About Me

2015/03/21

பெருமூச்சு

தும்புத் தோரணங்கள் - எங்கள்
குறுவீட்டின் சாளரங்கள்!

மூச்சைக் கோர்த்து விடும் காற்றில்
ஊஞ்சலாடும் தொட்டில்கள் அவை!

அவஸ்தைகள் தரவு மில்லை
எவர் குடியும் கெடுக்கவுமில்லை

சின்ன அலகு தேய்க்க
உணவும் கேட்கவில்லை

விரட்டுகின்றீர்கள் எங்கள் இல்லங்களை
அறுக்கின்றீர்!

நிழல் தர எமக்கு மரங்களுமில்லை
நிம்மதியான மடமுமில்லை

சிறகறுக்கும் உங்கள் முன் - எம்
உறவு  தொலைத்தோ டுகினறோம்!

இருந்தும்

எம் குரல்ளை நெரிக்கு முங்கள்
கரங்களில்
குருவிச் சப்தங்கள் அழைப்பொலிகளாக!


- Jancy Caffoor-
 
.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!