதன் ஆசிரியர்கள்தான். இளைய ஆசிரியர்களிடம் வேகம் காணப்பட்டாலும் கூட அனுபவம் காணப்படுவது அதிக சேவைக்காலத்தைக் கொண்ட ஆசிரியர்களிடம். ஆனால் துரதிஷ்டவசமாக சேவைமூப்புக் கொண்ட ஆசிரியர்கள் பொதுவாக பாடசாலைகளிலிருந்து ஓரங்கட்டப்படுவது நடைமுறையாகக் காணப்படுகின்றது. இளைய ஆசிரியர் சமுதாயத்தின் கைகளில் பொறுப்புக்கள் வழங்கப்படுவது நல்ல விடயமே இருப்பினும் முதியவர்களை அலட்சியப்படுத்தி வழங்கப்படும் மலர்மாலைகள் சற்று சிந்திக்கத்தக்கது.
------------------------------------------

சமூகத்தினுள் நுழையும் ஓர் பிரஜையை நற்பண்புள்ளவனாக மாற்றும் பணியில், இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு கல்வி வழங்கும் பணியை பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் பெற்றோர், சமூகத்தினர் ஒத்துழைப்பின்றி பாடசாலைகள் தனித்து இக்குறிக்கோளை நிறைவேற்ற முடியாது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பெற்றோர் கொடுக்கும் ஊக்கம், அவர்கள் வகுப்பேற ஏற குறைந்து கொண்டே செல்கின்றது. மாணவர்களை வெறுமனே பாடசாலைக்கு அனுப்பாது அவர்கள் எந்தளவில் கற்றலில் ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்பதை கண்காணித்து வழிகாட்டும் பெற்றோர்களின் பிள்ளைகளே கரிசனத்துடன் கற்க ஆரம்பிக்கின்றார்கள்.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்கும் ஆர்வம், ஊக்கத்தை மேற்பார்வை செய்து வழிகாட்டுவது கடமையாகும்.

- Jancy Caffoor-
  24.02.2015




குறும்பு - பாடசாலை நினைவு


நான் ஏ.எல். படிக்கிற நேரம் (12ம் வகுப்பு)
--------------------------------------
இடம்-  யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி
வகுப்பு - கல்வி பொது தராதர உயர் தரம் விஞ்ஞானம் 

ஒரு நாள் Zoology Teacher வகுப்புக்கு வந்தார். அவர்  எப்பவும் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார்.   கண்டிப்பான ரீச்சர்.

 ஆனால் நோட்ஸ் நிறையத் தருவதால் ரியூசன் கிளாஸ் போகின்ற  சில பேருக்கு அம் மிஸ்ஸின் பாடத்தை மிஸ் பண்ணத்தான் ஆசை. பயத்தில அரை குறையாக எழுவதைப்போல பாவனை செய்வார்கள். ஆனால் ரியூசன் வாசலை மிதிக்காத என்னப் போல சில பேரின் வற்புறுத்தலில் மிஸ் நிறைய நோட்ஸ் தருவார் .

இப்படியான மனநிலையில், ஒரு நாள் ஒரு குறித்த சப்ஜெக்ட்ல  மிஸ் மந்திலி எக்ஸாம் (மாத அலகுப் பரீட்சை)  தந்தார். நாங்களும் விடை எழுதிக் கொடுத்தோம். மறுநாள் எங்க விடைப் பேப்பரைத் திருத்திய மிஸ்ஸூக்கு மூக்குமேல கோபம் வந்திட்டுது.

உடனே வகுப்புக்கு வந்தார். சிலபேரின் பெயரை வாசித்து எக்ஸாம் கொப்பியை அவர்கள் மூஞ்ஜில வீசிட்டார்.

"ஸ்கூல்ல தார எக்ஸாமுக்கு நான் தார நோட்ஸ படிச்சிட்டுத்தான் விடை எழுதணுமே தவிர, ரியூசன் நோட்ஸ இங்க கொண்டு வந்து விடையா எழுதக்கூடாதுண்ணு எத்தனை தடவை சொன்னேன். "

மிஸ் சத்தம் போட்டாங்க. நாங்க கப்சிப்.

அப்படி எழுதின அத்தனை பேருக்கும் முட்டை மாக்ஸ்தான் (பூச்சியம்) கிடைத்தது. அசடு வழிய உட்கார்ந்திருந்த நண்பிகளை அனுதாபத்துடன் பார்க்கத்தான் முடிந்தது.

இப்ப அந்த ரீச்சர் இருக்கிறாவோ தெரியல. ஆனால். மனசுககுள்ள அந்த முகம் இன்னும் இறுக்கமா படிந்திருக்குது.


- Jancy Caffoor-
    24.02.2015

பிரியாவிடை ஓ . எல். 13


டிசம்பர் 2 - 2013
-------------------
பாடசாலைப் பருவம் என்பது துன்பம் துறந்து, சிறகு விரித்துப் பறக்கும் பருவம். பொதுப்பரீட்சைகள் தடையும் பிரிவும் விதிக்கும் வரை நட்பின் வலி யறியாப்பருவம்.

எம் பாடசாலையின் தரம் 11 மாணவர்களுக்கும் இது பொருந்தும். இன்னும் கா. பொ. த சா/த பரீட்சைக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், பரீட்சை பற்றிய எதிர்பார்ப்பும் பயமும் ஒரு புறமிருக்க.....பல வருடங்களாக பின்தொடர்ந்த நண்பர்களைப் பிரியும் பிரிவு வலி மறுபுறம் நெருக்க வேதனையுடன் பிரியாவிடைக்கு தயாராகி விட்டனர் அம் மாணவச் செல்வங்கள்.

இரண்டு வருடங்களாக இவர்களுக்கு விஞ்ஞானப் பாடம் எடுக்கின்றேன். நான் கண்டிப்புக் காட்டும் நேரத்தில் கூட அவர்கள் என்னை ஒருபோதும் வெறுத்ததில்லை. தங்கள் குடும்பத்தில் என்னையும் ஓர் அங்கத்தவராய் கருதி புன்னகையும் அன்பையும் சிதறும் இம் மாணவர்களின் பிரியாவிடைக்கும் பாடசாலையில் நாள் குறித்தாகி விட்டது.

ஓ.எல். விடுதி மாணவர்களின் பிரியாவிடை அழைப்பிதழை இன்று என் கையேந்தியபோது கண்கள் லேசாய் பனித்தன. மனசும்தான்.

அவ் அழைப்பிதழில் காணப்பட்ட பின்வரும் வரிகள் மனதைத் தொட்டுச் சொல்ல.

எதிர்வரும் பரீட்சையில் சிறப்பாக சித்தி பெற இறைவனைப் பிரார்த்தித்தேன். எல்லோரும் பிரார்த்திப்போம்!

"ஏர் பிடிக்க இருந்தோம்
எழுத்தறிவித்தாய்....
எட்டி முயற்சித்தோம்
ஏணியானாய்....
பிரிந்து செல்கின்றோம்
என்செய்வாய்?
பணிந்து சொல்கிறோம்
நீ சிறப்பாய்!"


- Jancy Caffoor-
  24.02.2015

அ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்


சமபோஷா கால்ப்பந்தாட்ட சாம்பியன் அணி - 2014
15 வயதுக்கு கீழ்பட்ட ஸாஹிரா மாணவர் கால்ப்பந்தாட்ட அணியினர் அ/மத்திய கல்லூரி, சென் ஜோசப் கல்லூரி போன்ற பிரபல்ய பாடசாலை மாணவ அணியினர்களை வெற்றியீட்டி இன்று (23.10.2014) சாம்பியன் பட்டத்தை தமதாக்கினார்கள். 
இவர்களின் வெற்றிக்குழைத்த பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் இம்மாணவர்களுக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்

பாராட்டுக்கள் இவர்களுக்கு
---------------------------------------------

Australian National Chemistry Quiz - 2014
-------------------------------------------------------
மேற்படி போட்டியில் அ/ ஸாஹிரா  மகா  வித்தியாலய  மாணவர்களும் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளார்கள். அவர்களையும்,  அவர்களை  வழிப்படுத்திய ரமீஹா ஆசிரியையும் பாராட்டுவோம்

மாணவர்கள் விபரம்
-----------------------------
தரம் 11 (2014)
-----------------------------
1. M. Shalik - High Distinction
2. I. Hafeel - Credit
3. A. Waseema - Participation
4. N. Fayaza - Participation

க.பொ.த உ/த
--------------------
1.A. Ayisha   - Distinction
2. M. Rasna  - Distinction
3. S. Rinoosa  -  Credit
4. T. Simaya   -   Credit
5. A. Fazna  - Participation
6. F. Faseeha  - Participation
7. H. Thansila banu - Participation
8. N. Niroskhan  - Participation
9. R. Rozana - Participation
10. S. Sameema - Participation
11. T. Hisafa - Participation
---------------------------------------------------------------------

வலய மட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் தரம் 7 சீ மாணவன் M.U.M. பாலிஹ் மாகாண மட்டத்திற்குச்செல்லும் வாய்ப்பைப்பெற்றுள்ளார். இவரை நாமும் வாழ்த்துவோம்

---------------------------------------------------------------------

அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அவர்கள் விபரம் -

1.. M.F.Aadhil Ahamed...............  ( marks 182)
2. .M.V.Sameeha......................... .......... (177)
3..M.M.M. Akeel............................. .........(172)
4..N.Ashfan Ahamed...................... .........(167)
5..A.A.H.Nisha .........................................(165)
6.. N.Aysha.............................................. (162)
7..M.R.F.Salha......................................... (159)
8..S.H.Hafri ..............................................(158)
9..A.H.F.Rasheeka.................................. (158)
10..A.S.Shahama...................................... (158)
11..T.F.Sahara............................... ...........(156)

-------------------------------------------------------------------------------
 க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறுகளில் (2013 டிசம்பர்) அதிக கூடிய பெறுபேறுகளைப் பெற்ற அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவிகள் விபரம் -

C.M.Fathima Risla - 9 A
s. Fathima Sashna - 8A, 1 B
M.S. Fathima Aasra - 8A , 1 C
M.R.Hasheena - 8A , 1 C

-------------------------------------------------------------
சமூகக்கல்வி வினா- விடைப் போட்டி வருடாவருடம் நடத்தப்படும் போதெல்லாம் கோட்ட மற்றும் மாகாண மட்டங்களில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர்.


- Jancy Caffoor-
  24.02.2015



2015/02/22

கோணப்புளி


யுத்தம் சத்தமில்லாமல் பலரின் ஆதாரங்ளைப் பிடுங்கியது.
பறந்து போன இந்தப் பல வருடத்தில்  சிலர் வசதி வாய்ப்புக்களுடன் வேரூன்ற இன்னும்  பலர் அகதிகளாய் நிர்க்கதிக்குள்ளாகி  அலைய காலம் எப்படியோ கழிந்து  கொண்டிருக்கின்றது.

இதில் நாங்கள் இரண்டாவது வர்க்கம். யாழ் நகரில் எம் பிறப்பிடம் வனாந்தரமாகி காய்ந்து கிடக்க, நாங்களோ இன்னும் பேரம் பேசும்  உலகில் இருப்பிடங்களை  மாற்றிக் கொண்டிருக்கின்றோம் நிரந்தர முகவரியில்லாமல்.

சரி விசயத்திற்கு வருகின்றேன்.

யுத்த காலத்தில்கூட   சன்னம் துளைக்காத எங்கள் வீடு சில எம்மினத் துரோகிகளால்  தன் சுவர்களையும்  கட்டடங்ளையும் இழந்து வனாந்தரமானது. மரங்களின் சுய ஆட்சியின் விஸ்வரூபமாய் ஓர் கோணப்புளிய மரமும்  கிணற்றுக்கு அருகிலுள்ள முற்றத்தை குத்தகை  எடுத்ததை நாங்கள்  அறிந்துகொண்டோம்.


யுத்தம் ஓய்ந்து சமாதான காலத்தில் வெறிச்சோடிப் போன எங்கள் வீட்டைப் பார்க்கப் போன போது  மரத்தை அயலாளர் அறிமுகப்படுத்தினார்கள். கிணற்றைச் சுற்றி  பசுமையாய் கிளைகள்  விட்டிருந்தது மரம்... அடி தண்டுப் பகுதிகள் முட்களற்றும், மேல்க் கிளைகள்  கொழுக்கி போன்ற வளைந்த முட்களையும் தனக்குள் நிரப்பி வைத்திருந்தன.

வளவை துப்பரவு செய்யும் முயற்சியில் இறங்கினோம். காடாகிப் போன வீட்டைத் துப்பரவு  செய்ய  பல ஆயிரங்கள் கூலிக்காரர்களுக்குள் இடமாறின. கிளைகளில் பசுமையும்  சிவப்புமாக சுருள்களாய்   தொங்கிக்  கிடந்த சீனிப் புளியங்காய்களுக்காக அம்மரத்தை  வெட்ட  அயலாளர் விடவில்லை.


"கோணப்புளியை  எங்க வீட்டுப் புள்ளங்க ரொம்ப  ஆசயாச் சாப்பிடுவாங்க,வெட்டாதீங்க. எங்களுக்காக அந்த மரத்தை விட்டுட்டு போங்க"  ஒரு அறிந்தவர் கெஞ்சினார்.
நாங்களும் மறுக்கவில்லை.  மரம் இன்னும் உயரமானது.

காலவோட்டத்தில் அம்மரத்தையே மறந்து விட்டோம்.

மூன்று வருடங்கள் மெல்லக் கரைந்து போனது....

அண்மையில் ஒரு கைபேசி அ ழைப்பு ........

அறிமுகமில்லாத  இலக்கம்...

"ஹலோ"  - இது நான்..

மறுமுனை தன்னை  அடையாளப்படுத்தியது. பட் பட் வார்த்தைகள் வெடித்தன. அது வேற யாருமில்ல! அதே அயலவர்தான்!

"மரத்துல மசுக்குட்டிகள் தொங்குது. உடனே  வெட்டுங்க ...."

மிரட்டல், விரட்டல்  கலந்த முறைப்பாடுகள் !

எங்கள் அனுமதியின்றி  இயற்கை  வளர்த்த  மரம். இத்தனை வருடங்களும்  அதன்  பலனை  அனுப்பவித்தவர்கள்  அயலாளர்.

இன்றோ

ஒரு தீமையைக் கண்டதும்  வீட்டுக்காரங்களுக்கு  அது  சொந்தம்!

கூலிகள் வைத்து மரத்தை வெட்ட  ஐயாயிரம் ரூபா பணம் அனுப்புவதாக அந்த அயலாளருக்கு உறுதியளித்துவிட்டு பெருமூச்சொன்றை மெல்லிழுத்தேன்..

எனக்கு  கொறக்காய்ப் புளி  தெரியும். இதன்   தாவரவியற் பெயர் Manilla tamarind இதுல என்ன  பகிடியென்றால் இதுதான் கோணப்புளி   என்று தெரியல . ஒரு
காய்கூட வாய்க்குள்ள வைக்கல. அதன் ருசி தெரியல. ஆனால்  சுளையா   ஐயாயிரம் ரூபா இந்த  மாசச்  சம்பளத்தில  மரத்த  வெட்ட  அங்க பறந்து போறதுதான்  கவலை!


-Jancy Caffoor-
22.02.2015